

கஷ்டப்படும் சிவாஜி குடும்பத்திற்கு கை கொடுக்கும் முகமாகத்தான் இந்த உதவியை ரஜினி செய்கிறார் என்ற கருத்தும் காற்று வாக்கில் கலந்துவிடப்பட்டது. ஆனால் இத்தனை செய்திகளுக்கும் பின்னணியில் இருப்பது, ‘பாபா’ படம் கண்ட மாபெரும் தோல்வி மற்றும் எதிர்ப்பு என்பதை மக்களும் உணராமல் இல்லை.
தன் சொந்த பேனரில் படத்தைத் தயாரித்தால் படத்திற்கு எதிர்ப்புக் கிளம்புமோ என்ற எண்ணம் தான், சிவாஜி குடும்பத் தயாரிப்பு என்னும் பெயரில் படம் செய்யக் காரணம். அதுவும் ‘கஷ்டப்படும்’ சிவாஜி குடும்பம் என்ற அடைமொழியையும் கொடுத்து பரிதாப உணர்ச்சியை பாதுகாப்புக் கவசமாக்கிக் கொண்டு விட்டதாகவும் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.
தன் சொந்த பேனரில் படத்தைத் தயாரித்தால் படத்திற்கு எதிர்ப்புக் கிளம்புமோ என்ற எண்ணம் தான், சிவாஜி குடும்பத் தயாரிப்பு என்னும் பெயரில் படம் செய்யக் காரணம். அதுவும் ‘கஷ்டப்படும்’ சிவாஜி குடும்பம் என்ற அடைமொழியையும் கொடுத்து பரிதாப உணர்ச்சியை பாதுகாப்புக் கவசமாக்கிக் கொண்டு விட்டதாகவும் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.


வேட்டையன் ராஜா, தன் ஆசை நாயகியாக வைத்துக்கொள்ள விரும்பிய ஆடற் கலை நாயகிதான் சந்திரமுகி. சந்திரமுகியோ மற்றொரு ஆடற் கலைஞன் குணசேகரனை விரும்புவது தெரிந்த வேட்டையன் சந்திரமுகியின் கண்முன்னே காதலனைக் கொன்றுவிட்டு, ‘லக்க லக்க லக்க’ சொன்னபடியே சந்திரமுகியையும் உயிரோடு எரித்துக் கொன்று விட்டு, பின்னர் சில காலத்தில் மடிந்து விட்டதாக அந்த அரண்மனையின் கதை விவரிக்கப்படுகிறது. அவளது ஆவி அந்த அரண்மனையில் உள்ள பின் மாடியின் தெற்கு அறையில் உலவுவதால் அங்கே யாரும் செல்லக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
ஆனாலும் குறும்புக்காரப் பெண்ணான கங்கா (ஜோதிகா) அந்த ரகசியத்தை அறிய பழைய ‘பெரியவர்களின்’ பேச்சையும் மீறி அவ்வப்போது உள் நுழையத் தலைப்படுகிறார்.
ரஜினி வெளியூர் சென்றிருக்கும் நேரத்தில் சந்திரமுகியின் அறைக்குள் நுழைந்துவிடுகிறார் ஜோதிகா. அது முதல் தொடங்குகிறது நிறைய பிரச்சினைகள். பிரச்சினைகளைத் தீர்க்க சரவணா (ரஜினி) தோன்றுகிறார்; துப்பறிகிறார்; அங்குள்ள திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களோடு விளையாடுகிறார்; வடிவேலுவை பயமுறுத்துகிறார்.
ரஜினியின் ஆதரவோடு நாசர் மகளுக்கும், எதிர் வீட்டு ஆடற்கலைஞனுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. அந்த நிகழ்வின் முடிவில் வினித் (ஆடற்கலைஞன்) ஜோதிகாவிடம் தவறாக நடக்க முயல்வதாகப் பிடிபடும்போது, தவறு ஜோதிகா மேல்தான் என்று ரஜினி உண்மையைத் தெரிவிக்க, கோபம் கொள்ளும் பிரபு உள்ளிட்ட வீட்டுக்காரர்கள் வழக்கமான ரஜினி படம் போல அவரை விரட்டுகிறார்கள். அப்போது அதைத்தடுத்து உண்மையை விளக்குகிறார், ஏற்கெனவே அழைத்து வரப்பட்ட மந்திரவாதி. ஒரு தலையில் 10 மூளை கொண்டவரும், உலகின் தலைசிறந்த மனோதத்துவ நிபுணரின் முதன்மைச் சீடருமான இவரையா (ரஜினியை) விரட்டுகிறீர்கள் என்று கேட்டுவிட்டு, தன் உயிரைப் பணயம் வைக்கத் துணிந்திருக்கும் ரஜினியின் தியாக சொரூபத்தை அனைவருக்கும் காட்டுகிறார். ரஜினியும் தன் தியாக முகத்தை அனைவருக்கும் காட்டுகிறார்.
சிறுவயது முதலே பல்வேறு நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு, அவ்வப்போது மனநிலை குழம்பியவராக வாழ்ந்து, அதை மறக்க, குறும்புக்காரராக மாறிவிடுகிற ஜோதிகா, சந்திரமுகி அறைக்குள் நுழைந்து அவளால் கவரப்பட்டு, தன்னை சந்திரமுகியாக நினைத்து, சந்திரமுகியாக நின்று, சந்திரமுகியாக மாறிவிடுகிறார். இதற்கு Spilit personality என்று அறிவியல் பெயர் என்றும், அந்த சந்திரமுகியாக மாறுகிற ஜோதிகா எதிர்வீட்டு வினித்தை தன் காதலன் குணசேரகரனாகப் பார்க்கிறார். அதற்குத் தடையாக இருப்போரைக் (மாளவிகா, பிரபு) கொல்ல முயற்சிக்கிறார். வேட்டையன் ராஜாவாக ரஜினியை நினைத்து, துர்காஷ்டமி அன்றைக்கு ரஜினியைக் கொன்று பழிதீர்க்க சந்திரமுகியாக மாறிவிட்ட ஜோதிகா துடிக்கிறார். தான் அழிந்தால்தான் சந்திரமுகி ஜோதிகாவிடமிருந்து விடுபடுவார் என்று முடிவு சொல்லும் ரஜினி, தான் தியாகம் செய்யத் தயாராகவும், அதே சமயம் ஜோதிகாவை விடுவிக்க Psychosis-லிருந்து புதிய முறையைக் கையாளப் போவதாகவும் கூறிவிட்டு, வேட்டையன் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு பழைய ‘பரட்டை’ காலத்து ரஜினியாக மாறிவிடுகிறார். இறுதியில் ரஜினிக்கு பதில் வேட்டையன் ராஜாவின் பொம்மையை ஆள்மாற்றம் செய்து எரித்து, சந்திரமுகியின் கோபத்தைத் தணித்து, ஜோதிகாவை விடுவிக்கிறார்.
“Slowly you are getting conscious” என்று இப்போது தன் மனோதத்துவ மருத்துவப் பாணியைக் கையாண்டு வெற்றி பெறுகிறார். தன் ஜோடியோடு பழையபடி ‘Repeat’ பாடலைப் பாடிக்கொண்டு விடைபெறுகிறார். சரி, வருவோம். சந்திரமுகியின் கதாபாத்திரத்தால் கவரப்பட்டு ஜோதிகா Spilit personality-க்கு ஆளாகிறார் என்றால், விடுவிக்கப்பட வேண்டியது ஜோதிகாவா? இல்லை ஜோதிகாவிடம் இருந்து சந்திரமுகியா? ஜோதிகா தானே விடுவிக்கப்பட வேண்டியவர். சந்திரமுகியின் ஆசையைத் தீர்த்து அவரை ஜோதிகா உடலிலிருந்து விடுவிக்கவே போராடுகிறார் ரஜினி.
மந்திரவாதி, என்னால் முடியாததை மனோவியல் மருத்துவர் ரஜினி செய்ய முடியும் என்று சொல்கிறார். ரஜினியோ மந்திரவாதியின் பக்கபலமும் அவசியத் தேவை என்று துணைக்கழைக்கிறார். சந்திரமுகியின் ஆசையைத் தீர்த்து, ஆவியை வழியனுப்பி வைக்கும் பழைய ‘டெக்னிக்’குக்கு மனோவியல் என்று புதிய முலாம் பூசுகிறார்கள். அப்படியானால் மந்திரவாதி என்ன செய்கி றார்? தனது சிஷ்யர்களை வைத்து பெரிய ரங்கோலிக் கோலம் போட்டு அதன் நடுவில் சந்திரமுகியாகத் துள்ளும் ஜோதிகாவைப் பிடித்து அமுக்குகிறார். மந்திரவாதிக்கே உரிய தோரணையோடு “யார் நீ?” என்று மிரட்டலாக கேள்வி கேட்கிறார். சரி, மந்திரவாதி முயற்சியால்தான் ஜோதிகா விடுவிக்கப்படுகிறார் என்றால், ரஜினியோ மனோதத்துவ நிபுணரின் தோரணையோடு, “உன் பெயர் என்ன?” என்று அமைதியாகக் கேட்கிறார்.

எதனால் விடுவிக்கப்பட்டார் ஜோதிகா? தெளிவில்லை. ‘என்னதான் அறிவியல் என்றாலும் மந்திரங்களெல்லாம் வேண்டும்’ என்கிற பழைய பல்லவியைத்தான் ‘Repeat’ செய்கிறார்கள். பாபா - நாத்திகம் பேசி ஆத்திகனானார். சரவணன் - அறிவியல், மருத்துவம் பேசி மந்திரத்தை நாடுகிறார். வழக்கமான ரஜினிபோல், “எனக்கா தெரியாது?” என்று வரிந்துகட்டி ‘தத்திந்தோம்’ என்று சங்கீதம் பாடுகிறார். பெண்களைப் பற்றிக் கவலைப்படும் ஆண்களின் மனதைப் படிக்கிறார் (Mind Reader) . அவர்கள் வயிற்றில் புளி கரைக்கிறார். கிளைமாக்சுக்கு முன்பு பாவமாகக் காட்சி தருகிறார் (வழக்கம்போல). இரட்டை அர்த்த வசனம் பேசுகிறார். பார்க்கும் பெண்களையெல்லாம் வலையில் விழ வைக்கும் வல்லமை பெற்றிருக்கிறார். என்னதான் புதுசாக செய்திருக்கிறார்? வழக்கம்போல ரஜினியின் ராசிக்காக ‘பாம்பு’ ஒன்று வந்து போகிறது 30 அடியில். எக்ஸ்ட்ரா பிட்டங்கா, ஆங்காங்கே pshyco, pshycic என்று ஆங்கில வசனம் பேசுகிறார். வேறு புதிதும் இல்லை. புதுமையும் இல்லை. பெண் வில்லியாக அகிலாண்டேஸ்வரி வருகிறார். எதற்கென்று கடைசி வரை தெரியவில்லை.
“எந்தத் தொழில் செய்தாலென்ன
செய்யும் தொழில் தெய்வமென்று”
பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னதை repeat செய்திருக்கிறார் ரஜினி. நாமும் ஒரு பட்டுக்கோட்டையார் பாடலை repeat செய்வோமா?
பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னதை repeat செய்திருக்கிறார் ரஜினி. நாமும் ஒரு பட்டுக்கோட்டையார் பாடலை repeat செய்வோமா?
“வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது
சொல்லி வைப்பாங்க - உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க - அந்த
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே”
- என்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே
ரிப்பீட்டு!
No comments:
Post a Comment