Tuesday, July 03, 2007

ஒத்தை ஆள் ஓட்டப்பந்தயம் - பவானந்தி

‘அதோ வர்றார்’ ‘இதோ வர்றார்’ என்று இவர்களும், ‘நான் எப்ப வருவேன்; எப்படி வருவேனெல்லாம் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்தக்கு கரெக்டா வருவேன்னு’ அவரும் அள்ளி விட்டுக்கிட்டு இருக்க, ‘அப்போ வரும், இப்போ வரும்’-ன்னு இழுத்துக்கிட்டு இருந்த படமும் வரப்போகுதாம்.அடாடாடா! இந்தப் பத்திரிகைகாரனுங்களுக்குப் பொறுக்க முடியலைப்பா!
சிவாஜி மொட்டை போட்டிருக்காரு.... சிவாஜி கொட்டை போட்டிருக்காரு... சிவாஜி-ல 6 பாட்டு, 7 பைட்டு (அடப் பண்ணாடைங்களா, எல்லா எழவு படத்திலயும் ‘அது தாண்டா இருக்கு’) 72 குட்டிகளோட வெளிநாட்டுல டான்ஸ்-ன்னு தினம் தினம் செய்தி. சந்திரமுகி படத்தில வந்த லாபத்தில நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்துக்கு உதவுற நோக்கில அஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ச்சு கோடி ரூபாய் கொடுத்துட்டு, ஏதோ தனக்காக வெறும் 23 கோடி மட்டும் தான் எடுத்துக்கிட்டாருன்னு சேதி வருது. பாபா-வுல ஏற்பட்ட பயத்தில தான் சிவாஜி குடும்பத்தின் பெயரில படம் பண்ணா, பிரச்சனை இருக்காதுன்னு முடிவு செஞ்சு செய்ததுதான் ‘சந்திரமுகி’ங்கிறது ஊரறிஞ்ச ரகசியம். அதிலயும் பிரச்சினை வந்துடக் கூடாதுங்கிறதுக்காகத் தான், சிவாஜி குடும்பத்துக்கு உதவுற நோக்கத்தில பண்ணதுன்னு ஒரு செய்தியப் பரப்புனதே! (ஏதோ சிவாஜி புள்ளைங்களை தவிக்கவிட்டுப்போனது மாதிரியும், இவரு தூக்கி நிறுத்தினது மாதிரியும் ஒரு பில்டப்) அவரு உதவுனது எப்படின்னு பிரிச்ச லாபத்திலயே தெரியுதே!.
அதே மாதிரி சரிஞ்சு போன ஏ.வி.எம்.-மைத் தூக்கி நிறுத்தத்தான்னு இந்தப் படத்துல நடிக்கிறார்னு சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது.
படம் 150 கோடிக்கு வித்திருக்கு... 200 கோடிக்கு வித்திருக்கு... 600 பிரிண்ட் போட்டிக்கு... ஜேம்ஸ்பாண்ட் படத்தை விட அதிகமா மொத்தம் 4,500 தியேட்டரில ஓடப்போகுது... தலைவரின் உலக சாதனை.அப்படின்னு தெருக்கோடில நின்னு செ.கு.செ. அனுப்பிச்சிட்டிருக்கான் நம்ம பய. கோடியில புரள்ற இவுங்க படத்தை வித்துட்டு பக்காவா இருக்க, இந்தப் பத்திகைக்-காரனுக பக்கம் பக்கமா செய்தி போட்டு பரப்பரப்புன்றானுங்க.மோர் அபிஷேகம், பால் அபிஷேகம், பீர் அபிஷேகம், டிக்கெட் வாங்கப் பெரிய கியூ. இதுக்கெல்லாம் எட்டுக் காலத்துக்கு செய்தி! ‘சிவாஜி’ டிக்கெட் வாங்கி சாதனை செஞ்சவங்க டிக்கெட்டோட போஸ் கொடுக்கிற மாதிரி போட்டோ கால் பக்கத்துக்குன்னு ஒரே அலப்பறையைக் குடுக்கறானுங்க.படத்தைப்பத்தி ரகசியத்தை வெளியிட்டுட்டாராம் ரஜினி. படம் ‘கருப்புப் பணத்தை ஒழிக்கிறது பத்தியாம்’. ‘யப்பா... வாயால சிரிக்க முடியலப்பா....’ கருப்புப் பணத்தைப் பத்தி யார் பேசுறது.. ரஜினியும், ஷங்ரும், ஏ.வி.எம்.முமா?
அப்படின்னா சங்கராச்சாரி ஒழுக்க வாழ்வைப் பத்தியும், ஜார்ஜ் புஷ் கம்யூனிசத்தைப் பத்தியும், ஆர்.எஸ்.எஸ். அகிம்சையப் பத்தியும் பேசினாலும் நம்ம கேக்கத்தான் வேணுமா? அடப்பாவிங்களா.சரி, படம் இத்தனை கோடி, அத்தனை கோடிங்கிறாங்களே, வருமான வரித்துறையென்ன வரிசையிலயா நிக்குது டிக்கெட் வாங்க?
கோடம்பாக்கத்தில மத்த படத்தோட நிமையையெல்லாம் என்னன்னு பார்த்தா, நல்ல தியேட்டர்களை இவங்க மொத்தமா எடுத்தக்கிட, வேற தியேட்டர் கிடைக்காம, எடுத்த படமெல்லாம் பெட்டியில தூங்குது. இந்தா விடுறேன், அந்தா விடுறேன்னு புதுப்படங்களை மிரட்டி 2 மாசமா வேற படத்தையே வரவிடாமப் பண்ணதில, வட்டிக்கு வாங்கி படம் பண்ணவனெல்லாம் பொட்டிய வச்சுகிட்டு புலம்பியபடி நிக்கறாங்க.
அப்படியும் யாராவது பெரிய படத்தை ரிலீஸ் பண்ணப்போனா ‘சிவாஜி’ சமயத்தில விட்டா மத்த படம் ஓடாதுன்னு அல்லக்கை பத்திரிகைகளை எழுதவச்சு நிறுத்திப்புட்டாங்க.கூட ஓடுறவனையெல்லாம் தடுத்து நிறுத்தி ஓரங்கட்டிப்புட்டு, ஒத்தை ஆளா பந்தயத்தில ஓடி, ‘நான் ஜெயிச்சுட்டேன், நான் ஜெயிச்சுட்டேன். என்னைய அடிக்க எவனுமில்லை’ன்னு கத்துற ‘இந்தப் பொழப்புக்கு......’ வேணாம்வுடுங்க!

நன்றி: 1.உண்மை - மாதமிருமுறை இதழ்
2.மூட நம்பிகையை வளர்க்கும் சந்திரமுகி -உண்மை

No comments: