<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-35683786</id><updated>2012-01-29T13:41:37.331+05:30</updated><category term='ஆங்கிலம்'/><category term='இந்தி'/><category term='தமிழ்'/><category term='மொக்கைப்படம்'/><category term='ஈராக்'/><title type='text'>உலக சினிமா - 'உண்மை'ப் பார்வை</title><subtitle type='html'>இவ்வலைப்பூ....
என் எழுத்துக்கு களம் தந்து என்னை ஊக்கப்படுத்திய உண்மை மாதமிருமுறை இதழுக்கும்....
துரத்தித் துரத்தி என்னை எழுதத் தூண்டும் அண்ணன் பெரியார் சாக்ரடீசு அவர்களுக்கும்....</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>16</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-35683786.post-3236723673558294320</id><published>2010-12-14T10:01:00.001+05:30</published><updated>2010-12-14T10:03:33.699+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>அடக்கப்பட்ட மக்களின் அரிமா</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/TQbu0IM_3uI/AAAAAAAAAIw/X_1qnPPC_pM/s1600/ambed+unmai.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="132" src="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/TQbu0IM_3uI/AAAAAAAAAIw/X_1qnPPC_pM/s320/ambed+unmai.JPG" style="cursor: move;" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தியாவின் தனித்தன்மை என்று பார்ப்பனர்களால் பெருமையாகவும், சமூக விஞ்ஞானிகளால் பெருங்கொடுமையாகவும், அநீதியாகவும் சுட்டிக் காட்டப்படுவது தான் வர்ணாஸ்ரமத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஜாதிமுறை. புத்தர் தொடங்கி இன்றைய காலம் வரை வர்ணாஸ்ரமத்திற்கும், ஜாதிக்கும் எதிரான போராட்டம் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் பக்கங்களில் இவரின் பங்களிப்பு ஒரு புரட்சியின் வீச்சு. ஆரிய சனாதனத்தையும், அது அமர்ந்திருந்த அதிகாரப் பீடத்தையும் ஆட்டம் காணச் செய்த பேரிடி! &amp;nbsp;அடிமை வாழ்வைத் தகர்க்க, அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டியதன் அவசியத்தை இந்திய மண் எங்கும் பரப்பிய பெரு நெருப்பு!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/TQbuy8kIcoI/AAAAAAAAAIs/7LnKUmPIvSE/s1600/ambed.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="238" src="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/TQbuy8kIcoI/AAAAAAAAAIs/7LnKUmPIvSE/s320/ambed.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாபெரும் திறமைசாலிகள் என பூணூல் படர்ந்த தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்ளும் பார்ப்பனக் கூட்டத்திற்கிடையில், தன் தனிப்பெரும் ஆற்றலால் இந்திய அரசியல் சாசனத்தை வடித்த சிற்பி! ஓரளவுக்கேனும் மனித உரிமைக்கும், கருத்துரிமைக்கும் இந்திய அரசியல் சட்டம் வாய்ப்புத் தருகிறதெனில் அது அவரின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாயிற்று! தானே வடித்த அரசியல் சட்டமாயினும், அது சரியாகச் செயல்படுவதும், தவறாகப் பயன்படுவதும் ஆள்வோரின் கைகளில் தான் இருக்கிறது என்பதை நேர்மையின் உறுதியோடு அறிவித்தவர்! ஆளும் பார்ப்பனியக் கும்பலால் அதே சட்டம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரானதாக மாறும் போது அதைக் கொளுத்துவதிலும் முதல் ஆளாய் நான்தான் இருப்பேன் என்று அவர் அறிவித்த போதும் அதே அரிமாவின் கர்ச்சனை! நினைத்ததைச் செய்ய முடியாத போது இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் என்ற பெருமையையும் உதறி எழுந்து, மக்களையும் தட்டி எழுப்பிய கதிரவன்! அவர் தான் ”வடநாட்டுப் பெரியார்” என்று வரலாற்றால் பெருமையோடு அழைக்கப்படும் அண்ணல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/TQbu1T9-Z3I/AAAAAAAAAI4/iGjqdA1HHuM/s1600/ambedkar+poster.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/TQbu1T9-Z3I/AAAAAAAAAI4/iGjqdA1HHuM/s1600/ambedkar+poster.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அம்பேத்கரின் புகைப்படத்தை மட்டும் காட்டி, அவரை தங்களில் ஒருவராக செரிக்கத் துடிக்கும் பார்ப்பன இந்துத்துவ சதிக்கு நடுவில், அம்பேத்கரின் போராட்ட வாழ்க்கையை எடுத்துச் சொல்லி, ஜாதிக்கெதிராகத் திரண்டெழுந்து அதை ஒழிக்க முரசு கொட்டி நின்ற அவரின் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டுசெல்லக் கிடைத்த பேராயுதம் தான் ”அம்பேத்கர்” திரைப்படம். தேசிய திரைப்பட வளர்ச்சிக் குழுமத்தின் தயாரிப்பில் ஜபார் பட்டேலின் இயக்கத்தில் 2000-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த ”டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்” படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2010 டிசம்பர் 03-ஆம் தேதி வெளிவந்துள்ளது. அம்பேத்கர் (தமிழ்) திரைப்படத்தின் வெளியீடே ஒரு பெரும் போராட்டத்தின் பின்னான வெற்றியாகும். அவ்வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நமது நன்றிகள் உரித்தாகும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;படிப்பெல்லாம் உங்களுக்கு ஏறாது.. அறிவுக்கும் உங்களுக்கும் ஆயிரம் காதம் தொலைவு என்றும், சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் படிப்பைக் கொடுக்காதே என்றும் தீண்டப்படாத குலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களிலிருந்து கிளர்ந்தெழுந்த அறிவுக் கதிரவனாம் அம்பேத்கரின் படிப்பு, அறிவுத்தேடலுக்கான அமெரிக்க வாழ்க்கையோடு தொடங்குகிறது அம்பேத்கரின் வரலாறு. அதற்கு முந்தைய காட்சியிலும், ஓவியங்களின் வாயிலாகவும் ஜாதிக் கொடுமையால் மக்கள் பட்ட அவதியைத் தெளிவாகக் காட்டிவிட்டுத்தான் தொடங்குகிறது படம். படிப்பு முடிந்ததும் பரோடா அரசில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையோடு கூடிய அவ்வரசின் நிதியுதவியில் பொருளாதாரத் துறையிலான தன் படிப்பையும், ஆய்வையும் மேற்கொண்டிருக்கும் அம்பேத்கரின் கடினமான உழைப்பையும், அறிவாற்றலையும் வியப்புடன் நோக்குகிறார்கள் உடன் பயில்வோரும், பேராசிரியர்களும். அங்கே கருப்பர்களுக்கெதிரான அநீதியைக் காணும் அம்பேத்கர், இந்தியாவில் ஜாதியின் பெயரால் இதனினும் கொடுமையான சூழல் இருப்பதைத் தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதற்கிடையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறும், அமெரிக்காவில் இருந்தபடி அதற்குக் குரல் கொடுக்குமாறும் மாணவர் அம்பேத்கரைத் தனிப்பட்ட முறையில் லாலா லஜபதி ராய் அழைக்கிறார். &amp;nbsp;தன் படிப்பைக் காரணம் காட்டியும், இந்திய சுயராஜ்ஜியம் எவ்வளவு முக்கியமோ, அந்தப் போராட்டத்தை விடக் கடுமையான போராட்டத்தை ஜாதி ஒழிப்புக்கும், வர்ணாசிரம ஒழிப்புக்கும் நடத்த வேண்டும் என்ற தனது உணர்வாலும் ராயின் அழைப்பை மறுக்கிறார் அம்பேத்கர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அம்பேத்கரின் சிந்தனைப்போக்கு அங்கேயே தெள்ளெனத் தெரியத் தொடங்குகிறது. படிப்புக்கும், குடும்பத்துக்குமாக தொடர்ந்து நடக்கும் வாழ்க்கைப் போராட்டத்திற்கு மத்தியில் தனது இளமைக்காலத்தில் தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் பெற்ற அவமானமும், கொடுமைகளும் அம்பேத்கரின் மனதில் ஜாதிக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தின் தேவையை உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. உதவித் தொகை நின்று மீண்டும், இந்தியா திரும்பியதும், பரோடா அரசுப் பணியில் அவர் சந்திக்கும் சவால்களும், படித்த, அறிவுள்ள ஒருவனுக்குத் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரன் என்ற ஒரே காரனத்தினால், இந்து மதத்தினராலும், பிற மதத்தினராலும் இழிவுபடுத்தப்பட்டு, வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளும் மறுக்கப்படுவதிலும், அவரது உறுதிப்பாடு பன்மடங்காகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பின்னர் சாகு மகராஜின் உதவியால் தன் மேற்படிப்பை வெற்றிகரமாக முடித்து, வழக்கறிஞராகவும், அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தில் பத்திரிகை தொடங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போராட்டக் களம் அமைத்து, சட்ட ரீதியாகப் போராடுதல் என அவரின் பணி வேகமெடுக்கிறது. மகர் குளத்தில் அனைத்து மக்களும் குடிநீர் பருகலாம் என்ற அடிப்படை மனித உரிமைப் பிரச்சினையோடு அவர் மக்களைத் திரட்டிக் களம் இறங்குவதும், பின்னர் ஆலய நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடும் போது கூட, “ஆலய நுழைவை விட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெறுவது தான் நமது முக்கிய நோக்கம்” என்று தெளிவாக அரசியல் ரீதியாகப் போராடுவதும் மிகச் சிறப்பாகப் படத்தில் விளக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/TQbu0qf0uQI/AAAAAAAAAI0/XR_sw-fi714/s1600/ambedkar+periyar.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/TQbu0qf0uQI/AAAAAAAAAI0/XR_sw-fi714/s320/ambedkar+periyar.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் காந்தியும் காங்கிரசும் செய்த துரோகங்களையும், வர்ணாசிரமத்தை ஆதரிக்கும் காந்தியின் மனோபாவத்தையும் துணிச்சலாகப் பதிவு செய்திருக்கிறது படம். தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி வழங்குவது என்ற அம்பேத்கரின் போராட்டத்தால் பிரிட்டிஷ் அரசு ஏற்படுத்தித் தந்த வாய்ப்பையும், உண்ணாவிரதம் என்ற பெயரில் சூழ்ச்சி செய்து காந்தியார் பறித்த துரோக வரலாற்றை படம் மிகத் தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் அம்பேத்கரின் உறுதிப்பாட்டை ஆதரித்தும், காந்தியின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடக்கூடாது என்று வலியுறுத்தியும் ”காந்தியின் உயிரை விட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையே மேலானது” என்று இந்தியாவிலேயே தனி மனிதராகக் குரல் கொடுத்து, அம்பேத்கருகுக் கரம்கொடுத்த தந்தை பெரியாரின் பங்களிப்பை படத்தில் நம்மால் காணமுடியவில்லை. அம்பேத்கர் தனி மனிதரல்ல.. அவருக்குப் பின்னால் மக்கள் மட்டுமல்ல... மாபெரும் படையின் தலைவராம் பெரியார் என்னும் பேருரு இருந்தது என்பதைப் பதிவு செய்தல் எவ்வளவு முக்கியமானது. அதை செய்யத் தவறியிருப்பது ஒரு வரலாற்றுப் பிழையே!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/TQbuyaeLSVI/AAAAAAAAAIo/ACpr6s7DhGs/s1600/ambedkar+tamil.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/TQbuyaeLSVI/AAAAAAAAAIo/ACpr6s7DhGs/s320/ambedkar+tamil.jpg" style="cursor: move;" width="320" /&gt;&lt;/a&gt;ஆயினும், அம்பேத்கரின் எழுத்துகளே பெரும்பாலும் வசன வடிவம் பெற்றுள்ளதால் ஒவ்வொரு வசனமும் ஆயிரம் முறை உரத்துச் சொல்ல வேண்டிய கருத்துடையனவாகும். திரைப்படம் எனும் போது முழு வாழ்க்கை வரலாற்றை மூன்று மணிநேரத்திற்குள் செறிவாகக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் இயக்குநர் ஜாபர் படேல்.&amp;nbsp;”அடடா... அம்பேத்கர் இவர் தானோ!” என்று வியக்கும் வகையில் ஏற்ற கதாபாத்திரத்தை உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார் மம்முட்டி. அவரது தோரணைகளாலும், பார்வைக் கோணங்களாலும், சமூக அநீதியைக் கண்டு தெறிக்கும் விழிகளாலும் அப்பப்பா.... அம்பேத்கரை நேரில் பார்த்த உணர்வைப் பெற முடிகிறது. &amp;nbsp;கலை இயக்கம், ஒளிப்பதிவு எனத் தேர்ந்த கலைத் தன்மை கொண்டதாகவும், அம்பேத்கரின் மனைவி ரமாபாயின் கதாபாத்திரம் ஏற்ற சோனாலி குல்கர்னி, காந்தியின் சூழ்ச்சிப் பார்வையை மிகச் சரியாகப் பொருத்தி நடித்த நடிகர் என தேர்ந்த நடிகர்களாலும், பன்னாட்டுத் தரம் பொருந்தியதாக உள்ளது படம். தமிழ் மொழியாக்கமும் தெளிவாக இருக்கிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடும் போராட்டத்திற்குப் பின்னும், விடாப்பிடியாக முயற்சித்து தமிழில் வெளிவரக் காரணமான என்.எப்.டி.சி-யின் சென்னை கிளை அதிகாரிகளைப் பாராட்ட வேண்டும். ஆனால் இதன் வெற்றி நம் கையில்தான் இருக்கிறது. தமிழகத்தின் பெருநகரங்களில் மட்டும், அதுவும் சொற்ப திரையரங்குகளில் பகல்காட்சியாக மட்டும் வெளிவந்திருக்கும் அம்பேத்கர் திரைப்படத்தை குடும்பம் குடும்பமாகச் சென்று பார்ப்பதும், முழுமையாக ஓடும் வகையில் அதனை வெற்றியடையச் செய்வதன் மூலமாகவும் நமது தலைமுறையில் ஓர் எழுச்சியை உருவாக்கவும், அடுத்த தலைமுறைக்கு புரட்சிச் சிந்தனையை விதைக்க வேண்டியது நமது கடமையாகும். அந்த வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இப்படத்தைக் காட்டச் செய்து அம்பேத்கரை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது தமிழக அரசின் கடமையாகும். ஏற்கெனவே அம்பேத்கர் படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்வதற்கு ஊக்கத் தொகையாக ரூ.10 லட்சத்தை வழங்கி, அம்பேத்கர் மீதும் அவர் கொள்கைகள் மீதும் தனக்குள்ள ஆழ்ந்த பற்றை வெளிப்படுத்தியிருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியையும் திறம்படச் செய்து முடிப்பார் என்பதில் நமக்கு எள்ளளவும் அய்யமில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் தமிழர்கள் இப்படத்தைப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை அறிக்கை வாயிலாக வலியுறுத்தியிருக்கிறார். தமிழர்களே! நீங்கள் பார்த்துவிட்டீர்களா - ”அடக்கப்பட்ட மக்களின் அரிமா”வாம் அம்பேத்கர் வரலாற்றை?இல்லையேல் இன்றே விரைந்திடுங்கள்.. மற்றவர்களையும் அழைத்துச் செல்லுங்கள்!&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #cc0000;"&gt;நன்றி: உண்மை டிசம்பர் 16-31. 2010&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35683786-3236723673558294320?l=ulagacinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/3236723673558294320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35683786&amp;postID=3236723673558294320' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/3236723673558294320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/3236723673558294320'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/2010/12/blog-post.html' title='அடக்கப்பட்ட மக்களின் அரிமா'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/TQbu0IM_3uI/AAAAAAAAAIw/X_1qnPPC_pM/s72-c/ambed+unmai.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35683786.post-8485143790000065637</id><published>2010-10-16T11:08:00.000+05:30</published><updated>2010-10-16T11:08:11.343+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தி'/><title type='text'>பீப்லி லைவும் எந்திரனும்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #cc0000;"&gt;&lt;b&gt;உரிந்து தொங்கும் ஊடகங்கள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;பெருநகரங்களின் சாலைப் பணிகளைச் செய்யவும், கட்டிட வேலை செய்யவும் குறைந்த கூலிக்கு சாரைசாரையாக வடநாட்டிலிருந்து வந்து குவிகிறார்களே.. சென்னையின் உணவு விடுதிகள் தொடங்கி தனியார் பாதுகாப்புப் பணிகள் வரை நீக்கமற நிறைந்திருக்கும் இவர்களெல்லாம் இதற்கு முன்பு எங்கிருந்தனர்? சித்தாள், கொத்தனார் என்று இதற்கு முன்பு பணி செய்த தமிழ்நாட்டுக்காரர்களெல்லாம் குறைந்து போய், இத்தனை பணிகளுக்கும் எங்கிருந்து இவர்கள் கொண்டு வரப்படுகின்றனர்? உலகமயம் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்நாட்டில் தொழிற்சாலை, அலுவலகங்கள் கட்டவேண்டியிருப்பதால், திடீரென்று பெருகிப்போன கட்டுமானத் தொழில் பணிகளுக்கென்றே திடீரென்று தோன்றியிருக்கும் சமூகமா? வர்ணாசிரமப் பிரிவினையில் இவ்வளவு பெரிய மக்கள் திரள் எத்தனையாவது சமூகம்- அல்லது ஏற்கெனவே இவர்களுக்கு இடப்பட்ட பணிகளை கிருஷ்ண பகவான் மாற்றிவிட்டாரா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்விகளுக்கு அவற்றிற்குள்ளேயே அடிப்படை பதில் இருக்கிறது, ஆம், உலகமயமாக்கல். இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை, கட்டுமானத்தொழிலை வளர்த்துவிட்டது... ஆனால் இந்தியாவின் அடிப்படைக் கட்டுமானமான விவசாயத்தை அழித்துவிட்டது. விதர்பாவிலிருந்து வளமான வயநாடு வரை விவசாயிகள் தற்கொலை பெருமளவில் நடைபெற்றது. பிரதமரால் துக்கம் விசாரித்து உதவித் தொகை தர மட்டும் தான் முடிந்தது. விவசாயிகள் தற்கொலைக்கான அடிப்படைக் காரணத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை; அல்லது அவர் புரிந்து கொள்ள முயலவில்லை. எம்.பி.ஏ எக்கனாமிஸ்டுகளால் தொழில் வளர்ச்சி என்று பல்லவி பாடி முதலாளிகளிடம் தான் சரணம் தேட முடியும். விவசாயத்தின் மரணத்திற்கா காரணம் தேடமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இருக்கும் சிக்கல்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய ஊடகங்கள் என்ன செய்கின்றன? காய்கறிகளைக் கூடைகளில் சுமந்து போய் விற்கும் தலைச்சுமை வியாபாரிகளைப்போல நின்ற இடத்திலிருந்து உலகம் முழுமைக்கும் நேரடியாக செய்தி சொல்ல வல்ல பெரிய தோசைக்கல் மாதிரி டிஷ் ஆண்டனாக்களுடன் கூடிய வசதியான வாகனங்களை வைத்துக்கொண்டு அலையும் ஊடகங்கள் என்றைக்காவது இத்தகைய பிரச்சினைகளை சமூக அக்கறையுடன் அணுகியிருக்கின்றனவா? பெருகிப் போயிருக்கும் செய்தி ஊடகங்கள், எங்கேனும் ஒரு துரும்பு கிடைக்காதா அதை ஊதிப் பெரிதாக்கி ஓரிரு நாட்கள் செய்தியை ஓட்டலாம் என்று கருதிக் கொண்டிருக்கும் நிலையில், மக்களின் உண்மையான உயிர்நாடிப் பிரச்சினைகள் அவர்களின் கவனத்திற்கு வருவதில்லையா? அதெப்படி இருக்க முடியும்? கண்டிப்பாக கவனத்தில் வரும். ஆனால் மக்களின் கவனம் இதிலெல்லாம் போய்விடக் கூடாது என்பதில் அவர்களின் கவனம் இருப்பதால் ஷில்பா ஷெட்டிகளையும், அமிதாப், அபிஷேக், அய்ஸ்வர்யா வகையறாக்களையும் மட்டுமே தலையாய பிரச்சினைகளாக மக்கள் மூளையில் திணித்துவருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3P1AMFCI/AAAAAAAAAIg/vAj7x4N9FoY/s1600/Peepli-Live-Poster.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="179" src="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3P1AMFCI/AAAAAAAAAIg/vAj7x4N9FoY/s320/Peepli-Live-Poster.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இதையெல்லாம் கடந்து சூடான பிரச்சினையாக விவசாயிகள் தற்கொலை அவர்கள் கண்ணில் அகப்பட்டால் என்னாகும்? என்ற கேள்விக்கான பதில் தான் ”பீப்லி (லைவ்)”. இந்திய ஊடகங்களின் உண்மைத் தன்மையை அவர்களின் சமுதாய அக்கறையை தெளிவாகத் தோலுரித்துக் காட்டியிருக்கும் படம். இந்தித் திரையுலகின் மிக முக்கிய நடிகரும் நல்ல திரைப்படங்களை மக்களுக்குத் தரவேண்டுமென்கிற அக்கறை கொண்டவருமான அமீர்கானின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கிய பிரதேசத்தின் பீப்லி கிராமத்தில் வசிக்கும் விவசாயி நத்தாவைச் சுற்றி நடக்கிறது கதை. சொந்த நிலத்தை அடகு வைத்து வாங்கியிருக்கும் கடன் தொடர்பாக வங்கியிலிருந்து அழைப்பு வந்ததால், நத்தாவும், அவரது அண்ணன் புட்டியா-வும் வங்கிக்குச் சென்று திரும்புவதில் தொடங்குகிறது படம். நிலத்தை வங்கி எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என்ற கேள்வி நிறைந்த கவலையோடு வீடு திரும்புகிறார்கள் இருவரும். நிலையை எடுத்துச் சொன்னதும், திட்டி வெளியே அனுப்புகிறாள் நத்தாவின் மனைவி. என்ன செய்வது என்ற கவலையோடு, உள்ளூர் அரசியல்வாதியின் உதவியை நாடிச் செல்கின்றனர் இருவரும். இடைத்தேர்தல் பணிகளில் இருக்கும் ஆளும் சமந்தா கட்சி அரசியல்வாதியும் அவரது அல்லக்கைகளும், ‘தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு அரசு 1 லட்சம் உதவித் தொகை தருவதாக யாரோ சொன்னதாக’ச் சொல்லி, அப்படி வேண்டுமானால் குடும்பத்தைக் காப்பாற்றலாமே என்று கிண்டலடிக்க, அதை உண்மையென்று நம்பி தற்கொலை செய்தாவது குடும்பத்தைக் காப்பது என்று முடிவுக்கு வருகிறார்கள் சகோதரர்கள். ”நான் செய்கிறேன்; நான் செய்கிறேன்” என்று இருவரும் மாறி மாறிப்பேசி, இறுதியில் தம்பியான நத்தா தற்கொலை செய்வதென்று முடிவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொருபுறம் வியாபாரப் போட்டி காரணமாக டி.ஆர்.பி எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் அய்டிவிஎன் மற்றும் பாரத் லைவ் ஆகிய தொலைக்காட்சிகள் இருக்கின்றன. இந்நிலையில் நத்தாவின் தற்கொலை முடிவை இவர்கள் டீக்கடையில் பேசுவதைக் கேட்கும் உள்ளூர் பத்திரிகையாளர் ராகேஷ், இச்செய்தியை நாளிதழில் வெளியிடுகிறார். &amp;nbsp;இதனைப் பார்த்து அய்டிவிஎன்-ன் நட்சத்திர செய்தியாளர் பீப்லி கிராமத்திற்கு வந்து நத்தாவைப் பற்றி செய்தி வெளியிடுகிறார். அடுத்தடுத்து அனைத்து தொலைக்காட்சிகளும் பீப்லி கிராமத்தில் குவிந்து நத்தா தற்கொலை செய்து கொள்ள இருப்பதை வெளியிடுவதில் மும்முரமாகின்றன. இதன் மூலம் தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்த தொலைக்காட்சிகள் குவியக் குவிய திருவிழாக் கோலம் காண்கிறது பீப்லி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3OD_3d3I/AAAAAAAAAIY/8cl2eUWUN1Q/s1600/peepli-live.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3OD_3d3I/AAAAAAAAAIY/8cl2eUWUN1Q/s320/peepli-live.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நேரடி ஒளிபரப்பு மூலம் நத்தாவின் இரவு பகல் அத்தனை நிகழ்வுகளையும் ஒளிபரப்புகின்றன சேனல்கள். அரசுக்குப் பாதிப்பாகப் போய் இடைத்தேர்தல் முடிவு பாதிக்கப்படலாம் என்பதால் இதைத்தடுக்க ஆளுங்கட்சி முயல, அதே நேரம் இதை வைத்தே ஆதாயம் பெற எப்படியாவது நத்தா தற்கொலை செய்துகொண்டுவிட வேண்டும் என்று காய் நகர்த்துகிறது எதிர்க்கட்சியான ’அப்னாதளம்’. நிறுவவதற்கான செலவுத்தொகை தராமல் வெறும் அடி பம்பு ஒன்றினை அரசு வழங்கிச் செல்ல, வண்ணத்தொலைக்காட்சி ஒன்றினை வழங்கிச் செல்கிறார் மற்றொரு வேட்பாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3NS8ihiI/AAAAAAAAAIU/EwFO6uSHmTk/s1600/Peepli+Live_20724.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" src="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3NS8ihiI/AAAAAAAAAIU/EwFO6uSHmTk/s200/Peepli+Live_20724.jpg" width="200" /&gt;&lt;/a&gt;காலைக்கடன்களை முடிக்க கொல்லைக்குச் சென்றாலும் பாதுகாப்புக்கு போலீஸ், தொடர்ந்து படம் பிடித்து தொல்லைதரும் தொலைக்காட்சிகள் என நத்தாவின் வாழ்க்கை வேறுவகையாகிவிடுகிறது. திடீரென அவர் ஆளுங்கட்சியில் உள்ளூர் அரசியல் வாதியால் கடத்திவைக்கப்பட்டுவிட, நத்தாவைத் தேடத் தொடங்குகின்றன அனைத்து ஊடகங்களும். கடைசியாக நத்தா ’கக்கா’ போனது இங்குதான் அதற்கான அடையாளத்தை தெளிவாகக் காண முடிகிறது என்கிற ரீதியில் தொலைக்காட்சி சேனல்கள் அலசுகின்றன. நத்தா இருக்கும் இடத்தை அறிந்து அய்டிவின்-இன் செய்தியாளருடன் அவ்விடத்திற்கு ராகேஷ் போக, அரசு இயந்திரமும், அனைத்து ஊடகங்களும் அங்கு விரைய, கடத்தி வைத்தவர்கள் தப்பிக்க முயல, நிகழும் களேபரத்தில் தீவிபத்து ஏற்பட்டு ஒருவர் இறந்து போகிறார். இறந்தவர் நத்தா தான் என அரசு உறுதிப்படுத்திவிட, அனைத்து ஊடகங்களும் மூட்டை கட்டிவிடுகின்றன. உள்ளூர் செய்தியாளர் ராகேஷ், தனது செல்பேசியை எடுக்கவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டு அய்டிவிஎன் செய்தியாளரும் சென்றுவிட, சில மாதங்கள் கழிந்த பின்னரும் நத்தாவின் குடும்பத்திற்கு உதவித் தொகைகள் எதுவும் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3PGKTOTI/AAAAAAAAAIc/rYc6DPeffm0/s1600/Peepli-Live-15073.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3PGKTOTI/AAAAAAAAAIc/rYc6DPeffm0/s320/Peepli-Live-15073.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;காரணம், நத்தா தற்கொலை செய்து கொள்ளவில்லை; விபத்தில் இறந்ததால் உதவித் தொகை கிடையாது என்று அரசு கைவிரித்துவிட்டதாக, நத்தாவின் மனைவியிடம் புட்டியா சொல்கிறார். நத்தாவின் குடும்ப நிலை இப்படி இருக்க.. இவர்கள் யாருக்கும் தெரியாமல் எங்கோ ஒரு நகரத்தின் கட்டுமானப் பணியாளர்களில் ஒருவராக கையில் மண்வெட்டியோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் நத்தா. ’ஜோலா மாண்டிக் கேரா’ என்ற நாட்டுப்புறப் பாடலுடன் 1991-2001க்கிடையில் மட்டும் 80 லட்சம் இந்தியர்கள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு சென்றிருப்பதாக சென்சஸ் அறிக்கை தகவல் குறிப்புடன் படம் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் இயக்குநர் அனுஷா ரிஷ்வி என்டிடிவி-யில் செய்தியாளராகப் பணியாற்றிய பெண். ஊடகத்தின் உச்சபட்ச நோக்கத்தினை தெளிவாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் ரிஷ்வி. படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலானோர் நாடகத் துறையிலிருந்து வந்தவர்கள். இயல்பான அவர்களது பங்களிப்பை நடிப்பு என்று நம்மால் சொல்லிவிட முடியாது. தொழில்மயமாக்கல் தான் விவசாயிகளின் சிக்கலுக்குத் தீர்வு என்று கருத்து சொல்லும் மத்திய வேளாண் அமைச்சர், எந்தத் திட்டத்தையாவது சொல்லி தான் தப்பிக் கொள்ளப் பார்க்கும் முதலமைச்சர், கோர்ட் முடிவுக்குக் காத்திருக்கிறோம் என்ற பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லும் அய்.ஏ.எஸ் அதிகாரி என ஒவ்வொரு கதாபாத்திரமும் செவிட்டில் அறைவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. எப்போதும் கரித்துக் கொட்டும் கிழவி, உயிருடன் இருப்பவர்களுக்கு எதுவும் தராமல் செத்தபின்தான் அரசு உதவும் போலும் எனக் கிண்டலடிக்கும் டீக்கடைக்காரர் என சின்னச் சின்ன இடங்களிலும் படத்தை ரசிக்க வைக்கிறார் இயக்குநர்.&lt;br /&gt;&lt;br /&gt;’விவசாயிகள் தங்கள் தொழிலை விட்டு மாறவே கூடாது; வர்ணாசிரமம் விதித்திருக்கும் கட்டுப்பாட்டிலிருந்து அவர்கள் வேறு தொழிலுக்கு போய்விடக் கூடாது; வயல்வெளிகளிலேயே கிடந்து உழல வேண்டும்; கிராமங்கள் அழிந்துவிடக் கூடாது’ என்பதல்ல நமது விருப்பம். குலத் தொழிலிருந்து வெளியே வாருங்கள்; கிராமங்களை மறந்து நகரங்களுக்கு வாருங்கள்; கிராமங்களை நகரங்களாக்குங்கள் என்றழைத்தவர் பெரியார். ஜாதிக் கட்டுமானத்திற்கு அடிப்படையாக கிராமச்சூழல் விளங்குகிறது என்பதால் அவற்றிலிருந்து வெளியேறவும் தாங்கள் விரும்பும் தொழிலைச் செய்யும் உரிமை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதும் தான் அதன் அடிப்படை. அவர்கள் விரும்புவது விவசாயமாக இருக்கும் நிலையில், அடிமைகளாக இல்லாமல், தத்தமது சொந்த நிலங்களில், அல்லது மேம்பட்ட பணியாளர்களாகவோ இருக்கும் உரிமையும் அவர்களுக்கு வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் சூழலுக்கு பீப்லி லைவ் கதை பொருந்தாமல் போகலாம். 7 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி, 2 ஏக்கர் நிலம், இலவச மின்சாரம், இலவச பம்ப் செட் என்றெல்லாம் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு திட்டங்களை வகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் கலைஞர் அரசின் சாதனைகளால் இந்தியா முழுமையும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தமிழகம் தப்பியது, ஆனால் இதைப் போன்ற உயிர்நாடிப் பிரச்சினைகள் தமிழ்நாட்டில் இல்லாமல் இல்லை. அவற்றில் கவனம் செலுத்தும் திரைப்படங்களும் தமிழில் வராமல் இல்லை. இந்தித் திரையுலகில் அமீர்கான் போன்றோர் செய்யும் இப்பணியை தமிழ்நாட்டிலும் இனவுணர்வும், திரைக் காதலும் கொண்ட பலர் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அத்தகைய திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டு ஊடகங்கள் எத்தகைய வரவேற்பை, விளம்பரத்தை அளித்திருக்கின்றன என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில நாட்களாக திரும்பும் இடமெல்லாம் ஒரே ஒரு படத்தைத் தூக்கிவைத்து பேசிக்கொண்டிருக்கின்றன தமிழ்நாட்டு ஊடகங்கள். இவை உருவாக்கியிருக்கும் பிம்பத்தினால், ஒருவேளை இப்படத்தைப் பார்க்காவிட்டால் நம்மை ஊரை விட்டு ஒதுக்கிவைத்துவிடுவார்களோ என்று கருதும் மனநிலைக்கு வந்திருக்கிறான் சராசரித் தமிழன். சும்மா ’சூப்பர் ஸ்டார்’ தும்மினாலே அட்டைப்படத்தில் போடும் நமது பத்திரிகைகளுக்கு மத்தியில், நாளிதழ்கள், வார இதழ்கள், பண்பலை வானொலிகள், தொலைக்காட்சிகள் என பெரும் ஊடகங்களைத் தம் கையிலும், எஞ்சியவற்றைத் தம் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க முயலும் நிறுவனம் படத்தின் தயாரிப்பாளராக இருந்துவிட்டதால் நிலையை சொல்லத் தேவையில்லை. சந்தேகமில்லாமல் தொல்லையின் உச்சத்தில் உங்களைக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கும் அந்தத் திரைப்படத்தின் பெயர் ’எந்திரன்’ என்று சொல்லி மீண்டும் உங்களை அலர்ஜிக்கு உட்படுத்துவதற்கு மன்னிக்க வேண்டுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றா இரண்டா? எத்தனைப் படங்களிலிருந்து திருட்டு? பை செண்டினல் மேன் படத்தின் கதை என்று ஒரு பக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3LrhkLvI/AAAAAAAAAII/yeLwPIC4Loc/s1600/bicentennial_man.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3LrhkLvI/AAAAAAAAAII/yeLwPIC4Loc/s320/bicentennial_man.jpg" style="cursor: move;" width="216" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3MIklE5I/AAAAAAAAAIM/Cc8BYy0jatg/s1600/endhiran.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3MIklE5I/AAAAAAAAAIM/Cc8BYy0jatg/s320/endhiran.jpg" style="cursor: move;" width="233" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;எனது கதையைத் தான் படமாக்கியிருக்கிறார்கள் என்று ஆர்னிகா நாசர் என்ற தமிழ் அறிவியல் சிறுகதை எழுத்தாளர் ஒரு பக்கம். இன்னும் பார்க்கப் பார்க்க நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படங்கள் நினைவுக்கு வருகின்றன. பின்னணியில் இருக்கும் ஒரு ரோபோட் படத்தைக் கூட, ஒரு கணினி ஆண்ட்டி வைரஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் இருந்து திருடியிருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் அம்பலப்பட்டுவருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3M_yjGeI/AAAAAAAAAIQ/VUPP3BJ8GxE/s1600/endhiran1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="135" src="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3M_yjGeI/AAAAAAAAAIQ/VUPP3BJ8GxE/s320/endhiran1.jpg" style="cursor: move;" width="320" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;a href="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk4FhUcarI/AAAAAAAAAIk/u2hyTEzckTQ/s1600/eset+nod+32.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="160" src="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk4FhUcarI/AAAAAAAAAIk/u2hyTEzckTQ/s200/eset+nod+32.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் தான் திருட்டு டிவிடி-க்கு எதிராக குண்டர் சட்டம் பாய வேண்டும் என்கிறார்கள். எளிய திரைப்படங்களைக் காப்பாற்ற திரைத்துறை விதித்திருக்கும் கட்டுப்பாடுகள், டிக்கெட் விலைக் கட்டுப்பாடுகள் இப்படி எல்லாவற்றையும் தாண்டி, ஊடக முற்றுரிமையை உருவாக்கியதைப் போன்ற இந்தப் படத்திற்கு மற்ற ஊடகங்களும் ஜால்ரா தட்டி வரவேற்கின்றன என்பது எவ்வளவு கேவலம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3LEV7w9I/AAAAAAAAAIE/wbZoRDUyy2E/s1600/photo1b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="214" src="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3LEV7w9I/AAAAAAAAAIE/wbZoRDUyy2E/s320/photo1b.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஹாலிவுட் திரைப்படக்காரர்கள் வாயில் போட்டு மீண்டும் மீண்டும் மென்று, அரைத்து, குதப்பித் துப்பிய அரதப் பழசான கதையைத் தூக்கிவைத்துக் கொண்டு, அதற்குக் கோடிக் கணக்கில் செலவு செய்து, உச்சநட்சத்திரங்களைக் கொண்டு நிரப்பி, ’இப்படம் பார்க்கவில்லையென்றால் நீ மனிதனாகப் பிறந்ததே வேஸ்ட்’ என்ற ரீதியில் விளம்பரங்கள் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்; அதை அனைத்து ஊடகங்களும் வெட்கமில்லாமல் வரிந்துகட்டி ஆதரிக்கிறார்கள் என்றால் தமிழர்களை மடையர்களிலும் கேடான மடையர்களாக இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றல்லவா &amp;nbsp;பொருள்? நாம் எத்தகைய படங்களை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம் மீண்டும் ஒரு முறை உறுதிசெய்து கொள்ளுதல் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;பீப்லி லைவ் ஊடகங்களை உரித்துக் காட்டியிருக்கிறது என்றால், எந்திரன் படத்தின் மூலம் ஊடகங்கள் தாங்களே நிர்வாணப்பட்டு நிற்கின்றன என்று தான் சொல்லவேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35683786-8485143790000065637?l=ulagacinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/8485143790000065637/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35683786&amp;postID=8485143790000065637' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/8485143790000065637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/8485143790000065637'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/2010/10/blog-post.html' title='பீப்லி லைவும் எந்திரனும்'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/TLk3P1AMFCI/AAAAAAAAAIg/vAj7x4N9FoY/s72-c/Peepli-Live-Poster.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35683786.post-2950422356473167289</id><published>2010-05-23T12:49:00.001+05:30</published><updated>2010-05-23T12:53:49.270+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>அங்காடித் தெரு</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="right" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099;"&gt;&lt;div style="text-align: -webkit-center;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;தமிழ்நாட்டின் பரப்பளவில் மூன்று கோடியே 20 லட்சத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ள 10 மீட்டர் அகலமும் 405 மீட்டர் நீளமும் கொண்ட ஒரு குறுகலான தெருவில் இருந்து மட்டும் தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு 10 சதவிகிதத்திற்கு குறையாமல் விளம்பரம் வருகிறது என்றால் சந்தேகமில்லாமல் அது சென்னை தியாகராயர் நகர், ரங்கநாதன் தெருவிலிருந்து தான்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;மாம்பலம் - தியாகராயர் நகர் தொடர் வண்டி நிலையத்திற்கும் வடக்கு உஸ்மான் சாலைக்கும் இடையில் அமைந்திருக்கும் அந்தத் தெருவில் தான் சென்னையின் மக்களின் பெரும்-பகுதியினரின் பேஷன் மாற்றம் நிர்ணயிக்கப்-படுகிறது. நெரிசலான பல மாடிக் கட்டடங்-களிலும், சின்னச் சின்ன சந்துகளிலும், பொந்துகளிலும் உள்ள கடைகளில் பணியாற்றுவோர், தெருவின் இரு ஓரங்களிலும், மத்தியிலும் நீளமாக 'தெருவே உலகம்; ஊனுடம்பே கடை' என தானே விற்பனையக-மாக மாறிப்போய் வியாபாரம் செய்வோர் என பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையும் இந்தத் தெருவில் தான் எந்த மாற்றமும் அற்று ஓடிக்கொண்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/S_jXiU6LswI/AAAAAAAAAH0/gxvQQdsys2E/s1600/angadi-theru-01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/S_jXiU6LswI/AAAAAAAAAH0/gxvQQdsys2E/s320/angadi-theru-01.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;சென்னையில் வசிப்போர் இந்த இடத்தை-யோ, அதன் நெருக்கத்தையோ அறியாமல் இருந்திருக்க முடியாது. ஒரே கடையில் எல்லாவற்றையும் 'அள்ளிக்' கொள்ளும் வாய்ப்புக்காகவும், தங்களுக்குப் பிரியமான நட்சத்திரங்கள் பரிந்துரைக்கும் கடை என்பதற்காகவும், நட்சத்திரங்கள் விளம்-பரங்களில் தோன்றி அழகாக்கிய (அழுக்காக்கிய) உடைகளை தாங்களும் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் ஒவ்வொரு நாளும் அங்கு கூடுவோர் ஆயிரம். வண்ண வண்ண துணிகளை அணிந்து நிற்கும் பொம்மைகளை, அந்த உடைகளுக்காக பார்த்த அவர்கள், எப்போதாவது அக்கடையில் இயந்திர பொம்மைகளாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்திருப்பார்களா? இயக்குநர் வசந்த பாலன் பார்த்திருக்கிறார். அதுதான் "அங்காடித் தெரு".&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;சென்னையில் முழுதும் குளிரூட்டப்பட்ட 5 மாடிக் கட்டடத்தில் இயங்கும் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் கடையில் வேலைக்கு ஆள் எடுப்பதற்காக திருநெல்வேலி ஜங்சன் அருகில் நடைபெறும் சிறப்பு முகாமில், எப்படியேனும் தேர்வாகி வீட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் குவிந்திருக்கும் இளைஞர்களில் ஜோதிலிங்கமும் ஒருவன். ஆள் இல்லா லெவல் கிராசிங்கில் ரயிலில் சிக்கிச் சிதறிய ஆட்டோ விபத்தில் தந்தையை இழந்ததால், பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று, தான் முடித்த 12-ஆம் வகுப்பிற்குப் பிறகு மேல் படிப்புக்கு வழியின்றி குடும்பத்தைக் காக்க வேலை தேடியவன். அவன் நண்பன் மாரிமுத்துவோ, தேர்வில் தோல்வியடைந்து சினேகா அக்கா இருக்கும் ஊருக்கு செல்லும் ஆர்வத்தில் 'அப்பா சந்நியாசம் போய்விட்டதாக'க் கூறி பணியில் சேர்ந்திருப்பவன். 'நம்ம ஆளுகளா பார்த்து எடுங்க. அப்பா இல்லாதவன், அக்கா, தங்கச்சி இருக்கிறவனாப் பாத்து வேலைக்கு எடுங்க. அப்பத்தான் பொத்திக்கிட்டு வேலை பார்ப்பானுங்க' என்ற தகுதிகளின் அடிப்படையில் தான் ஆள் தேர்வு நடைபெறுவதால் படிப்பு கவலை இல்லை. 'எச்சிக்கையை ஓட்டினா ஆயிரம் காக்காய்' கிடைக்கும் வாய்ப்பிருந்தும், தேரிக் காட்டில் கிடந்துழலும் 'நம்ம' பயலுகளுக்கு தன்னா-லானதை செய்யும் பேருள்ளத்தோடு இவர்களை 'கொத்தடிமை' வேலைக்கு எடுத்துக் கொள்கிறார் அண்ணாச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். சேல்ஸ் 'மேன்' வேலை என்று தான் சொல்லி அழைத்து வருகிறார்கள்... ஆனால் மனிதனாய் மதிக்கத்தான் யாரும் இல்லை. சிறையினும் கொடிய அவர்களின் அன்றாட வாழ்க்கை திரையில் விரிகிற போது-தான், இப்படியும் இருக்குமா என்று சந்தேகக் கண்ணோடு வியக்கிறார்கள் பார்வையாளர்கள். ஆனால், "நான் காட்டியது கொஞ்சத்திலும் கொஞ்சமே.. மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து என்னால் இதை மட்டும்தான் காட்ட முடிந்தது" என்கிறார் இயக்குநர்.&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;ஆண், பெண் இரு பாலரின் கடுமையான உழைப்பு, ஒரு நிமிடம் ஓய்வென்றோ, களைப்பென்றோ அமர்ந்தாலும் அவர்கள் சந்திக்கும் அடி, உதை, பாலியல் தொல்லைகள் என்று காட்சிக்குக் காட்சி, அந்தக் கண்ணாடிக் கூண்டுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் நவீன கொத்தடிமைகள் அனுபவிக்கும் கொடுமைகளி-லிருந்து சில பருக்கைகள் மட்டுமே காட்டப்-படுகிறது. வகை தொகையில்லாமல் நடக்கும் இந்த வன்கொடுமைகள் வெளித் தெரியாமல் இருக்க காவல், தொழிலாளர் நலன் உள்ளிட்ட ஒவ்வொரு துறைக்கும் 'கொட்டி அழும்' அண்ணாச்சியின் துயரம்(!?) கூட பதிவு செய்யப்பட்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;காலை 8 மணியிலிருந்து இரவு 12 மணி வரை நின்று கொண்டே பணியாற்றியதால் ரத்தக்-குழாயில் கெட்ட ரத்தமெல்லாம் சேர்ந்து வெரிக்கோஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரைக் காட்டும் போது ஒரு நிமிடம் நாம் உறைந்து தான் போகிறோம். செந்தில் முருகன் ஸ்டோர்ஸில் மட்டுமல்லாமல், அந்த அங்காடித் தெருவில் காலத்தை ஓட்டும் பல்வேறு கதாபாத்திரங்களின் வழியே குட்டிக் குட்டிச் சிறுகதைகள் திரைக்கதைக்குள் வந்துபோ-கின்றன. பிச்சையெடுத்து வாழ்ந்துவந்த வளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளி, தான் கட்டிக்-கொண்ட முன்னாள் பாலியல் தொழிலாளியின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை தன்னைப்-போலவே வளர்ச்சி குறைவற்று இருந்துவிடக்-கூடாது என்று கடவுளை வேண்டியிருக்க பிறந்த குழந்தையோ அவரைப் போலவே இருக்கிறது. மிகுந்த சோகத்தோடு செல்லும் அவரது நிலைக்கு மாறாக மிகுந்த மகிழ்ச்சியோடு செல்லும் அவரது மனைவி அதற்கு சொல்லும் காரணம் மனிதர்களின் உணர்வுகள் எப்படி-யெல்லாம் இருக்கின்றன என்பதற்கு ஓர் அற்புதமான சான்று.&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;ஒரே அறையில், புரண்டு படுக்கக்கூட இடமின்றி, சரக்கு மூட்டைகளைப் போல் சாய்ந்துகிடப்பதையும், அண்டா சோற்றுக்குள் தட்டை விட்டு அதற்குள் போட்டியிடும் 20 தட்டுகளிடமிருந்து தட்டி விடாமல் சோற்றை எடுக்கும் சாமர்த்தியத்தையும், ஒரு நிமிடம் தாமதமானாலும் ஒரு ரூபாய் பிடிக்கப்படும் சம்பளத் தொகையை முழுதாக வாங்கி வீட்டுக்கு அனுப்ப அவர்கள் பொறுத்துக்கொள்ளும் அத்தனை வதைகளையும் அதன் கோரம் குறையாமல் வெளிச்சமிடுகிறது படம். ஒரே ஒரு புடவை எடுப்பதற்காக 'இதே கலர்ல' வேற என்னென்ன இருக்கோ எடுத்துப் போடுங்க..' என்று கேட்கும் போது, இரண்டுக்கு மேல் மாதிரி எடுத்துப் போடாத கடைப் பணியாளர்-களை நோக்கி எப்போதும் எரிச்சல் பார்வையைப் படரவிடும் வாடிக்கையாளர்-களுக்கு அந்த சலிப்புக்கான காரணம் இனி தெரியக் கூடும்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/S_jU2zKFxiI/AAAAAAAAAHU/1MKmUwe3mX4/s1600/angadi1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/S_jU2zKFxiI/AAAAAAAAAHU/1MKmUwe3mX4/s320/angadi1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;முதன்மைக் கதாபாத்திரங்களான கனி (அஞ்சலி), ஜோதிலிங்கம்(மகேஷ்), கங்காணி (இயக்குநர் ஏ.வெங்கடேஷ்), அண்ணாச்சி (பழ.கருப்பையா) மற்றும் கனியின் தோழியாக வந்து இறந்துபோகும் செல்வராணி, மாரிமுத்து ஆகியவற்றை ஏற்றிருக்கும் அனைவரும் வெகு அழகாக தங்கள் பங்கைச் செய்துள்ளனர். வீட்டு வேலைக்கு என்று விடப்பட்டுள்ள கனியின் தங்கை பருவமடைந்துவிட அதை தீட்டு என்று நாய் கட்டியிருக்கும் இடத்திற்கு அருகில் அடைத்து வைத்திருக்கும் ஆச்சாரமான மாமியின் மனிதாபிமானம்(?!) இளங்குருத்துகள் சந்திக்கும் சொல்லொண்ணா சிக்கல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. வேலைக்கு வந்த இடத்தில் விருப்பம் ஏற்பட்டு வேலைக்கு பங்கம் வந்துவிடாமல் தவிக்கும் தவிப்பு, கடுமையான சூழலில் வெளி-யேற்றப்பட்டு, இரவு தங்குவதற்கு இடமின்றி பாதுகாப்பற்ற சூழலில் அலைந்து திரிதல் என இருட்டுப் பக்கங்களிலிருந்து விடுபட்டு, ரிமோட் கவர் விற்றுக் கிடைத்த வருவாயில் மகிழ்கின்றனர் கனியும், லிங்குவும் (ஜோதிலிங்-கமும்). கட்டட வேலை செய்வோர் இரவு உறங்கும் உதயம் தியேட்டர் அருகில் சாலைக்கு வந்து அங்கு தங்கள் இருப்பிடத்தை அமைத்துக்கொள்கின்றனர்.&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/S_jVg9jgVPI/AAAAAAAAAHs/JusaLXc7Yw8/s1600/angadi-theru105.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/S_jVg9jgVPI/AAAAAAAAAHs/JusaLXc7Yw8/s400/angadi-theru105.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;இரவு ரம்மியமானது சிலருக்கு; நிம்மதியானது சிலருக்கு; இனிமையானது சிலருக்கு! அதிலும் கொசு, மின்வெட்டு என்று கொஞ்சம் இடைஞ்சல் ஏற்பட்டாலும் சகலரையும் சபிக்கிறோம். ஆனால், இரவு படுக்க இடமின்றி, இன்றைக்கு உறக்கம் சாலையிலா, பாலத்துக்கு அடியிலா, சாக்கடைக்குப் பக்கத்திலா என்று சாக்குப்பையைத் தேடி அலையும் ஏதுமில்லா-தோருக்கு? இதற்கு நடுவில் தான் அவர்களின் காதலும், வாழ்க்கையும். ஒரே காட்சிதான் உலுக்குகிறது உண்மை. சாலையோரம் படுத்துறங்கும் தொழிலாளர்-களின் மீது லாரி ஏறி ரத்தச் சகதியாய் மாறிய இடத்திலிருந்துதான் தொடங்குகிறது படம். இரண்டாண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த நிகழ்வுதான்! ஆனால், அதை கதாநாயகன் கனன்று எழுவதற்கான காரணமாகக் காட்டி கதநாயகனை உயர்த்திப்பிடிக்கும் வழக்கமான படங்களைப் போலல்லாமல், மனதில் தைக்கும் விதமாக அந்த உண்மையை உணர்த்தியிருக்-கிறார். கால்களை இழந்து நிற்கும் சேர்மக்-கனியைத் தன் துணையாக ஏற்று, வாழ்க்கையைத் தங்களை நம்பித் தொடங்குகின்றனர். அடுத்தவர் கடையில் வேலை தேடித் தேடி அலையாமல், தொழில் செய்யத் தொடங்கி ஒரு நேர்மறையான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார்.&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/S_jVg9jgVPI/AAAAAAAAAHs/JusaLXc7Yw8/s1600/angadi-theru105.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இந்த நேரத்தில் நாம் சிந்திக்க வேண்டிய மற்றொன்று - அமைப்பு சாராத இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை. பணி நிரந்தரம், உரிய ஊதியம், உரிமைகளைக் கேட்கக் கூட முடியாமல் தவிக்கும் அல்லது தங்களுக்கென்று உரிமைகள் இருக்கின்றன என்பது கூடத் தெரியாத இந்தத் தொழிலாளர்களுக்காக ஒரு குரல் எழும்ப வேண்டியதன் அவசியத்தையும் இப்படம் உணர்த்துகிறது. செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் என்பது கற்பனைப் பெயராக இருக்கலாம்; அல்லது ஏதோ ஒரு கடையை உங்களுக்கு நினைவுபடுத்துவதாக இருக்கலாம். ஆனால் இது ஏதோ ஒரு கடையில் மட்டும் நடப்பதல்ல; ரங்கநாதன் தெருவின் கதை மட்டுமல்ல என்பதை நாம் உணர வேண்டும். தமிழரின் வாழ்க்கையைப் பதிவு செய்யத் தவறிய தமிழ் சினிமாக்களின் மத்தியில், முக்கிய பதிவுகளில் ஒன்றாக வெளிவந்திருக்கிறது அங்காடித் தெரு.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/S_jVe9UpZmI/AAAAAAAAAHk/RaTI8XaDAr0/s1600/vasanthabalan-29-04-08.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="143" src="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/S_jVe9UpZmI/AAAAAAAAAHk/RaTI8XaDAr0/s200/vasanthabalan-29-04-08.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;வாழ்க்கையின் பக்கங்களில் வெகு இயல்பாக நாம் கடந்துபோகும், காண மறுக்கும், உணராமல் தவிர்க்கும், நெஞ்சைச் சுடும் நிஜங்-களை இயல்பான கதையோட்டத்தில் அமைந்த நேர்த்தியான திரைக்கதையோடு கண் முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் வசந்த பாலன். வரலாறுகள் எல்லாம் வெற்றிபெற்றோரைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும்போது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டத்திலும் தோல்வியடைந்தவனைப் பற்றிப் பதிவு செய்த இவரது "வெயில்" திரைப்படம் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த புதிய பரிமாணம். 'அங்காடித் தெரு' வசந்தபாலனுக்கு ஒரு புதிய பரிணாமம்.&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: right;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099;"&gt;- சமா.இளவரசன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: right;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: black; font-size: 12px; line-height: normal;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;h3 style="color: #0066cc; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; font-weight: normal; line-height: 20px; text-align: right;"&gt;&lt;a href="http://unmaionline.com/2010/may/01-15_2010/page13.php"&gt;உண்மை மே 01-15 2010&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35683786-2950422356473167289?l=ulagacinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/2950422356473167289/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35683786&amp;postID=2950422356473167289' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/2950422356473167289'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/2950422356473167289'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/2010/05/blog-post.html' title='அங்காடித் தெரு'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/S_jXiU6LswI/AAAAAAAAAH0/gxvQQdsys2E/s72-c/angadi-theru-01.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35683786.post-3244431351229765606</id><published>2009-11-05T19:31:00.007+05:30</published><updated>2009-11-05T20:24:55.339+05:30</updated><title type='text'>பேராண்மை: சமூகநீதியின் வெற்றி!</title><content type='html'>&lt;div align="justify"&gt;தமிழ் அல்லது இந்திய சினிமாக்களைப் பொறுத்தவரை காடுகளும் மலைகளும், மலை சார்ந்த பகுதியும் ஒன்று நாயகன் நாயகி காதல் காட்சிக்குப் பயன்படும் அல்லது, திகில் காட்சி, சண்டைக் காட்சிகளுக்குப் பயன்படும். அவ்வாறே, மலைவாசி பூர்வகுடி மக்கள் என்போர் "ஜும்பாலே.. ஜும்பாலே.." பாடியபடி நடனமாடி நாயகன் நாயகிக்கு மாலை சூடவோ, அல்லது நகைப்புக்குரிய மனிதர்களாக காட்டவோ பயன்படுவர். &lt;/div&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/SvLddOeYdoI/AAAAAAAAAG0/-Bf8U78jIsw/s1600-h/Peraanmai-Wallpaper-Stills-0010.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5400622397342119554" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/SvLddOeYdoI/AAAAAAAAAG0/-Bf8U78jIsw/s400/Peraanmai-Wallpaper-Stills-0010.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div align="justify"&gt;பேராண்மை' படமும், காட்டையும், காட்டு மக்களையும் சுற்றித்தான் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தமிழ்ப் படங்கள் காணாத நாயகன், காணாத இடங்கள் என ஒவ்வொன்றிலும் வேறுபட்டு நிற்கிறது படம். திரைத் தொழில்நுட்பமும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சமூக அக்கறையும் கொண்ட 'மக்கள் இயக்குநர்' ஜனநாதனின் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் 'பேராண்மை'. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்.சி.சி. பயிற்சிக்காக மலைப்பகுதிக்கு வருகிறார்கள் கல்லூரி மாணவிகள். அவர்களின் பேராசிரியராக ஊர்வசி. அக்காட்டுப் பகுதிக்கு ரேஞ்சராக கணபதி ராம் என்ற கதாபாத்திரத்தில் பொன்வண்ணன். 2000 ஏக்கர் காட்டுக்கு பொறுப்பாளராகவும், மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பவராகவும் மலைவாழ் சமூகத்திலிருந்து படித்து முன்னேறி பதவிக்கு வந்திருக்கும் இளைஞர் துருவனாக ஜெயம் ரவி. அலுவலகப் பணியாளராக வடிவேலு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5400622967932387858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 302px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/SvLd-cFtAhI/AAAAAAAAAHE/dTZhxydpd7s/s400/Peranmai-Stills-014.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மாணவிகள் பயிற்சிக்கு வரும் வழியில், மலை வாழ் மக்களுடன், கோவணம் தரித்தபடி எருமை மாட்டுக்கு பிரசவம் பார்க்கும் துருவனைப் பார்க்கிறார்கள். பின்னர் அவரே தங்களுக்கு பயிற்சியாளராக வருவது கண்டு 'இந்தக் காட்டுவாசியா நமக்கு கற்றுத் தருவது? ரிசர்வேசன் கோட்டாவில படிச்சுட்டு வந்த இவனுக்கு என்ன தெரியும்?' என்று வெறுப்புக் கொள்கிறார்கள் அதில் சில மாணவிகள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;எப்படியேனும் துருவனை தங்களுக்கு பயிற்சியளிப்பதில் இருந்து மாற்றிவிட வேண்டும்' என்று அய்ந்து மாணவிகள் புகார் அளிக்கவும், பழி சுமத்தவும் செய்கிறார்கள். ஏற்கெனவே துருவனின் மீது ஜாதி ரீதியாக வெறுப்பும் ஏளனமும் கொண்டிருக்கும் கணபதிராம் அதனைப் பயன்படுத்தி துருவனை மட்டம் தட்டவும், தண்டனை வழங்கவும் முன்வருகிறார். எதையும் பொறுமையுடன் சமாளிக்கும் துருவன், முதல் கட்டப் பயிற்சி முடித்து காட்டுக்குள் செல்லும் பயிற்சிக்காக மாணவிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, சரியாகப் பயிற்சி எடுக்காத அந்த அய்ந்து மாணவிகளுக்குத் தான் பயிற்சி தேவை என்று அவர்களையே தேர்ந்தெடுக்கிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அதே வேளையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை இயற்கை வேளாண்மைக்கு உதவுவதற்காக பசுமை -1 என்ற ராக்கெட்டை விண்வெளியில் செலுத்த இருக்கிறது. இயல்பாகவே குறும்புத் தனமும், துருவன் மேல் அசூயையும் கொண்டுள்ள மாணவிகள் (துருவன் மீது நேசப் பார்வை வீசும் அஜிதா தவிர), துருவனின் பேச்சைக் கேட்காமல் செயல்பட்டதில், வந்த வாகனத்தையும் இழந்து, மாலையே பயிற்சியகத்திற்கு திரும்ப முடியாதபடி நடுக்காட்டில் மாட்டிக் கொள்கிறார்கள். அவ்விரவில், மனித நடமாட்டமற்ற காட்டுப்பகுதியில், இரண்டு வெள்ளைக்காரர்கள் உலாவுவதைப் பார்க்கும் ஒரு மாணவி அதுகுறித்து துருவனிடம் சொல்ல, அவர்கள் இருவரல்ல... 16 பேர் இருப்பதைக் காண்கிறார்கள். அவர்களின் திட்டம் ராக்கெட் ஏவுவதைத் தடுப்பதாக இருக்கும் என்பதை ஊகிக்கும் துருவன், மாணவிகள் அய்வரின் துணையுடன் அதை முறியடிக்கத் துணிகிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;உடனடித் தொடர்போ, தகவலோ இன்றி, காட்டுக்குள் சென்ற துருவனும் மாணவியரும் திரும்பி வராததால், துருவன் மீது புகாரை வலிந்து பெற்றுக் கொண்டு, படையுடன் காட்டுக்குள் நுழைகிறார் கணபதிராம். மழைவாழ் மக்களின் இருப்பிடத்திலிருந்து அவர்களை விரட்டியும், தகவல் சொல்ல வந்து சேற்றில் சிக்கி இறந்து போன மாணவி அஜிதாவின் பிணத்தைக் காட்டி, துருவனை சுடுவதற்கு அனுமதி வாங்கியும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மறுபுறம் நான்கு மாணவிகளுடன் தன்னால் இயன்ற அளவு, சர்வதேச கூலிப் படையின் சதியைத் தடுத்து நிறுத்த முயல்கிறார் துருவன். இரண்டு மாணவிகளின் உயிரைப் பலி கொடுத்து, தங்கள் உயிரைப் பணயம் வைத்து நாட்டுக்காக துருவன் உள்ளிட்டோர் போரிடுகிறார்கள்; முடிவில் அவர்கள் முயற்சி வெற்றிபெறுகிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5400623364676843826" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/SvLeViE8-TI/AAAAAAAAAHM/q1nFdfYp21c/s400/peranmai_wallpaper_poster_01.jpg" border="0" /&gt; &lt;div align="justify"&gt;கணபதிராம் வீரதீரச் செயல்களுக்கான விருது பெறுகிறார். அடுத்த கல்லூரி மாணவிகளின் பயிற்சியைத் தொடங்குகிறார் துருவன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒரு வேளை இந்தக் கரு விஜயகாந்த் கையிலோ, மற்ற இயக்குநர்கள் கையிலோ கிடைத்திருந்தால், சர்வதேச கூலிப்படை- பாகிஸ்தான் சதியாகியிருக்கும். நாயகன் மீதான வெறுப்பு கல்வி அறிவற்ற ஏழை என்ற அளவில் மொன்னையாக காட்டப்பட்டிருக்கும். நாயகிகளின் கனவுப் பாட்டு இரண்டு மூன்றாவது இருந்திருக்கும். அய்யய்யோ... இன்னும் என்னவெல்லாம் நடந்திருக்குமோ நினைக்கவே பயமாக இருக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சரி, ஒரு திரைப்படம் என்ற அளவில், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களின் பணியும் வியக்க வைக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம் என்று அனைவரும் வாயில் படம் எடுத்துக் கொண்டிருக்க, உண்மையில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இணையான வியத்தகு காட்சிகளோடு, அதை சத்தமில்லாமல் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர் ஜனநாதன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பொத்தாம் பொதுவான பார்வையில்லை. எல்லா ஆயுதத்தையும், எதற்கென்றே தெரியா மல் பயன்படுத்தும் படங்கள் மத்தியில், ஒவ்வொரு ஆயுதத்தையும் எதற்கு இது, எப்படிப் பயன்படுத்துவது என்பது வரை சொல்லிக் காட்டுவது ஒன்றே மற்றவற்றிலிருந்து இப்படத்தை வேறுபடுத்திக் காட்டிவிடும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி என்ன இருக்கிறது இந்தப் படத்தில்? நிச்சயம் இருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;உயிரியல் ஆயுதங்களைப் பரிசோதிக்கும் கூடமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை ஈ' படத்தில் சொன்னது போல, வளரும் நாடுகளை ஒழிக்க நினைக்கும் சர்வதேச முதலாளித்துவத்தை உரித்துக் காட்டும் சர்வதேச அரசியல் குறித்த சிந்தனை இருக்கிறது இந்தப் படத்தில்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இருக்கிறது இந்தப்படத்தில். ஆம். இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக இயற்கையோடு வாழ்ந்துவரும் மலைவாழ் மக்கள் மீது, மண்ணின் மைந்தர்கள் மீது வந்தேறிகள் நடத்தும் வன்முறை பதிவாகியிருக்கிறது இந்தப் படத்தில்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அடக்கி வைக்கப்பட்ட அறிவை வெளிக்கொண்டு வந்தாலும், அதன் மீது தங்கள் அதிகாரத்தைப் பாய்ச்சி நசுக்க நினைக்கும் அதிகார மனநோயாளிகளின் ஆரிய சர்வாதிகாரத்தின் உண்மை முகம் வெளிச்சமிடப்படுகிறது இந்தப் படத்தில்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;உழைப்பைச் சுரண்டிச் சுரண்டியே உயர்ந்து வந்த உலுத்தர்களின் அடையாளம் காட்டப்படுகிறது இந்தப் படத்தில்! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"செருப்புத் தைக்கிறவன் பிள்ளை செருப்பு தான் தைக்கணுமா? மலம் எடுக்கிறவன் பிள்ளை மலம்தான் எடுக்கணுமா? நாங்கள் லாம் படிச்சு அதிகாரியா வரக்கூடாதா?" என்று காலம் காலமாய் தேங்கி நிற்கும் கேள்வி உரத்து கேட்கப்படுகிறது இந்தப் படத்தில்! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஒரு படத்தில் இத்தனையுமா? ஆம்.. இருக்கிறது... இன்னும் இருக்கிறது! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;காரணம்... இதையெல்லாம் சொல்லத் தெரியும் என்பதையும், பன்னீர் செல்வம்' என்று பெயரிட்டு கறுப்பான ஆளைக்காட்டி லஞ்சப் பேர்வழி யாகவும், அங்கவை, சங்கவை என்று கறுப்பான மகளிரை நகைப்பிற்கிடமாகவும் காட்டும் அரசியல் சுஜாதாக்களுக்கு தெரியுமென்றால்... &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கறுப்புச் சட்டை அணிவித்து ரவுடி அரசியல்வாதி என்று பாரதிராஜாவை நடிக்க வைக்கும் அரசியல் மணிரத்னங்களுக்கு தெரியுமென்றால்... அதே வழியில் 'டாக்டர் ராம கிருஷ்ணன்' என்று பன்னாட்டு மக்கள் விரோத அறிவியல் ரவுடிகளையும், 'கணபதி ராம்' என்று ஜாதி வெறியர்களையும் அடையாளம் காட்டும் அரசியல் எங்களுக்கும் தெரியும் என்று புரிய வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"அகமும் புறமும் வென்றவன்' - இது தான் பேராண்மைக்கு ஜனநாதன் தந்த விளக்கம்" என்று கவிப்பேரரசு வைரமுத்து சொன்னார். அப்படி ஒரு பாத்திரப் படைப்புதான் துருவன். 'நிர்வாணமாய் வரச் சொன்னான்' என்று திட்டமிட்டு குற்றம் சாட்டி, தண்டனை பெற்றுத் தரும்போதும் பொறுமை காத்து, தண்டனையை ஏற்றுக் கொள்ளும் துருவன், பின்னொரு கணத்தில் சொல்வார், "எங்க மக்களுக்கு தலைப்பிரசவம் பார்க்கிறதுக்கு என்னைதான் கூப்பிடுவாங்க.. என்னுடைய பார்வையில் நிர்வாணம்கிறதே வேற". &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"அய்ந்து பெண்களை தனியாய் ஒரு ஆணுடன் அனுப்பும்போது நம்பிக்கையாய் அனுப்ப துருவனை விட்டால் யார் இருக்கிறார்" என்று கல்லூரிப் பேராசிரியையின் நம்பிக்கையும், துருவனை 'ரேப்பிஸ்ட்'டாக சித்தரிக்க முயலும் கணபதிராமிடம் "கற்பழிப்புங்கிறதே எங்க இனத்தில கிடையாது சார்" என்று பதறும் வடிவேலுவின் தவிப்பும் அகத்தை வென்ற துருவனின் பேராண்மையைப் படம் பிடிக்கின்றன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மாணவிகளின் குறும்புத் தனத்தைக் காட்டவும், இன்றைய இளைய தலைமுறை யின் போக்கைக் காட்டவும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் இரட்டை அர்த்த வசனங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. பொறுத்துக் கொள்ள முடியவில்லை; தவிர்த்திருக்கலாம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மலைவாழ் மக்கள் மீதுதான் இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பது வரலாறு நமக்குக் காட்டும் உண்மை. பூர்வகுடி மக்களை, அவர்களின் மண்ணிலிருந்து விரட்ட அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒரு காட்சியில் உணர்த்தி விடுகிறார். துருவன் மீது பழிபோட்டு, அவனைத் தேடுகிறோம் என்று பழங்குடி மக்களை ஊரைக் காலி செய்யச் சொல்லும்போது அதிகாரம் நிகழ்த்துகிற வன்முறை கோபத்தையும், கண்ணீரையும் ஒருங்கே வரவழைக்கிறது. 'நீங்கள்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டா நாங்க என்னடா பண்றது?' என்று புத்தகங்களைத் தூக்கிப் போட்டு எரிக்கும்போது பார்ப்பனீயத்தின் விஷ நாக்குகள் எவ்வளவு தூரம் நீண்டிருக்கிறது என்பது புரியும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"படிக்கலைன்னா தான் அடிப்பாங்க... இவங்க படிச்சா அடிக்கிறாங்க" என்றபடி கரும்பலகையைக் காப்பாற்றும் குழந்தைகளின் வசனம், ஏதோ சாதாரணமானதல்ல... முதல் தலைமுறையார் படிக்க ஆவல் கொண்டு பள்ளிக்குப் போன ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட இனக் குழந்தையும் அனுபவித்த கொடுமை யின் வெளிப்பாடு. அத்தனை வன்முறையையும் நிகழ்த்திவிட்டு, "இப்போ தெரியுதாடா 'அரசு, அரசாங்கம், அதிகாரம்'ன்னா என்னன்னு?" என்று கொக்கரிக்கும்போதும், ஜாதியை வைத்து இழிவு செய்யும் போதும், துருவனின் வெற்றியத் திருடி கணபதிராம் விருது வாங்கும்போதும் திரையரங்கில் மக்களின் கோபத்தின் வெப்பத்தை உணர முடிகிறது. ஆங்காங்கே விளையாடியிருக்கும் சென்சாரின் கத்திரிக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணத்தை பெட்டிச் செய்தியில் காண்க.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஒவ்வொரு காட்சியிலும், ஏதாவதொன்றச் சொல்லிவிடும் தவிப்பு இருக்கிறது இயக்குநரிடம். ஆனால் பிரச்சாரம் என்ற பாணியிலன்றி, வெகு இயல்பாகச் சொல்லிச் செல்கிறார். பொதுவுடைமையின் அடிப்படையை இவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியுமா? உழைப்புதான் அத்தனைக்கும் காரணம் என்பதை மிகமிக எளிதாக அரசியல் பொருளாதாரம் என்று வகுப்பாகவே எடுத்துவிடுகிறார். (போனஸ், படி உயர்வு பிரச்சினைகளைத் தாண்டி கம்யூனிஸ்டுகள் கூட இத்தனை ஆண்டுகளில் இதைச் சொல்லியிருப்பார்களா என்பது சந்தேகமே!) &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"தமிழனோட வீரத்தை உலகமே பார்த்து வியக்குது" என்ற வசனத்தின் அர்த்தத்தை விளங்கிக் கொண்டு திரையரங்கில் ஆரவாரம் கேட்கிறது. இந்திய நாட்டைக் காப்போம் என்ற உறுதியெல்லாம், இங்கு வாழும் உழைக்கும் மக்களைக் குறிக்கிறது என்பதையும், இந்தியா வல்லரசாவதெல்லாம், விவசா யத்தை நம்பி வாழும் மக்களை விட்டுவிட்டு நடக்காது என்பதையும் உணர்த்துகிறார். இயற்கை வேளாண்மை, மலட்டு விதைகள், பசுமைக்காக ராக்கெட், உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் என்று இந்த வார்த்தைகளை யெல்லாம் கேட்டேயிராத இளைஞர்களின் காதுகளில் சங்காக ஊதி சர்வதேச அரசியலைப் படிக்கச் சொல்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "காட்டுப் புலி அடிச்சு" பாடலின் அந்தக் கடவுள் பொறக்கும் முன்னே இந்த பூமிக்கு வந்தவுக' உள்பட வரிகள் ஒவ்வொன் றும் குறிப்பிடத்தக்கவை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"கிராமப் பெண்களுக்கு மாராப்பை விலக்கி விலக்கியே காலம் போச்சு; நகரத்துப் பெண்களுக்கு முடியை ஒதுக்கிவிட்டே காலம் போச்சு" என்று தந்தை பெரியாரின் குரல் தான் துருவன் வழி கேட்கிறது. காட்டின் ரகசியத்தை, போரியல் நுணுக்கங்களை சொல்லி வரும் போதும், கன்னிவெடி குறித்து மனிதநேயர் களின் கருத்தை விதைக்கிறார். தவறான கருத்து எங்கேயும் வந்துவிடக்கூடாது என்பதில் இயக்குநரின் அக்கறை புலப்படுகிறது. இன்னும் எடுத்துச்சொல்ல ஏராளம் இருக்கிறது.. பக்கம்தான் இல்லை! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இழிவுபடுத்தப்படும்போதெல்லாம் துருவன் காட்டும் பொறுமையை யாரேனும் கேள்விக்குள்ளாக்கலாம். காலமெல்லாம் தன் பிரச்சாரத்திற்கு வந்த எதிர்ப்புகளையும், தனக்கு வந்த இழிவுகளையும் பொறுமையாகக் கையாண்ட தந்தை பெரியாரின் பொது வாழ்க்கை முறையை எண்ணிப்பார்த்தால் துருவனின் நியாய புலப்படும். ஆனால், "ரிசர்வேசன் கோட்டாவில படிச்சு வந்த உங்களுக்கு என்ன தெரியும்?னு நினைச்சுட்டோம் சார். எங்களை மன்னிச்சுடுங்க" என்று சொல்ல வைக்கிறாரே அங்குதான் இருக்கிறது முழுமையான வெற்றி!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இடஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்தியும், திரித்தும், விளங்காமலும் படங்கள் வெளிவந்துள்ள சூழலில் இடஒதுக்கீட்டின் பயனை, தகுதி-திறமை என்ற மாய்மால வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் வன்மத்தை எடுத்துக் காட்டி வெளிவந்திருக்கும் பேராண்மை படத்தை பார்ப்பதும், பரப்புவதும் சமூகநீதியிலும், ஒடுக்கப்பட்டோர் உரிமையிலும் அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். &lt;/div&gt;&lt;div align="right"&gt;-சமா இளவரசன்&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;div align="justify"&gt;&lt;blockquote&gt;&lt;blockquote&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சென்சாருக்கு நன்றி!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000066;"&gt;ரிசர்வேசன் கோட்டாவில் படித்து வந்தவன் என்று கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு கணபதிராமும், மாணவிகளும் துருவனைப் பார்த்து கேலிசெய்யும் வசனங்களைப் பல இடங்களில் ஊமையாக்கி இருக்கிறது சென்சார் போர்டு. நீ எடுத்த மதிப்பெண் எவ்வளவு? என்று கேட்டு, மாணவிகள் மத்தியில் மட்டம் தட்ட நினைக்கும்போதும், இவங்கள்லாம் காட்டுமிராண்டித் தனமாத் தான் நடந்துக்குவாங்க என்று சொல்லும்போதும் அடுத்தடுத்த வசனங் களை வெட்டியிருக்கும் சென்சார் போர்டுக்கு, அவ்வசனங்கள் எம்மக்களை இழிவுபடுத்தும் என்பதல்ல அக்கறை. அவற்றையெல்லாம் கேட்டு விட்டால் எங்கே மக்களுக்கு கோபம் வந்து விடுமோ என்பது தான் கவலை. அந்த வகையில் சென்சார் போர்டுக்கு நாம் நமது நன்றியைச் சொல்லியே ஆக வேண்டும். காரணம், அப்படியே வசனங்கள் வந்திருந்தால் கூட காதில் விழாமல் போயிருக்கலாம்; கவனம் பெறாமல் போயிருக்க லாம். கத்திரிபட்டதால் வசனங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கும் என்று புரிந்து கொள்ளப் பட்டதாலும், அதை வெட்டியிருக்கிறார்களே என்ற கோபத்தாலும், திரையரங்குகளில் எதிர்க் குரல்களைக் கேட்க முடிகிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000066;"&gt;'பராசக்தி'யில் "அம்பாள் எந்தக்காலத்திலடா பேசினாள்; அது பேசாது- கல்" என்று முழுதாய் சொல்ல விட்டிருந்தால் சிவாஜி கணேசன் மட்டும் தான் சொல்லியிருப்பார். ஆனால் 'கல்' என்ற வார்த்தைக்கு மட்டும் வெட்டுக் கொடுத்து, படம் பார்த்த அனைவரையும் 'கல்' என்று சொல்ல வைத்த பெருமை எப்படி சென்சாரையே சாருமோ அப்படித்தான் இந்தப்படத்திலும்! 'சுரணையற்ற எங்கள் மக்களுக்கு திரையரங்கிலும் கோபம் வருமா?' வரவைத்த சென்சார் துறைக்கு நமது நன்றியைச் சொல்லாவிட்டால் நாம் நன்றி கொன்றவர்களாவோம்...!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35683786-3244431351229765606?l=ulagacinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/3244431351229765606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35683786&amp;postID=3244431351229765606' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/3244431351229765606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/3244431351229765606'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/2009/11/blog-post.html' title='பேராண்மை: சமூகநீதியின் வெற்றி!'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/SvLddOeYdoI/AAAAAAAAAG0/-Bf8U78jIsw/s72-c/Peraanmai-Wallpaper-Stills-0010.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35683786.post-4674807090909962927</id><published>2009-06-11T21:14:00.005+05:30</published><updated>2009-10-28T17:09:20.704+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலம்'/><title type='text'>ஸ்லம்டாக் மில்லியனர்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/Sugr4hnKe6I/AAAAAAAAAGk/4J5NN9ISMUM/s1600-h/slumdog__1231740878_3293-1.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 249px;" src="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/Sugr4hnKe6I/AAAAAAAAAGk/4J5NN9ISMUM/s400/slumdog__1231740878_3293-1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5397612403498843042" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"   style="  ;font-family:Arial;font-size:12px;"&gt;&lt;h3 align="center"   style="text-align: justify;  font-weight: normal; line-height: 20px; color: rgb(0, 102, 204); font-family:Arial, Helvetica, sans-serif;font-size:12px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); "&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஊர் உலகமெல்லாம் பேசப்படும் பெயராகியிருக்கிறது ஸ்லம்டாக் மில்லியனர். கோல்டன் க்ளோப், பாஃப்டா என்று விருதுகளை அள்ளிக் குவித்த ரஹ்மான் அமெரிக்-காவின் உச்ச விருதான ஆஸ்கார் விருதுகளையும் இரு கைகளில் சுமந்து வந்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் இந்தியாவின் ஆஸ்கார் கனவு ஒரு தமிழனால் நனவாகியிருக்கிறது என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு இருந்த அதே நேரத்தில் எதிர்ப்புகளும் இருந்தன. அவை இப்படத்தின் புகழை வைத்து தாங்கள் புகழடைய நினைத்தவர்களின் செயலாகவும், புகழ் பெற்ற நகரின் பெருமையைக் குலைக்கிறது என்ற புலம்பலாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"   style="  ;font-family:Arial, Helvetica, sans-serif;font-size:12px;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;படத்தின் பெயரை மட்டும் கேட்டுவிட்டு,&lt;/span&gt; படம் என்ன சொல்ல வருகிறது என்றே தெரிந்து கொள்ளாமல் கூச்சலிடும் சிலரை நாம் கண்டிருக்கிறோம். ஹேராம் படத்துக்கு காந்தி எதிர்ப்பு என்றும், சண்டியர் படத்துக்கு ஜாதியப் பார்வை என்றும் படப்பிடிப்பு நடக்கும்போதே எழுந்த எதிர்ப்புகளைப் போலத்தான் இப்படத்துக்கும் தலைப்பினால் எதிர்ப்பு வந்தது. ஸ்லம்டாக் - சேரி நாய் என்று இழிவுபடுத்தியிருப்பதாக எதிர்ப்புக் கிளம்பியது. ஸ்லம் டாக் என்று இழிவாய்ப் பேசுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவது இழிவாகாது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;p face="Arial, Helvetica, sans-serif" size="12px" style="  line-height: 20px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; "&gt;சற்சூத்ராய நமஹ என்று பார்ப்பனர்கள் சொன்னதற்கும், சூத்திர மக்களே சுரணை பெறுங்கள்! என்று நாம் சொல்வதற்கும் வேறுபாடு உண்டு.&lt;/p&gt;&lt;p style="font-size: 12px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; "&gt;கதை இதுதான்! விமான நிலையத்தின் ஓடுதளத்தில் விளையாடும்போது சேரி நாய்களே என்று போலீசாரால் விரட்டப்படும் சேரிச் சிறுவர்களில் ஒருவன், வளர்ந்து இளைஞனானபின் க்ரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலைச் சொல்லி வெற்றியின் விளம்பில் கோடீஸ்வரனாக நிற்கும்போதும், உனக்கெப்படி பதில் தெரியும்? என்று அடித்து நைத்து விசாரிக்கப்-படுகிற நிலையைத்தான் படம் பிடிக்கிறது ஸ்லம்டாக் மில்லியனர்.&lt;/p&gt;&lt;p style="font-size: 12px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; "&gt;கால் சென்டரில் தேநீர் கொடுக்கும் இளைஞனான ஜமால் எப்படி பலரும் வெல்லமுடியாத க்ரோர்பதி நிகழ்ச்சியில் வெற்றி பெற முடியும்? அவன் ஏதோ சூது செய்கிறான் என்று சந்தேகம் ஏற்பட்டு காவல்துறையிடம் அவனை ஒப்படைத்து முறைப்படி(!) விசாரணை நடக்கிறது. இந்தியாவின் ஆயிரம் ரூபாய் நோட்டு எந்த வண்ணத்திலிருக்கும் என்பது கூடத் தெரியாத ஓர் இளைஞன், எப்படி அமெரிக்காவின் 100 டாலர் நோட்டில் இருக்கும் படம் பெஞ்சமின் பிராங்க்ளின் என்று சரியாகச் சொல்ல முடியும்? இப்படி எழும் கேள்விகளோடு விசாரிக்கும் காவல் அதிகாரியிடம், தனது ஒவ்வொரு பதிலுக்கும் பின்னால் ஒளிந்திருக்கும் தன் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கிறான் ஜமால். இதனூடாகப் பயணிக்கும் திரைக்கதை, ஜமாலின் சிறுவயது தொடங்கி, நிகழ்காலம் வரையிலான அவனது வாழ்வின் வழியாக முன்பின்னாக மாறி மாறிக் குழப்பமின்றி நுழைந்து செல்கிறது. விகாஸ் ஸ்வரூப் எழுதிய க்யூ அண்ட் ஏ என்ற நாவலைத் திரைக்கதையாக்கிய சிமன், படத்தை இயக்கிய டேனி போய்ல் இருவரும் மும்பை மாநகரத்தின் சேரிப் பகுதிகளையும், அம்மக்களின் வாழ்க்கையையும், ஆர்ப்பாட்ட-மின்றியும் வலிந்து திணிக்காமலும் எடுத்துக்-காட்டியிருக்கிறார்கள். (இருவருக்கும் ஆஸ்கர் கிடைத்திருப்பது கூடுதல் செய்தி).&lt;/p&gt;&lt;p style="font-size: 12px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; "&gt;&lt;span class="Apple-style-span"   style="  line-height: normal; font-family:Georgia, serif;font-size:16px;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/Sugr4CE-lTI/AAAAAAAAAGc/Ui-mOzUNazY/s1600-h/425.slumdog.millionaire.cast.012509.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/Sugr4CE-lTI/AAAAAAAAAGc/Ui-mOzUNazY/s400/425.slumdog.millionaire.cast.012509.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5397612395033957682" style="cursor: pointer; width: 400px; height: 296px; " /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-size: 12px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; "&gt;ராமனின் வலதுகையில் என்ன ஆயுதம் இருக்கும்? - இஸ்லாமியனான ஜமாலிடம் இக்கேள்வி கேட்கப்படுகிறது. அவனது நினைவலைகள் அழைத்துச் செல்லும் இடம் - அவன் வாழ்ந்த சேரிப்பகுதி. தன்னைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த தன் அம்மா, இந்து பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் வருவதைக் கண்டு தன்னையும், அண்ண-னையும் விரைந்து செல்லுமாறு அனுப்பிய காட்சி அவன் முன் விரிகிறது. ரத்த வெள்ளத்தில் மிதக்கும் தாயை விட்டுவிட்டு, தப்பியோடும்போது, சேரியின் சந்து ஒன்றில் ராமன் வேடம் தரித்து நிற்கும் ஒரு குழந்தையின் கையில் வில்லும் அம்பும் இருந்ததைக் கண்ட நினைவு வருகிறது. அந்தக் கேள்விக்கான சரியான பதிலாக அது இருக்கிறது.&lt;/p&gt;&lt;p style="font-size: 12px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; "&gt;சூர்தாஸின் தர்ஷன் தோ கன்ஸ்யாம் பாடல் குறித்த கேள்வி சேரிச் சிறுவர்களைப் பிச்சைக்காரர்களாக்கும் கூட்டம் பற்றிய நினைவையும், முதல் வணிகத் துப்பாக்கி குறித்த கேள்வி- தன் தோழி லதிகாவை விபச்சார விடுதியிலிருந்து மீட்கும் காட்சியையும், 100 டாலர் நோட்டு பற்றிய கேள்வி- குருடாக்கப்பட்டு பிச்சைக்கு அனுப்பப்பட்ட சிறுவன் பற்றிய காட்சியையும் நினைவூட்டுகிறது.&lt;/p&gt;&lt;p style="font-size: 12px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; "&gt;&lt;br /&gt;இப்படியே போட்டியின் ஒவ்வொரு கேள்விக்கும் அவன் விவரிக்கும் காட்சிகள் காவல் அதிகாரியைக் கரைத்துவிடுகிறது. கடைசிக் கேள்விக்கான விடையைத் தெரிந்து கொள்ள அவன் எடுக்கும் முயற்சி தொலைபேசியைப் பயன்படுத்துவது தன் அண்ணனுக்காக அவன் விடுக்கும் அழைப்பு, காதலி லதிகாவை அவன் சேர வழியமைத்துத் தருகிறது. வெற்றியைப் பற்றி கவலையில்-லாமல், மனப்போக்கில் அவன் சொல்லும் பதிலே வெற்றியைத் தந்து 2 கோடி பரிசை வெல்லச் செய்கிறது.இதே வேளையில் தமிழில் வந்திருக்கும் நான் கடவுள் படத்தின் மய்யக் கருத்தும் புறக்கணிக்கப்பட்ட ஒரு மக்கள் திரளைப் பற்றியதாக இருப்பதையும், சமூகத்தின் இருண்ட பக்கங்களின் மேல் கொஞ்சம் வெளிச்-சமிட்டுக் காட்டுவதையும் ஒரு தற்செயலான ஒற்றுமையாகக் காண முடிகிறது.&lt;/p&gt;&lt;p style="font-size: 12px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; "&gt;படிப்பறிவு அற்றவனாக இருந்தாலும், அவன் வாழ்வில் கண்டதும், கேட்டதும்தான் அவனுக்கு பதில்தர உதவுகின்றன. கேள்வி அறிவுதான் அவனை வெற்றிபெற வைக்கிறது. இதை அனைவர் மதியிலும் பதிய வைக்கிறார் இயக்குநர்.&lt;/p&gt;&lt;p style="font-size: 12px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; "&gt;அனல் பறக்கும் ஒரு திரைக்கதையில் இந்தியாவின் அவலத்தைப் பதிவு செய்ததுதான் ஸ்லம் டாக் மில்லியனரின் வெற்றி. இப்படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கவில்லை. ஆனால் அவருக்கும் படத்திற்கும் நிறைய தொடர்பு.&lt;/p&gt;&lt;p   style="text-align: center;  line-height: 20px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; font-family:Arial, Helvetica, sans-serif;font-size:12px;"&gt;&lt;span class="Apple-style-span"   style="  line-height: normal; font-family:Georgia, serif;font-size:16px;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/Sugr43HQYLI/AAAAAAAAAGs/nPSaidA99Lw/s1600-h/slum-dog-millionaire1.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/Sugr43HQYLI/AAAAAAAAAGs/nPSaidA99Lw/s400/slum-dog-millionaire1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5397612409270591666" style="cursor: pointer; width: 400px; height: 214px; " /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-size: 12px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; "&gt;அவரையொத்த கதாபாத்திரம் தான் அனில்கபூர் ஏற்றிருப்பது. அது மட்டுமல்லாமல் ஷன்ஷீர் படத்தின் நாயகன் யாரென்ற கேள்விக்குப் பதிலும் அவரே! அதைப்பற்றி ஜமால் யோசிக்கும் போது அமிதாப்பிடம் கையொப்பம் வாங்கிய நினைவு வருகிறது. மலம் கழித்துக் கொண்டிருக்கும் போது சேரிப் பகுதியில் நடக்கும் படப்-பிடிப்புக்கு வந்திருக்கும் அமிதாப்பைப் பார்ப்பதற்காக அவசர அவசரமாக மலக் குவியலுக்குள் விழுந்து எழுந்து, அதனுடனே ஓடிச்சென்று அமிதாப்பச்சனிடம் கையொப்பம் வாங்கும் காட்சி, அம்மக்களின் வாழ்க்கை எத்தகையது என்பதைக் கொஞ்சமும் மறைவின்றி நமக்குப் புரிய வைக்கிறது.&lt;/p&gt;&lt;p style="font-size: 12px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; "&gt;அமிதாப்பின் தொடர்பு அத்தோடு முடியவில்லை. மும்பையில் காட்டுவதற்கு இவர்களுக்கு இடமாயில்லை. முன்னேறிய நாடுகளுடன் நாம் போட்டி போட்டுக் கொண்டிருக்கும்போது இந்தியாவை ஏழ்மை தலைவிரித்தாடும் ஒரு மூன்றாம்தர நாடாகக் காட்டியிருக்கிறார்கள் என்று படம் குறித்த தன் அதிருப்தியை வெளியிட்டியிருக்கிறார். அதுவும் ஒரு வெள்ளைக்காரரல்லவா உரித்துக் காட்டிவிட்டார் - என்ன செய்வது? இது அமிதாப்பின் கருத்து மட்டுமல்ல. பளபளப்புச் சாலைகள், பளிங்குக் கட்டடங்கள் என பன்னாட்டு மக்கள் உலவும் வீதிகளையே உலகுக்குக் காட்டி பெருமை கொள்ள நினைக்கும் உலகம் இருட்டானதென்று கண்ணை மூடிக் கொண்டு பூனைகளாய்த் திரியும் மக்களின் கருத்தாகும்.&lt;/p&gt;&lt;p style="font-size: 12px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; "&gt;இந்நிலையில்தான் நமக்கும் ஜமாலைப் போல பழைய நினைவு ஒன்று வருகிறது. இதே குரல் சரியாக 82 ஆண்டுகளுக்கு முன்பும் ஒலித்தது. இது சாக்கடை ஆய்வாளரின் அறிக்கை என்று காந்தியார் உள்ளிட்ட அனைத்து தேசியவாதிகளாலும் முத்திரை குத்தப்பட்ட மிஸ்மேயோவின் மதர் இந்தியா வுக்கெதிரான குரல்தான் அது.&lt;/p&gt;&lt;p align="center" style="text-align: justify;font-size: 12px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; "&gt;ஜாதிக் கொடுமை, பெண்ணடிமை, கோயில்களின் இழிநிலை, குழந்தைத் திருமணம் என உண்மை இந்தியாவைப் படம் பிடித்துக் காட்டிய மேயோமீது பாய்ந்தவர்களைக் கடிந்து கொண்ட பெரியார், சாக்கடை இருப்பதால் தானே சாக்கடை ஆய்வாளரின் அறிக்கை வருகிறது. சாக்கடையைச் சரி செய்யாமல் ஆய்வாளரை நொந்து கொள்வதா? என எள்ளி நகையாடினார். கோவை அய்யாமுத்து எழுதி உண்மை விளக்கப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட மேயோ கூற்று மெய்யா? பொய்யா? நூலில் இடம் பெற்றிருக்கும் தந்தை பெரியாரின் முகவுரை - ஸ்லம் டாக் மில்லியனருக்கும் எப்படிப் பொருந்துகிறது பாருங்கள். அன்றைய அமிதாப்களின் ஆதங்கத்திற்கு பதில் இதோ பெரியார் தருகிறார்:&lt;/p&gt;&lt;p style="font-size: 12px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; "&gt;சாதாரணமாக ஒரு இந்திய மனிதன் மிஸ் மேயோ புத்தகத்தில் இந்தியர்களைப்பற்றிக் கூறியிருக்கும் குறைகளை அடியோடு மறைத்தும், மறுத்துப் பேசியும், அவ்வம்மையை சில இழிமொழிகளால் வைதும்விட்டு சும்மா இருந்து விடுவதினால் தனது நாட்டிற்கும் சமூகத்திற்கும் செய்ய வேண்டிய கடமையைச் செய்த வீரனாகிவிடுவானா? அல்லது அப்புத்தகத்தில் உள்ள குறைகளில் உண்மையானவற்றைத் தைரியமாய் ஒப்புக் கொண்டு அவைகளை இந்திய மக்களுக்கு நன்றாய் விளக்கிக் காட்டி, அக்குறைகளை ஒழிக்க முற்படுபவன் உண்மையாகத் தனது நாட்டிற்கும் சமூகத்திற்கும் செய்ய வேண்டிய தொண்டைச் செய்த வீரனாவானா? என்பதே இப்பொழுது ஒவ்வொருவரும் யோசித்து முடிவு செய்ய வேண்டிய விஷயமாகும்.&lt;/p&gt;&lt;p style="text-align: right;font-size: 12px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; "&gt;- நன்றி: உண்மை மார்ச் 1-15, 2009&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35683786-4674807090909962927?l=ulagacinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/4674807090909962927/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35683786&amp;postID=4674807090909962927' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/4674807090909962927'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/4674807090909962927'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/2009/06/blog-post.html' title='ஸ்லம்டாக் மில்லியனர்'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/Sugr4hnKe6I/AAAAAAAAAGk/4J5NN9ISMUM/s72-c/slumdog__1231740878_3293-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35683786.post-9099727019489181077</id><published>2009-03-13T00:58:00.008+05:30</published><updated>2009-03-13T02:02:30.337+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>நான் கடவுள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/Sblwpt0FCPI/AAAAAAAAAGU/11umRdZqmYU/s1600-h/nan+kadavul.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5312401097435187442" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 121px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/Sblwpt0FCPI/AAAAAAAAAGU/11umRdZqmYU/s400/nan+kadavul.jpg" border="0" /&gt;&lt;/a&gt;மனநிலை பாதிக்கப்பட்டோர், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வளர்ந்தவர், பிணம் எரிக்கும் தொழில் செய்பவர், பிழைப்புக்காகக் கஞ்சா விற்கும் பெண் என்று சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையைப் பாசாங்கில்லாமல் படம்பிடித்துக் காட்டுவன இயக்குநர் பாலாவின் படங்கள். &lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இம்முறை அவர் கோயில், குளம், சர்ச், மசூதி என்று சகல கடவுள் கடைகளின் முன்பும் தட்டேந்தியபடி தர்மம் கேட்கும் பிச்சைக்காரர்களோடு வந்திருக்கிறார். ஊர்விட்டு ஊர் வந்து, மாநிலம் விட்டு மாநிலம் வந்து தங்கள் பாவங்களைப் போக்கிப் புண்ணியம் பெறக் கடவுளைத் தரிசிக்கும் கூட்டத்தில் யாருக்கும் புரிவதில்லை வாசலில் வரிசை கட்டி அமர்ந்திருக்கும் யாருக்கும் கடவுள், தன் கடைக்கண் பார்வையை வீசி, கருணை காட்டவில்லை என்பது! இதை மண்டையிலடித்துப் புரியவைக்கிறார் பாலா.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு, தனது மகனை 14 ஆண்டுகள் காசியில் ஒரு சத்திரத்தில் விட்டுவிட்டுப் போனபிறகு மறந்தும் காசிப்பக்கம் தலைவைத்தும் படுக்காத ருத்ரனின் தந்தை (அழகன் தமிழ்மணி), காசியில் தர்ப்பணம் பண்ணும் பார்ப்பனர் உதவியுடன் கங்கைக் கரைகளில் சாமியார்கள் மத்தியில் தேடுகின்றார். எரிந்து கொண்டிருக்கும் சிதைக்கு ஆசி வழங்கியபடி அமர்ந்திருக்கும் ருத்ரா (ஆர்யா)வைப் பார்த்து, இவனே தன் மகன் என அடையாளம் காட்டுகிறார் தந்தை. 'அகோரி' எனும் சாமியார் கூட்டத்தைச் சேர்ந்தவன் ருத்ரா என்றும், அவனைப் போலிருக்கும் சாமியார் கூட்டத்தவர் உறவை அறுத்தவர்கள் என்றும் ருத்ரனின் தந்தையிடம் விளக்குகிறார் பார்ப்பனர். பின்னர் ருத்ராவின் குருவைச் சந்தித்து நிலைமையை விளக்கி தென்தமிழ்நாட்டின் மலைக்கோவில் நகரத்துக்கு அழைத்துச் செல்கின்றனர் ருத்ராவை! "எப்போது என்னிடம் திரும்பிவர வேண்டும் என்பது உனக்கே தெரியும். நானே கடவுள் (அஹம் பிரம்மாஸ்மி) என்பதை உணர்ந்தவன் நீ. உனக்கிருக்கும் உறவுகளை அறுத்து எறிந்துவிட்டு வா" என்று வழியனுப்பி வைக்கிறார் குரு.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/Sblwg65WsDI/AAAAAAAAAGE/QNuFfFMEvL0/s1600-h/Naan-Kadavul-Stills-011.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5312400946328154162" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px" alt="" src="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/Sblwg65WsDI/AAAAAAAAAGE/QNuFfFMEvL0/s400/Naan-Kadavul-Stills-011.jpg" border="0" /&gt;&lt;/a&gt;தொடர்வண்டியில் தமிழகம் வரும்போதும் வீட்டினுள் நுழைந்தபின் விநோதமாய்ப் பாக்கும் தாயை அலட்சியப்படுத்தி விட்டும் தன் போக்கில் பூஜைசெய்துவிட்டு கஞ்சா அடித்து நேரடியாகக் கடவுளாக மாறிவிடுகிறார் ருத்ரா.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம் ஊனமுற்றவர்கள், மன நிலை பிறழ்ந்தோர், கண் தெரியாதவர்கள் என மனிதர்களை தட்டிக்கொட்டி உருப்படிகளாகத் தயார் செய்து பிச்சையெடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் 'முதலாளி தாண்டவன்' மற்றும் அவன் கீழ் இருக்கும் சில்லறை ஏஜென்டுகள். இவர்களுக்கு பாதுகாப்பும் ஆள் சப்ளையும் செய்யும் காவல்துறை. இதில் ஒரு சில்லறை ஏஜென்டான முருகனின் (கிருஷ்ணமூர்த்தி) கண்ணில் பாட்டுப்பாடிப் பிச்சையெடுக்கும் நாயகி அம்சவள்ளி (பூஜா) பட, தனது உருப்படிகளுக்குள் ஒன்றாக்கிக் கொள்கிறான். கஞ்சா தேடி சாமியார்கள் உலவும் இந்த மலைக் கோயிலுக்கு வந்து அங்கேயே குடி கொண்டுவிடுகிறார் ஆர்யா. அதே மலையில் இருக்கும் மாங்காட்டுச் சாமியாரிடம் தினப்படி தன் பாவக்கணக்கைத் தீர்க்க மனறாடியபடி, தன் தொழிலைத் தொடர்கிறான் முருகன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் காவல்துறை ஆய்வாளரின் அறிமுகத்தோடு மொத்தமாக பிச்சைக்காரர்களை எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள வருகிறான் சபரி மலையின் பிச்சைக் குத்தகைதாரான மலையாளி ஒருவன். அவன் சொல்லும் யோசனை நல்லதாய்ப்பட முருகனின் கூட்டத்திலிருந்து வேண்டிய உருப்படிகளை அள்ளிக்கொள்ளச் சொல்லி அனுப்பிவிடுகிறான் தாண்டவன். ஒன்றாய்க் குடும்பம்போல இருந்து பிச்சையெடுக்கும் கூட்டத்திலிருந்து பகுதிபேர் பிரித்துச் செல்லப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு, தான் பார்த்த குருட்டுப் பெண்ணான அம்சவள்ளிக்கு பத்து லட்ச ரூபாய்க்கு வியாபாரம் பிடித்து வருகிறான் மலையாளி. மிகக் கொடூரமான முகஅமைப்பு கொண்ட ஒருவருக்கு விற்பதற்காக அம்சவள்ளியை அனுப்பத் தாண்டவன் முடிவு செய்கிறான். அது தெரிந்த முருகன் அம்சாவை இழுத்துச் சென்று மாங்காட்டுச் சாமியிடம் விட்டுச்செல்ல, அவன் 'நான் கடவுள் இல்லை; மேலே ஒருத்தன் இருக்கிறான்' என்று ருத்ராவிடம் அனுப்புகிறான்.மலையாளியைக் கொன்று இழுத்துச்சென்று அந்த நேரத்தில் அம்சாவை விடுவிக்கிறான் ருத்ரா. பின்னர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ருத்ரா காவலில் வைக்கப்பட்டு, தாண்டவன் பழிவாங்க வேண்டும் என்ற தூண்டுதலால் வழக்கிற்கும், ருத்ராவுக்கும் தொடர்பில்லை என்று விடுவிக்கப்படுகிறான். இதற்கிடையில் விற்பனைக்கு இணங்க மறுத்து வியாபாரத்தைக் கெடுத்த அம்சவள்ளியின் முகத்தைச் சிதைத்து அலங்கோலப்படுத்தி, அங்கஹீனப்படுத்துகிறான் தாண்டவன். வழக்கிலிருந்து விடுபட்டு வெளிவரும் ருத்ரா தாண்டவனுக்கு தண்டனை கொடுக்கிறான். தனக்கு இப்பிறவியிலிருந்து விடுபட வாய்ப்புக் கேட்கும் அம்சவள்ளியின் கழுத்தை அறுத்து, எரித்து விடுதலை தருகிற ருத்ரா, இறுதியில் தன் குருவை வந்தடைகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாதி வரை கதாபாத்திர அறிமுகம், பின்னர் யார் வில்லன் என்று அடையாளப்படுத்தும் போதே, கடைசியில் அவன் கொல்லப்படுவான் என்பது தெரிந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'அஹம் பிரம்மாஸ்மி' என்கிறார்; சமஸ்கிருத மந்திரங்கள், பூஜைகள், மண்டையோட்டு மாலை, மனிதனைத் தின்னும் அகோரி வகை சாமியார்கள், இம்மையிலிருந்தும், மறுமையிலிருந்தும் விடுதலை கொடுப்பதாக சொல்கிறார்கள் என்றெல்லாம் நாம் குழம்ப வேண்டியதேயில்லை. இதெல்லாம் கதாநாயகனுக்கான பின்புலமே தவிர, கதை அதுவன்று.&lt;br /&gt;&lt;br /&gt;தனது காலடியிலேயே கர்ணகொடூரமாகச் சிதைக்கப்பட்டு, இழிநிலையாக்கப்பட்டு, பிச்சையெடுக்க வைக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்குக் கொஞ்சமும் கருணை காட்டாதது கடவுளா? நெற்றி நிறைய விபூதியுடன், கடவுள் படங்களுக்கு பக்கத்திலேயே அமர்ந்தபடி மனிதர்களை உருப்படிகளாகக் கணக்குப் பண்ணும் தாண்டவன் பக்தன்தானே? பழமும் தேங்காயும் தந்து வழிபட்டு தன் பாவக் கணக்கை பைசல் பண்ண ஏங்கி நிற்கும் முருகன் கதாபாத்திரத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்? இத்தனைக் கொடுமையையும் அனுபவிக்கும்படி தங்களைப் படைத்ததுதான் கருணையே வடிவான கடவுளா என்று அம்சவள்ளி கேட்கும் கேள்விக்கு என்ன பதில்? இவைதான் மக்கள் மனதில் பதியும் செய்திகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகன், நாயகியை அகோரமாகக் காட்டியதுவும், அவர்களுக்கு காதல் பாடல் வைக்காததும் திரைத்துறையில் துணிச்சலான செய்திகள் என்றால், கதாநாயகியைவிட பிச்சையெடுப்போரைக் கண்காணிக்கும் திருநங்கையை அழகானவராகக் காட்டியதும், அவரை அக்கா என்று கதாநாயகியை அழைக்க வைத்ததும் உண்மையில் பாராட்டுக்குரியவை. பண்பாட்டிற்குரியவை. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி வேடமிட்டு பிச்சையெடுப்போரை வைத்து, காவல்துறை, சமூகம், இன்றைய சினிமா என்று சமூக விமர்சனம் செய்யும் காட்சிக்கு திரையரங்கில் பெரும் வரவேற்பு. அதே வேளையில் கடவுள் வேடமிட்டுப் பிச்சையெடுக்கும் முருகனின் உருப்படிகள் செய்யும் விமர்சனத்தின் கடவுள் உருவங்கள் காணாமல் போகின்றன. 'முக்குமுக்கென்று முக்கி மருதமலைக்கு நீங்க வந்துபாருங்க' என்று பாடுபவரைக் கிண்டலடிப்பதில் தொடங்கி, முருகன், சிவன், பார்வதி என்று கடவுளரைக் கிண்டலடிக்கும்போது அரங்கம் அதிர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க பாரு, இந்தப் பயல நம்பவே கூடாது, சின்ன வயசிலேயே உள்பாவாடையக் களவாண்டு போன பய" என்று கிருஷ்ணனை அறிமுகப்படுத்த, "அவன்தான் இன்னிக்கு இளம்பெண்களுக்கு ஹீரோ" என்று ஒரு குத்தல் வேறு!&lt;br /&gt;&lt;br /&gt;"இவன வச்சு ஆட்சியையே புடிச்சிட்டாங்க" என்று இராமனை அறிமுகப்படுத்திவிட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு இலாகா என்று ஒதுக்கும் பட்டியலில் முதலில் அய்யனாருக்கு காவல் துறையும், பின்னர் குடிச்சே அழியட்டும் என்று டாஸ்மாக் துறையும் ஒதுக்கப்படுகிறது. இப்படி வெளிப்படையான நக்கல் தமிழ்த்திரையில் இதுவரை வந்ததேயில்லை எனும் அளவிற்கு, கடவுளரைக் கண்டந்துண்டமாக்கும் இந்தக் காட்சிக்கு திரையரங்கில் கைத்தட்டல் பிளக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாத்தையும் மேல இருந்து ஒருத்தன் பார்த்துக்கிட்டுதான் இருக்கான்" என்பவரிடம் ராமப்பனாக வரும் கவிஞர் விக்ரமாதித்யன் "பார்த்துகிட்டு புளுத்தினான்.... தேவடியாப் பய" என்று வெளிப்படையாகத் திட்டும்போது அரங்கத்திலிருந்து வரும் ஆதரவு, மக்கள் மனநிலையைக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"சடை வச்சவனெல்லாம் சாமின்னு சொல்லிட்டு அலையுறான்"&lt;br /&gt;&lt;br /&gt;"கல்லைக் கண்டாலும் சாமி; கை கால் இல்லைன்னாலும் சாமி; பேசினாலும் சாமி; பேசாட்டாலும் சாமி - எவன்டா சாமி"&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்களே போலீசுக்குப் பயந்து சாமியார் வேசத்திலே திரியுறோம்"&lt;br /&gt;&lt;br /&gt;"இவங்கள மாதிரிதான் ஒருத்தன் வடநாட்டில் இருந்துகிட்டு சி.எம்.மோட தலையைக் கொண்டு வான்னு சவால் விடுறான்" என்று கடவுள்களையும், சாமியார்களையும் சுளுக்கெடுக்கும் வசனங்கள் நறுக்கென்று ஆங்காங்கே தைக்கிறது. எம்.ஜி.ஆரைப் பார்த்து, "அண்ணே நீங்க பாடுனது எல்லாம் ரசிச்சு ஓட்டைத்தானே போட்டான். ஒருத்தனும் திருந்தலையே" என்று சிவாஜி வேடமிட்டவர் கேட்பதில் தொடங்கி, "அம்பானின்னா யாருடா?" என்பவனிடம், "செல்போன் விக்கிறவங்க... உனக்குத் தெரியாது" என்று விளக்கம் சொல்லும் இடம்வரை ஒவ்வொரு வசனமும் அழுத்தம். வசனம் ஜெயமோகன் என்று தலைப்பில் வருகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ். காரரா இப்படி எழுதியிருக்கிறார் என்று வியப்படைய வேண்டும். காசு கொடுத்தால் கடவுள் இல்லை; கடவுள் இல்லை என்று சுமங்கலி படத்தில் பாட்டெழுதவும் முடியும் என்று காட்டிய வாலியைப் போல ஜெய மோகனும் எழுத்து வியாபாரிதானே! ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"அநியாயத்தைத் தட்டிக்கேட்க மேலே இருந்தா ஒருத்தன் இறங்கி வருவான். அப்படிக் கேட்கிற நீதான் கடவுள்; அவதாரம்" என்று நந்தா படத்தில் பாலா வைத்த வசனத்தின் விரிவு தான் நான் கடவுள். மற்றபடி அஹம் பிரம்மாஸ்மியெல்லாம் ஒட்டிக்கொண்டவைதான். எவனைக் கூப்பிட்டாலும் கடைசியில் மனிதன் தான் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இறுதியில் அவர் சொல்வது!&lt;br /&gt;&lt;br /&gt;கடுமையான சித்ரவதையால் சிதைக்கப்பட்ட அம்சவள்ளிக்கு கழுத்தையறுத்து ருத்ரா விடுதலை தருவது சரியா? - வாழவழியற்றோருக்கு மரணம்தான் பரிசா? என்னும் கேள்வி கருணைக்கொலை சரியா? தவறா? என்பதைப் போல சூழலைப் பொறுத்து விடை தரவேண்டிய கேள்வியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/Sblvy5FpZCI/AAAAAAAAAF8/z5kenhD_-Vw/s1600-h/bala.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5312400155568858146" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 120px; CURSOR: hand; HEIGHT: 149px" alt="" src="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/Sblvy5FpZCI/AAAAAAAAAF8/z5kenhD_-Vw/s400/bala.jpg" border="0" /&gt;&lt;/a&gt;படத்தின் வெற்றிக்கு அடிப்படையான அற்புத நடிப்பை வழங்கிய ஆர்யா, பூஜா, தண்டவனாக நடித்தவர், பிச்சைக்காரர்கள் வேடமேற்ற அனைத்து நடிகர்கள். இசையில் நம்மை படத்தோடு ஒன்றச் செய்த இளையராஜா அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். பாலாவிடம் நாம் எதிர்பார்க்க இன்னும் நிறைய இருக்கிறது; ஏனெனில் சமூகத்தில் இன்னும் அழுக்கு நிறைய இருக்கிறது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35683786-9099727019489181077?l=ulagacinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/9099727019489181077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35683786&amp;postID=9099727019489181077' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/9099727019489181077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/9099727019489181077'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/2009/03/blog-post.html' title='நான் கடவுள்'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/Sblwpt0FCPI/AAAAAAAAAGU/11umRdZqmYU/s72-c/nan+kadavul.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35683786.post-7401752819226114336</id><published>2008-07-08T23:26:00.005+05:30</published><updated>2011-08-27T12:26:51.160+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>பக்தியா? பகுத்தறிவா? (தசாவாதாரம் திரை விமர்சனம்)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://bp1.blogger.com/_rPer0nFLl-I/SHRNGGcTiEI/AAAAAAAAAEM/cSA-3x44T_w/s1600-h/Dasavatharam-Stills-1.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5220882635233134658" src="http://bp1.blogger.com/_rPer0nFLl-I/SHRNGGcTiEI/AAAAAAAAAEM/cSA-3x44T_w/s400/Dasavatharam-Stills-1.jpg" style="cursor: hand; display: block; margin: 0px auto 10px; text-align: center;" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;தி&lt;/strong&gt;ரண்ட புஜங்களும், தொங்குகிற பூணூலும், ஆவேசப் பார்வையுமாக ரங்கராஜ நம்பி ஒரு பக்கம். நடப்பதற்குக்கூட நவீன கருவிகள், கையில் செல்பேசி, பறக்கும் பைக் என விஞ்ஞானி கோவிந்த ராமசாமி ஒருபக்கம். என்ன சொல்ல வருகிறார் கமல்? படத்திற்கான விளம்பரம் தொடங்கிய நாளிலிருந்து தொடங்கிவிட்டது சந்தேகம். பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் (படத்தைப் பார்க்காமலேயே) வைணவர்கள் மனம் புண்படும் படி இருக்கிறது என்று வழக்குப் போட்டு விட்டார்கள் வைகுண்டதாசர்கள். இப்படி சர்ச்சைகள் சூழப் பிறந்த தசாவதாரம் படத்தை பார்க்காமல் நாமும் அரைகுறைத் தனமாக பேசக்கூடாது என்பதால் முதலில் கதை...&lt;br /&gt;&lt;br /&gt;கிருமி கண்ட சோழன் கோவிந்த ராமசாமியும், (விளக்கம் படத்தில் காண்க) சக விஞ்ஞானிகளும் கூடி விளையாடிய Bio Synthetic ஆயுத விளையாட்டு வினையாக மாற தொடங்கி, அதை பெரும் பணத்திற்கு விற்றுவிடத் துடித்துத் துரத்தும் வியாபாரக் கூட்டத்திடமிருந்து உலகைக் காக்க கி.க.சோ. எடுக்கும் முயற்சி தான் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் எங்கே வந்தது சைவ, வைணவப் பிரச்சினை... ஆத்திக, நாத்திகப் பிரச்சினை... என்று யோசிப்பவர்கள் அடுத்துத் தாவ வேண்டியது திரைக்கதை மற்றும் வசனத்துக்கு! (படத்தில் பத்து வேடங்களில் நடித்திருக்கும் கமல்ஹாசன் கூடுதலாக எடுத்திருக்கும் அவதாரங்கள் கதை, திரைக்கதை, வசனம் இவை மூன்றும். எனவே சர்ச்சைகள் சகஜம் தான்.)&lt;br /&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5220882627686651698" src="http://bp1.blogger.com/_rPer0nFLl-I/SHRNFqVFVzI/AAAAAAAAAEE/RfgT4nhsapQ/s400/dasavatharam6.jpg" style="cursor: hand; display: block; margin: 0px auto 10px; text-align: center;" /&gt;கமலின் குரலிலேயே சொல்ல வேண்டுமானால், &lt;span style="color: red;"&gt;"சரி அதற்கும் நான் சொல்கிற கதைக்கும் என்ன சம்பந்தம்? சக நிகழ்வுகளின் கோர்வை தான் உலக சரித்திரமே. மேற்கத்திய சிந்தனையில் Chaos Theory என்று ஓன்று உண்டு. இந்த விஞ்ஞான தத்துவப்படி உலக நிகழ்வுகள் யாவும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவை. சக நிகழ்வுகள். - ஒரு பட்டாம் பூச்சியின் இறக்கை படபடப்பில் தோன்றும் அதிர்விற்கும், ஒரு பூகம்பத்திற்கும் கூட தொடர்பு உண்டு என்கிறது அந்த தத்துவம். என் கதை பூகம்பத்தில் தொடங்கி ஒரு பட்டாம் பூச்சியின் படபடப்பில் முடிந்தது."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் வரும் பத்து கதாபாத்திரங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று கேள்வி கேட்பவர்களுக்காக, இந்த பதிலை முன் கூட்டியே தெரிவித்துவிட்டார். தொடர்பிருக்க வேண்டும் என்று அவசிய மில்லை என்றாலும் திரைக்கதையில் அனைவரையும் இணைத்திருக்கிறார் உறுத்தாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையோட்டம், திரைக்கதை வேகம், புதுப்புது தொழில்நுட்ப முயற்சிகள், வியக்கவைக்கும் சுனாமி காட்சிகள், பிரம்மாண்டம், ஹாலிவுட் வணிகப் படங்களுக்கு நிகரான காட்சியமைப்பு, ஒவ்வொரு கதாபத்திரத் திற்கும் தனித்தனி உடல்மொழி, பார்வை, குரல், இவர் கமல்தானா என மிரட்டும் ஒப்பனை, நேர்த்தியான இயக்கம், இத்தனைக்கும் மேலாக கமலின் உழைப்பு, உழைப்பு, உழைப்பு..! ஒரு நேர்த்தியான வணிகத் திரைப்படத்திற்கான அத்தனை அம்சங்களுடன் பாராட்ட, வியக்க, பிரமிக்க, மிரள... படத்தில் இன்னும் ஏராளம் உண்டு. எனவே படத்தின் சிறப்பு பார்த்து வியக்க வேண்டியது. அதை எடுத்துச் சொல்வது அவசியமற்றது. நாம் எடுத்துக் கொண்டிருக்கும் விசயத்துக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;12-ஆம் நூற்றாண்டில் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கனின் ஆணைக்கிணங்க தில்லையில் நடராஜருடன் ஒண்டுக் குடித்தனம் நடத்திய கோவிந்தராஜரைப் பெயர்த்தெடுத்து கடலில் கொண்டு வீச முயற்சி நடக்கிறது. பள்ளி கொண்ட பெருமாள் படுத்திருக்க வேண்டிய பாற்கடலுக்குத் தானே கொண்டு போகிறார்கள் என்று மகிழ்ச்சியடைய வேண்டிய விஷ்ணுபக்தர்களோ என்ன செய்வதெனத் தவிக்க, வீராவேசமாக வெகுண்டெழுந்து மன்னனின் ஆணைக்கு தலை வணங்க மறுத்து, ஓம் நமோ நாராயணா என்று எட்டெழுத்து மந்திரம் சொல்லி, கடவுளோடு கடலுக்குள் வீசப்படுகிறார் ரங்கராஜ நம்பி(கமல் 1).&lt;br /&gt;&lt;br /&gt;செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா தன்னை உயிரியல் ஆயுதத்திற்குத் தயார்படுத்திக் கொள்ளும் முயற்சியில் முன்னேறிக் கொண்டிருக்க, அதில் பணியாற்றுகிறார் தமிழ்நாட்டு விஞ்ஞானி கோவிந்த் ராமசாமி(கமல் 2). 2004 டிசம்பர் 20-ஆம் நாள் அமெரிக்க அதிபர் புஷ்(கமல் 3) இந்த ஆய்விற்குக் கோடிக்கணக்கான டாலர் நிதி அறிவிக்கும் நேரத்தில், ஆய்விற்கு வைக்கப்பட்டிருக்கும் குரங்கு 'ஹனு' அந்த உயிரியல் ஆயுதத்தைக் கடித்துத் துடிதுடித்துச் சாவதைப் பார்த்த பிறகு இதைக் கொடியவர்களிடமிருந்து காக்க வேண்டும் என்று அரசிற்கு சொல்வதற்கான முயற்சியில் கோவிந்த் இருக்க, அதை தடுத்து அவரிடமிருந்து வயலைப் பிடுங்குவதற்காக முன்னாள் சி.அய்.ஏ உளவாளி கிரிஸ் பிளச்சரை அனுப்புகிறார்கள் வில்லன் கூட்டத்தினர். ஏதோ அர்னால்டு போன்ற இங்கிலீஷ்காரர் என்று நினைத்துவிடாதீர்கள் அவரும் கமலே(கமல் 4)!&lt;br /&gt;&lt;br /&gt;தவறுதலாக அந்த வயல், பேக்கு நண்பன் ஷிட்ராம்.. இல்லை... சாய்ராம் அனுப்பும் கூரியர் பைகளோடு சிதம்பரத்தில் இருக்கும் கிருஷ்ண வேணி என்ற பார்ப்பனப் பாட்டி(கமல் 5)க்கு அனுப்பப்படுகிறது. அதைத் துரத்தி இந்தியா வரும் நாயகனை விசாரிக்க வரும் ரா உளவு அதிகாரி பல்ராம் நாயுடு(கமல் 6)விடமிருந்து, பாடகர் அவதார் சிங்கைப்(கமல் 7) பார்க்கப் போகும் சிங் காவலாளியின் அலட்சியத்தால் கிரிஸ் கமல் கடத்திக் கொண்டு போய் விடுகிறார். பாட்டிக்கு வந்து சேர்ந்த வயலை அவர் கோவிந்த ராஜ பெருமாள் சிலைக்குள் போட்டுவிட, குறிப்பிட்ட வெப்பநிலையில் இருக்க வேண்டிய வயல் பெருமாளிடம் மாட்டிக் கொண்டு விடக்கூடாது என அதைத் தூக்கிக் கொண்டு அலைகிறார் கோவிந்த். பெருமாளை மீட்க அவரோடு ஒட்டிக் கொண்டு ஒடுகிறார் ஆண்டாள்(அசின்).&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் அவர்கள் சந்திக்கும் வின்சென்ட் பூவராகன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்(கமல் 8), விபத்தில் மாட்டிக்கொள்ளும் உயரமான கலிபுல்லா(கமல் 9) மற்றும் வில்லன் கமலால் கொல்லப்பட்ட யூகாவின் அண்ணனாக வரும் ஜப்பானிய வீரக்கலைஞர்(கமல் 10), இவர்களின் துணையோடு அந்தக் கிருமி பரவாமல் தடுக்கத் தேவையான சோடியம் குளோரைடு(உப்பு) கொட்டிக்கிடக்கும் கடலை நோக்கி ஓடும் நாயகனை விடாமல் துரத்தும் வில்லன் கிரிஸ், உயிரியல் ஆயுதத்தைக்(வயலை) கடித்து, அது பரவத் தொடங்கும் நேரம் சுனாமி அலை எழுந்து, கடல் புகுந்து கடல்நீரில் மிகுந்திருக்கும் சோடியம் குளோரைடு காரணமாக செயலிழக்கிறது உயிரியல் ஆயுதம். மூன்றரை மணி நேரத் திரைக்கதையை இதற்கு மேல் சுருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இந்துமதம் என்று ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும் சைவ, வைணவ மதங்கள் தங்களுக்கிடையே எப்படி அடித்துக் கொண்டன என்பதை உரிய வரலாற்று ஆதாரத்தோடு விளக்குகிறபோது கமல் சொல்கிறார்: &lt;span style="color: red;"&gt;"ஏசுவும், அல்லாவும் இந்தியாவுக்குள், அதன் அரசியலுக்குள் புகாத நூற்றாண்டு. சிவனும்,விஷ்ணுவும் மோதி விளையாட வேறு கடவுள்கள் இல்லாத காலம். அதனால் அவ்விரு கடவுளரும் பக்தர்கள் வாயிலாக தமக்குள் மோதி கொண்ட நூற்றாண்டு. யானைக்கும் சரி, மனிதனுக்கும் சரி மதம் பிடித்து போனால் தொல்லை தான். இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு சைவ மதம் ரொம்பவும் பிடித்து போனது. மத நெறி, மத வெறி ஆனது."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மட்டுமல்ல இன்றும்கூட உலக சண்டைக்கு காரணம் மதவெறிதான் என்பதை செப்-11 தாக்குதலுக்கு பதிலாக அமெரிக்கா தயாரிக்கும் உயிரியல் ஆயுதத்திற்கு கோடி கோடியாக பணம் ஒதுக்கும் புஷ்-சைக் காட்டுகிறார் கமல். காட்டுவது மட்டுமல்ல... கடைசிக் காட்சியில் வசனமாக சொல்லவும் செய்கிறார்.(எல்லோர்க்கும் புரிய வேண்டாமா?) வரப் போகும் உயிரியல் ஆயுதம் மட்டுமல்ல. உலகெங்கும் பரவிக்கிடக்கும் எய்ட்ஸ் என்பதே இப்படி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதுதான் என்பதை யாரும் மறுக்க முடியுமா என்றும் கேள்வியெழுப்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவாளர்களுக்கு மனிதநேயம்தான் இலக்கு என்பதை நாயகன் கோவிந்த் மூலம் காட்சிக்குக் காட்சி நிரூபிக்கிறார். நாயகன் பகுத்தறிவாளனாக இருப்பது கமல் படங்களில் இயல்பு. இவ்வளவு தீவிரமாக பேசுவது இப்படத்தின் சிறப்பு.ஜாதிப் பெயரோடு கேட்பதால் தன்னை ராம சாமி நாயக்கரின் மகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் கமலைக் கண்டு அஞ்சி, அந்த ஈ.வெ.ராம சாமி நாயக்கரா? (சென்ஸார் தயவால் வசனம் கட்) என்று மிரண்டுபோகும் அசினிடம், எங்கப்பா பெரியார்லாம் கிடையாதுங்க.. சிறியார்... (இசைக்)கலைஞர் என்று பார்வையாளர்களுக்கு பெரியாரை நினைவூட்டுகிறார். (பெரியாரென்றால் பெருமாளுக்கும் பயம்தானோ?) நீங்க தொடப் பிடாது.. தீட்டு என்று பெருமாளைத் தூக்கிக் கொண்டு கழிவறைக்குள் நுழையும் அசினிடம், சரி, உங்க பெருமாளுக்கு மனுசங்களைவிட, அந்த இடம்தான் பிடிக்கும்னா போங்க என்று நக்கலடிக்கும் கமலிடம், அய்யோ.. சவ்ச்சாலயம் என்று கழிவறையை சமஸ்கிருதத்தில் சொல்லி ஒதுங்கு கிறார் அசின். சரி அதுவும் ஆலயம்தானே விடுங்க!என்று எள்ளிநகையாடுகிறார்- இதுதான் கமல்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள்தான் முக்கியம் என்று காட்டிக் கொடுக்கவோ, போட்டுக் கொடுக்கவோ ஏன் விபத்தில் அடிபட்டவர்களைப் பற்றிக்கூட கவலைப்படாத பக்தை ஆண்டாளையும், எனக்கு மனிதன் தான் முக்கியம் என்று ஆபத்துதவிக்கு செல்லும் பகுத்தறி வாளர் கோவிந்த் கமலையும் வேறுபடுத்திக்காட்டி கடவுளை மற, மனிதனை நினை என்று பெரியார் சொன்னதை மக்கள் மனதில் பதிய வைக்கிறார். கடைசி வரை கடவுள் சிலையயத் தூக்கிக் கொண்டு திரியும் ஆண்டாளால்தான் பிரச்சினை முடியாமல் வலுக்கிறது என்று உணரும் மக்களுக்கு அந்த கதாபாத்திரத்தின் மேல் வெறுப்பு ஏற்பட்டு, அந்த சிலையை தூக்கி போட்டுத்தான் தொலையேன் என்று நினைக்க வைப்பதுதான் திரைக்கதை ஆசிரியர் கமல், இயக்குநர் ரவிக்குமார், நடிகை அசின் ஆகியோரின் வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;மடம்னா தப்பு நடக்காதா? என்று கேட்கும் அதிகாரி பல்ராமிடம் சார், உங்களுக்கு அழகிய சிங்கர் தெரியுமா? என்று மட நிர்வாகி கேட்க, மடோனா தானே! என்று வசனம் பேச வைத்த துணிச்சலுக்கு வசனஎழுத்தாளர் கமலைப் பாராட்ட வேண்டும்.எத்தனை.. எத்தனை... வசனங்கள்.. சொல்லி மாளாது. நுணுக்கமாக, மிக நுணுக்கமாக... என்று வழக்கமான தனது பாணியில் மட்டுமல்லாமல் மிகவும் வெளிப்படையாக வந்திருக்கும் கமலுக்கு வரவேற்பும் நன்றியும்.தீவிரவாதி என்றதுமே அல்-கொயிதாவா? லஷ்கர்-ஈ-- தொய்பாவா? என்று கேள்வி கேட்கும் நமது உளவு அதிகாரிகளையும் விட்டுவைக்கவில்லை. மெக்கா பாத்து நமாஸ் பண்ற எல்லாரையும் தீவிரவாதியா நினைக்காதீங்க சார் என்று செவிட்டிலும் அறைகிறார். அப்படி பல்ராம்நாயுடு அனைவரையும் விசாரிப்பதற்காக, பள்ளிவாசலுக்குள் ஒன்று சேர்க்க, அதுவே அவர்கள் சுனாமி யிலிருந்து தப்பவும் வாய்ப்பாகிறது. எல்லாம் அல்லா கருணை என்று அவர்கள் மேலே பார்க்க, ஹெலிகாப்டரில் பறக்கிறார் அனைவரையும் மசூதிக்குள் அடைத்த பல்ராம் நாயுடு.&lt;br /&gt;&lt;br /&gt;பெருமாளுக்கு சிதம்பரம்தான் தோதுப்படும் என்று சண்டித்தனம் செய்யும் ஆண்டாளிடம் தூணிலயும் துரும்பிலயும் இருக்கிற உன் கடவுள் பாண்டிச்சேரியில இருக்க மாட்டாரா?என்பதில் ஒரு நறுக்.மெய்ஞ்ஞானமோ குற்றமற்றது என்பதே ஆன்மீக குற்றவாளிகளின் முதல் வாதம் என்று ஆரம்பத்திலேயே அறைந்து விடுகிறார். நான் எப்ப ரத்தத்தின் ரத்தம் ஆனேன்? என்று புரியாமல் கமல் விழிக்கும் காட்சி, அ.தி.மு.க.வில் கமல் கரைந்துவிட்டார் என்று 2006 தேர்தல் சமயத்தில் எழுப்பப்பட்ட பொய்த் தகவல்களைப் பார்த்தும் சிரிக்கிறார். (ஒருவேளை வசனம் எழுதியபோது வந்த பிரச்சினையாக இருக்கும்போல!)&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு முக்கிய வேடம், வின்சென்ட் பூவராகன். என்ன உடல்மொழி? அப்பப்பா.. அவர் மூலம் சொல்லப்படும் கருத்தும் எத்தகையது? ஜாதியால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்துத் தலைவனின் உலக அக்கறையை எடுத்துக் காட்டிய விதம் எத்தனை அருமை.. இந்தக் கதாபாத்திரம் வியப்பதற்கல்ல... விழிகள் கனக்க..! உங்கள்ல எவனுக்குடா படிக்கத் தெரியும்? என்று ஜாதித் திமிரெடுத்த மணல் கொள்ளையன் கேட்கும் போது, &lt;span style="color: red;"&gt;எங்கடா படிக்க விட்டீங்க.. ஆனா இன்றைக்கு எங்கள்ல தேடினாலும் படிக்காதவன் கிடைக்கமாட்டான்னு&lt;/span&gt; சொல்லும்போது நமக்கு வரலாற்றின் மாற்றமும், அதற்குக் காரணமான இயக்கங்களும் நினைவுக்கு வராமல் போகுமா? அப்போது அப்ப நான்.. என்று பூவராகன் சொல்ல, பதில் சொல்ல முடியாமல் விம்மி, &lt;span style="color: red;"&gt;அண்ணே.. நீங்க படிக்காத மேதைண்ணே!&lt;/span&gt; என்று சொல்கையில் நமக்கு கண்களில் நீர் முட்டுகிறது. கடைசி சுனாமியில், தன்னைக் கொல்ல நினைத்தவனின் குழந்தையைக் காப்பாற்றிவிட்டு மடியும் அவரின் மனிதநேயமும், அவரை மடியில் போட்டுக் கொண்டு கதறும் மனநிலை சரியில்லாத கிருஷ்ணவேணி பாட்டியிடம், நீங்க தீட்டுப் பட்டுக்காதீங்கோ என்று ஒரு பார்ப்பனர் சொல்ல, &lt;span style="color: red;"&gt;போடா, ஜாதிப் பிசாசே!... இவன்வெளியில தாண்டா கருப்பு. உள்ள வெள்ளைடா&lt;/span&gt; என்று அழும் காட்சி ஜாதி வெறியர்களுக்கு சரியான சவுக்கடி!&lt;br /&gt;&lt;br /&gt;சுனாமி வந்து விஷக் கிருமி பரவாமல் தடுத்து விட்டார் கடவுள் என்று அசின் பெருமைப்படும் போது, கேமரா பின்னால் செத்துக் கிடக்கும் ஆயிரக்கணக்கான பிணங்களைக் காட்டுகிறது. (அம்பாளோட கருணையில ஒரு கண்ணு மாத் திரம் போயி...எம்புள்ள பொழைச்சுக்கிட்டான் என்று பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம் நினைவுக்கு வருகிறது) அந்த சப்பைக்கட்டுக்கு கமல் தரும் பதில் தான் கடைசியில் மக்கள் மத்தியில் சிந்தனையை எழுப்புகிறது. எந்த ஒரு பேரழிவின் போதும், கடவுள் ஏதாவதொரு காரணத்திற்காகத்தான் இதைச் செய்கிறார் என்று பக்தர்களின் வாதத்திற்கு பகுத்தறிவாளரான வாதம் கமல் வைத்திருப்பது.&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;"இப்ப நாங்க கண்டுபிடிக்கப்போற கிருமிக்காகத் தான் உன் கடவுள் 80 லட்சம் வருசத்துக்கு முன்னாடி கடலுக்கு அடியில உள்ள டெக்டானிக் பிளேட்டை சரியா அடுக்காம விட்டடரா? 2004-ல சுனாமி வந்து எங்களைக் காப்பாத்துறதுக்காக? அப்படி யோசிக்கிர கடவுள் எங்களுக்கு இந்த மாதிரி கொடூரமான அய்டியாவே வராமத் தடுத்திருக்கலாமே! இல்லை புஷ் மாதிரி ஆளுங்க இந்த மாதிரி ஆய்வுக்கு பணம் கொடுக்காமத் தடுத்திருக்கலாமே.. உன் பாட்டியும் சரி, கடவுளும் சரி, Just not there."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;"கடவுள் இல்லைன்னு நான் எங்க சொல்றேன்.. இருந்தா நல்லா இருக்கும்னுதானே சொல்றேன்"&lt;/span&gt; என்றும் பதில் தந்து வாயடைக்கிறார் கமல்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில், உலகெங்கும் பகுத்தறிவாளர்களாக மாறும் வரையில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் விவாதங்கள் நீடித்துக் கொண்டு தான் இருக்கும். அதுவரையில் எந்தக் கட்சி மக்களுக்கு நன்மைதருகிறதோ அதை ஏற்கும் பகுத்தறிவே தனக்குண்டு என்று தனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்திவிடுகிறார்.கடலில் போட்டால் மூழ்கும், சுனாமி வந்து வந்து திருப்பிப் போட்டால் தரையில் கிடக்கும், தூக்கிய இடத்துக்கெல்லாம் தொற்றிக் கொள்ளும், மண்ணில் புதைத்தால் புதையும், மணலோடு சேர்த்து அள்ளும்போது சேர்ந்துகொள்ளூம் அதே போல் மேடையில் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைத்துவைத்தால் அதுபாட்டுக்கு அடைபட்டுக் கிடக்கும் சிலைதாண்டா அது! என்பதை இத்தனை களேபரத்துக்கும் நடுவில் காட்டிக் கொண்டே வருகிறார்கள். காட்சியும் வசனங்களும் நிரூபிப்பது இதையே! ரங்கராஜ நம்பி, அத்தனை பக்தியோடு இருக்க வேண்டியதும், பெருமாளை புகழ்ந்தேத் தும் பாடல்களும், பெருமாளுக்காக உருகும் அசினின் பக்தியும்(பக்தி என்பதை விட ஈகோவும்) அந்தந்த கதாபாத்திரங்களுக்கு செய்ய வேண்டிய நியாயங்கள். அவை சரியாக சொல்லப்பட்டதால் தான் கருத்து சரியாக சென்றிருக்கிறது. பாத்திரங்களுக்கு கூடிய மட்டும் விஷ்ணு அவதாரங்களின் பெயர்களை வைத்திருக்கும் கமல், விஷ்ணுவே எடுக்காத தாழ்த்தப்பட்ட அவதாரத்தையும் எடுக்க வைத்திருக்கிறார். அவருக்கும்வைத்திருக்கும் பெயரும் பூவராகன் என்றிருக்கிறது. வராகம் (வராக அவதாரம்)என்றால் பன்றி; எனவே இழிவுபடுத்திவிட்டார் என்று சிலர் சொல்லும் வாதம் ஏற்பதாயில்லை. ஏனெனில் இழிவான பெயர்களைச் சுமக்கச் சொல்லிதானே ஆரியம் நம்மைக் கட்டாயப்படுத்தியது. அதை வெளிக்காட்டுவதுதான் படிக்காத இக்கதா பாத்திரமும்!&lt;br /&gt;&lt;br /&gt;12-ஆம் நூற்றாண்டில் காட்டப்படும் ரங்கராஜ நம்பியின் மனைவியாக வரும் அசினும், அவரின் தந்தையாக வருபவரும், 21-ஆம் நூற்றாண்டில் நடக்கும் நிகழ் காலக் கதையிலும் கமலின் ஜோடியாகவும், ஜோடியின் தந்தையாகவும் வருவதும், கடைசியில் எந்த பெருமாள் சிலையால் பிரிந்தார்களோ, அதே கோவிந்தராஜ பெருமாள் சிலை அருகில் இணைவதும் திரைக்கதையின் சுவைக்காக சேர்க்கப்பட்டிருப்பினும் மறுபிறப்பு போன்ற உணர்வை ஏற்படுத்துகிறதே... இது முரணாகத் தோன்றவில்லையா? மேலும் நம்மை உறுத்துவது, பெருமாளுக்கு கொடுக்கப்படும் பில்ட்-அப்பும், வில்லனிடமிருந்து நாயகன் தப்பிச் செல்ல உதவும் வாகனத்தில் உள்ள ஸ்ரீராமஜெயம் அவ்வளவு வலிந்து காட்டப்படுதும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் ஆனந்த விகடனின் அடிமன உருட்டலும், கல்கியின் குமுறலுமே படம் சொல்வதும் சென்று சேர்த்திருப்பதும் பகுத்தறிவு சிந்தனையைத் தான் என்பதை பறைசாற்றும். நான் சொல்வதை சொல்கிறேன்.. உங்களுக்கு சரியென்று பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தந்தை பெரியார் கூறுவதை போலவே கமலும் கூறியிருக்கிறார். அவர் எண்ணிய படி பகுத்தறிவு சரியாகவே சென்று சேர்ந்திருக்கிறது என்பதே கண்கூடு.கோடிக் கணக்கில் பணத்தைப் போடுகிறோம், அதில் கருத்தையா சொல்லிக் கொண்டிருக்க முடியும் என்று கேட்கும் வியாபாரிகளுக்கு மத்தியில், வியாபார நுணுக்கமும், கலை நேர்த்தியும், சமூகம் மீதான அக்கறையும் கொண்ட தசாவதாரம் போன்ற படங்களை கமல் மட்டுமல்ல... இன்னும் நிறைய பேர் தந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உந்து சக்திதான் இப்படத்தின் வெற்றி!&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;- இளையமகன்&lt;br /&gt;&lt;/strong&gt;நன்றி: &lt;a href="http://unmaionline.com/20080701/page6.html"&gt;உண்மை ஜூலை1-15, 2008&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35683786-7401752819226114336?l=ulagacinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/7401752819226114336/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35683786&amp;postID=7401752819226114336' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/7401752819226114336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/7401752819226114336'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/2008/07/blog-post.html' title='பக்தியா? பகுத்தறிவா? (தசாவாதாரம் திரை விமர்சனம்)'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_rPer0nFLl-I/SHRNGGcTiEI/AAAAAAAAAEM/cSA-3x44T_w/s72-c/Dasavatharam-Stills-1.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35683786.post-563041752282432202</id><published>2007-09-06T20:52:00.000+05:30</published><updated>2007-09-06T21:15:47.083+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈராக்'/><title type='text'>ஓசாமா(OSAMA)</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/RuAdQBV-yAI/AAAAAAAAADc/o9hXxFR28LM/s1600-h/osama%20.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5107114138513885186" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/RuAdQBV-yAI/AAAAAAAAADc/o9hXxFR28LM/s400/osama%2520.jpg" border="0" /&gt;&lt;/a&gt;மதம் தன் கொடிய கரங்களை முதலில் பெண்கள் மீதுதான் தாராளமாக நீட்டுகிறது... அது எந்த மதமாக இருந்தாலும்! சூத்திரனை விடத் தாழ்ந்த பிறவியாகப் பெண்ணைப் பார்க்கும் இந்து மதமாக இருந்தாலும் சரி, இலங்கையில் அரசு மதமாகி அகிம்சைக்கு இம்சை செய்யும் புத்தமதமாக இருந்தாலும் சரி. கலவரம், யுத்தம் என்றால் தாக்கப்படுவோர் பெண்களாகவே இருக்கின்றனர். அதிலும் பெண்கள் மீதான அதீத கட்டுப்பாடுகள் நிரம்பிய மற்றொரு மதம் இஸ்லாம். அதன் பெயரால் ஆட்சிக் கட்டில் ஏறி அராஜகம் புரிந்த தாலிபான் காலத்து ஆப்கானிஸ்தான் தான் ஒசாமாவின் களம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;வேலை செய்யும் உரிமை கேட்டு வீதியிலிறங்கி போராட்டம் நடத்தும் பெண்களைப் படம் பிடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கேமரா. அதன் முன்னர் வந்து சாம்பிராணி போடும் சிறுவன் எஸ்பான்டி, அது எதற்கான கூட்டம் என்று சொல்லிவிட்டு அதற்கு ஈடாக பணம் (டாலர்) பெறுகிறான். அவ்வழியே செல்லும் ஒரு தாயையும் மகளையும் வழிமறித்து அவர்களுக்கும் சாம்பிராணி போட்டு பணம் கேட்கிறான். ஊர்வலம் கேமராவை நெருங்குகிறது. தாலிபான்கள் துப்பாக்கிகளோடு வருகிறார்கள். தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு கூட்டம் கலைக்கப்படுகிறது. தாயும் மகளும் ஓடி தங்கள் வீட்டில் ஒளிகிறார்கள். கேமராவில் படம் பிடித்தவர் தாக்கப்படுகிறார். ஊர்வலத்தில் வந்த பெண்கள் சிலர் சிறையிலடைக்கப்படுகிறார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்தத் தாய் பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் தாலிபான்கள் வெளிநாட்டுப் பெண் யாரும் உள்ளே இருக்கிறார்களா எனச் சோதனை செய்கிறார்கள். தான் மருத்துவ உதவி செய்து கொண்டிருக்கும் பெரியவரின் மகனைத் தன் கணவன் எனச் சொல்லி தப்பிக்கிறாள் தாய். வெளியிலிருந்து வந்திருக்கும் என்னிடம் உன் மனைவி பேசுகிறாள். அதைப் பார்த்துக் கொண்டு சும்மா நிற்கிறாயே. உனக்கு வெட்கமாயில்லை என்று திட்டிவிட்டு செல்கிறான் அந்தத் தலிபான். வெளிநாட்டுப் பெண் அந்த மருத்துவமனையில் சிக்கியதும் அதை மூட உத்தரவிடுகிறார்கள். அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையைக் காலி செய்ய, பெரியவர் மற்றும் அவரது மகனுடன் சேர்ந்து குளுக்கோஸ் பாட்டிலையும் அதன் தாங்கியையும் (stand) தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் தாயும் மகளும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தங்களை வீட்டில் விட்டு விட்டு வருமாறு வேண்டுகிறாள் தாய். அவன் அழைத்துச் செல்கிறான். வழியில் தடுக்கும் தலிபான்கள் உன் மனைவியை வைத்து சைக்கிளில் அழைத்துச் செல்கிறாயே மற்ற ஆண்களுக்கு ஆசை வராதா? பாதங்களை முழுமையாக மூடிக் கொள்ளச் சொல் என்று மிரட்டி அனுப்புகிறார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மறுநாளும் என்னை இதுபோல் காப்பாற்றுவீர்களா? என்று அந்தத் தாய் கேட்டதும் அவன் மறுத்துவிடுகிறான். மறுநாள் பெரியவருக்கு மருத்துவ ஊழியம் பார்க்க வருகிறார்கள். பெரியவர் இறந்துவிட்டதால் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பி விடுகிறான் பெரியவரின் மகன். குளுக்கோஸ் பாட்டிலையும் தாங்கியையும் தூக்கிக் கொண்டு திரும்பி விடுகிறார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/RuAfmxV-yCI/AAAAAAAAADs/s3fNA4XeanE/s1600-h/osama+dvd.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5107116728379164706" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 134px; CURSOR: hand; HEIGHT: 208px" height="295" alt="" src="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/RuAfmxV-yCI/AAAAAAAAADs/s3fNA4XeanE/s400/osama+dvd.jpg" width="190" border="0" /&gt;&lt;/a&gt;பெண்கள் பணிக்குச் செல்லக்கூடாது என்று தலிபான் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. கணவனை காபூல் போரிலும், சகோதரனை ரஷ்யப் போரிலும் இழந்துவிட்டு புலம்பும் தாய்க்கு பாட்டி யோசனை சொல்கிறாள். 12 வயது மதிக்கத்தக்க பேத்தியை ஆண் பிள்ளையாக மாற்றி வேலைக்கு அனுப்பலாம் என்கிறாள். தாலிபான்களுக்குத் தெரிந்தால் தன்னைக் கொன்று விடுவார்கள் என மிரளும் பேத்திக்கு தைரியமூட்ட பழங்கதை ஒன்றையும் சொல்கிறாள் பாட்டி. கதை கேட்டபடியே தூங்கிவிட, தூக்கத்திலேயே அவளது தலை முடி வெட்டப்படுகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;காலை எழுந்ததும் வெட்டப்பட்ட தன் தலை முடியைப் பார்க்கிறாள் சிறுமி. அவளிடம் தாய், வெட்டப்பட்ட சடையைத் தர, அதை ஒரு தொட்டியில் இட்டு மண் நிரப்பி, குளுக்கோஸ் பாட்டிலிருந்து சொட்டு சொட்டாய் நீர்விட்டு வளருமா என்று பார்க்கிறாள் அவள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தலையில் குல்லாய் அணிவித்து, தன் கணவருடன் பணியாற்றிய முன்னாள் இராணுவத்தவர் ஒருவரின் கடையில் வேலைக்குச் சேர்த்து விடுகிறாள். சிறுமி சாலையில் செல்வதை பார்க்கும் தாலிபான் ஒருவனுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவளைப் பின் தொடர்கிறான். சந்தேகப்படும் படி நீ ஏன் நடந்து கொண்டாய் என தாய் கடிந்து கொள்கிறாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மறுநாள் ஊரிலுள்ள சிறுவர்களை யெல்லாம் தாலிபானின் முல்லாக்கள் வந்து இழுத்துச் செல்கின்றனர். இந்தச் சிறுமியும் சிறுவனாகக் கருதப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறாள். அந்தக் கூட்டத்தில் தனக்குத் தெரிந்த சாம்பிராணிப் புகை போடும் சிறுவனிடம் நம்மை எங்கே அழைத்துச் செல்கிறார்கள்? என்று கேட்கிறாள். ஒசாமாவின் படையில் நம்மை சேர்க்கப் போகிறார்கள் என்று சிறுவர்கள் பேசிக்கொள்கிறார்கள். அனைவருக்கும் குர்-ஆன் பயிற்றுவிக்கப்படுகிறது. பின்னர் அனைவரும் தங்கள் உடலை இஸ்லாமிய முறைப்படி சுத்தம் செய்து கொள்வது எப்படி என்பதை ஒரு முல்லா விளக்குகிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;முதலில் வலது பக்க உடலில் தண்ணீரை ஊற்று! பின் இடப் பக்க உடலில்! பின் தலையில் என்று சொல்லிக் கொண்டு, வருபவர் உங்களின் ஈரமான கனவுகளின் பின்னால் உடலை சுத்தப்படுத்துவதை சொல்லித் தருகிறேன் என்று சொல்லிவிட்டு, துண்டை உடலில் சுற்றிக் கொண்டு கட்டிவிடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு, மடியை எப்படி சுத்தம் செய்வது என்று விளக்குகிறார். பின்னர் வெதுவெதுப்பான நீர் நிரம்பிய அண்டாவில் அமர்ந்தபடி அனைத்துச் சிறுவர்களும் மேலாடையின்றி துண்டு கட்டியபடி உடலைச் சுத்தம் செய்கிறார்கள். இதை ஒளிந்து கொண்டு பார்க்கும் சிறுமியைக் கண்டுபிடித்து விடுகிறார் முல்லா.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவளையும் இதேபோல் செய்யச் சொல்ல, அவள் சின்ன தயக்கத்துடன் சட்டையைக் கழற்றிவிட்டு தண்ணீருக்குள் செல்கிறாள். இவளிடம் பெண் தன்மை அதிகமிருக்கிறது என்கிறார் அவர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மறுநாள் பையன்களெல்லாம் கூடி நின்று கிண்டல் செய்யும் போது, அவளை அவர்களிடமிருந்து காக்கிறான் எஸ்பான்டி. அப்படியானால் அவள் பெயர் என்ன? என்கிறார்கள். ஒசாமா என்கிறான் அவன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆனாலும் ஓசாமாவின் மீது மாணவர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. மறுநாள் மேலும் தொல்லைப் படுத்துகிறார்கள். நீ ஆணானால் இந்த மரத்தின் மேலேறிக் காட்டு என சவால் விடுகிறார்கள். மரத்தில் வேகமாக ஏறிவிட்ட ஒசாமா. கீழே இறங்க பயப்படுகிறாள். எஸ்பான்டி அவளை இறக்கிவிடுகிறான். அவளுக்கு தைரியம் வரவழைக்க கயிற்றில் கட்டி சுற்றி கிணற்றில் இறக்கி விடுகிறார்கள். சிறிது நேரம் கழித்து மேலே தூக்கி பார்க்கும் போது, அவள் பருவமடைந்ததற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அதை வைத்து முல்லா அவள் பெண் என அறிவிக்க, பதறிப்போகும் ஒசாமா ஓடுகிறாள்; சிறுவர்கள் துரத்துகிறார்கள். ஒசாமா கைது செய்யப்பட்டு அவளுக்கு பர்தா அணிவிக்கப்படுகிறது. அவள் சிறையில் அடைக்கப்படுகிறாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மறுநாள் விசாரணையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஒளிப்பதிவாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுகிறார். மருத்துவமனையில் பிடிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணை கழுத்தளவு தரையில் புதைத்து கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனைக்கு ஆணாக வேடமிட்ட ஒசாமாவுக்கு தண்டனை வழங்கும் நேரம் வருகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;முல்லா சென்று பஞ்சாயத்துக்காரரின் காதில் ஏதோ சொல்கிறார். அவரின் வேண்டுகோளுக்கிணங்கி, அந்தக் கிழட்டு முல்லாவுக்கு ஒசாமா கட்டி வைக்கப்படுகிறாள். அம்மாவைத் தேடும் அவளின் அழுகையைக் கவனியாமல் அழைத்துச் செல்லும் முல்லா தன் அந்தப்புரத்தில் உள்ள மனைவிமார்களோடு அடைத்துவிடுகிறான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவர்கள் தங்கள் சோகக் கதையைப் பகிர்ந்து கொண்டவாறு கிழவனை சபித்தபடி ஒசாமாவை சிங்காரிக்கின்றனர். இரவானதும் கிழவர் வருகிறார். அறை அறையாய்த் தேடுகிறார். பதுங்கு குழிக்குள் ஒளிந்திருப்பவளை எழுப்பி அவளுக்கு எந்தப் பூட்டு வேண்டுமென பூட்டுகள் செய்து விடப்பட்ட சரமாலையைக் காட்டுகிறார். அதில் உனக்கு எதுவும் பிடிக்கவில்லையா? என்றபடி பெரிய பூட்டு ஒன்றை எடுத்து உனக்காகவே இது என்று காட்டுகிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒசாமாவை அழைத்துக் கொண்டு ஏணிப் படியேறி மாடிக்கு செல்கிறார். மற்ற மனைவிகள் ஜன்னல் திறந்து பார்க்கின்றனர். கிழவர் பெரிய கதவு வழியாக மாடியிலிருந்து வெளிப்பட்டு பால்கனியில் கொதிக்க வைக்கப்பட்டிருக்கும் நீரில் அமர்ந்து தன்னை சுத்தம் செய்து கொள்கிறார். சிறைக் கம்பிகளின் சத்தமும் ஒசாமா ஸ்கிப்பிங் ஆடும் காட்சியும் புலப்படுகிறது. படம் வலியைத் தந்தபடி நிறைவடைகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒசாமாவின் குழந்தைத் தனத்துக்கு அவ்வப்போது அவள் ஆடும் ஸ்கிப்பிங்கைக் காட்டி, பின் அதனையே துயரத்தை வெளிப் படுத்தும் கருவியாகவும் பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் சிறப்பு. பெண்களை சிறையிலடைக்கும்போது வரும் கோழிகளின் சத்தம், பின்னணியில் சின்ன சின்ன இசை சேர்ப்புகளில் அதிர்வு என ஒளிப்பதிவுக்கு இணையானது முகமது ரேஷா தர்வாஷியின் இசையும் ஒலிச் சேர்ப்பும்! கொண்டாட்ட வீடு தாலிபான் வரவுக்காக சாவு வீட்டைப் போல் மாறுகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/RuAdhhV-yBI/AAAAAAAAADk/8MqBhhG-npk/s1600-h/barmak.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5107114439161595922" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 153px; CURSOR: hand; HEIGHT: 211px" height="359" alt="" src="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/RuAdhhV-yBI/AAAAAAAAADk/8MqBhhG-npk/s400/barmak.jpg" width="251" border="0" /&gt;&lt;/a&gt;அவர்களின் அழுகைச் சத்தத்தோடு அடுத்து காட்சியின் குர்-ஆன் ஓதுதல் தொடங்குகிறது. தான் பெற்ற அனுபவத்தைக் கொண்டு தன் முதல் முழு நீளப் படத்தை எடுத்திருக்கும் இயக்குநர் சித்திக் பர்மக் தலிபான் ஆட்சியாளர்களால் நாடு கடத்தப்பட்டவர். அவர்களின் ஆட்சி முடிந்ததற்குப் பிறகு வந்து 2003இல் ஆப்கானிலேயே எடுத்த படம் ஒசாமா.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பார்வைகளிலேயே பயத்தைப் பிரதிபலிக்கும் கண்கள் ஒசாமாவாக நடித்த மரினா கொல் பஹாரியினுடையது. அத்தனை அர்த்தம் அந்தக் கண்களில். எஸ்பான்டியாக நடித்த ஆரிப் ஹெராட்டி, அம்மாவாக நடித்த சுபைதா சாகர் அனைவரும் அற்புதமான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளனர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பெண் தன் மீது சுமத்தப்பட்ட உடை, அலங்காரம் உள்ளிட்டவற்றிலிருந்து வெளியேறி, ஆணைப்போல வசதியாக வாழப் பழக வேண்டும் என்றார் தந்தை பெரியார். ஆனால் கண்ணாடியில் படிந்த நீராவியில் சடையுடன் கூடிய சிறுமியை வரைந்து பார்க்கும் ஒசாமாவின் மாற்றம் அவள் விரும்பி ஏற்றதல்ல. அவள் தாய் செய்ததும் ஆசைக்காக, அலங்காரத்திற்காக அல்ல.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வாழ வழிதேடி பால் மாறிவேடமிட்டவளை ஆணாதிக்கம் நிறைந்த மதம் நசுக்குகிறது. மீண்டும் பெரியார் சொன்னதுதான்: எலிகளால் பூனைக்கு விடுதலை கிடைக்குமா? ஒருவேளை கிடைத்தாலும் ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35683786-563041752282432202?l=ulagacinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/563041752282432202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35683786&amp;postID=563041752282432202' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/563041752282432202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/563041752282432202'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/2007/09/osama.html' title='ஓசாமா(OSAMA)'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/RuAdQBV-yAI/AAAAAAAAADc/o9hXxFR28LM/s72-c/osama%2520.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35683786.post-8982005577731827836</id><published>2007-07-17T19:26:00.000+05:30</published><updated>2007-07-17T19:54:28.162+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலம்'/><title type='text'>அபோகலிப்டோ</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/RpzMAb913VI/AAAAAAAAACs/EIO-bUX5Y3w/s1600-h/apocalypto_poster.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5088165986901024082" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/RpzMAb913VI/AAAAAAAAACs/EIO-bUX5Y3w/s320/apocalypto_poster.jpg" border="0" /&gt;&lt;/a&gt; உலகிலேயே மனித இனம் ஒன்றுதாள் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் பண்புடையது.. இன்று பொருளுக்கும் பணத்துக்கும் மதத்துக்கும் நாட்டுக்கும் அடித்துக் கொண்டு மரித்துப் போகும் மனித இனம் தன் ஆரம்ப நாள்களிலும் குழுவாகப் பிரிந்து சண்டையிட்டது. காடுகளும் இயற்கையும் அழியாமல் இருந்த காலத்தில் காடுகளுக்குள் வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் குழுவாகப் பிரிந்திருந்தனர். இத்தகைய குழுக்களின் தொகுப்புக்கென தனித்ததொரு நாகரிகமும் இருந்தது. அத்தகைய தொன்மையான நாகரீகங்களில் ஒன்று மாயன் நாகரிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையிலிருந்து முற்றிலும் விடுபட்டு விடாமல் கற்கருவிகளை அதிகம் பயன்படுத்திய காலத்தில் நடக்கிறது கதை. காட்டுப் பன்றியை வேட்டையாடும் தீவிரத்தோடு தொடங்கும் படம் இரத்தமும் சதையுமாக (உண்மையாகவே) நகர்கிறது. உணவுக்கான வேட்டை-யாடுதலில் பன்றியைப் பங்கிடும் கதாநாயகன் கருஞ்சிறுத்தை பாதம் (Jaguar paw) அதன் &lt;a href="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/RpzPur913XI/AAAAAAAAAC8/cKsBa1PT_7s/s1600-h/apocalypto-7.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5088170080004857202" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/RpzPur913XI/AAAAAAAAAC8/cKsBa1PT_7s/s400/apocalypto-7.jpg" border="0" /&gt;&lt;/a&gt;இருதயத்தையும் பிற உறுப்புகளையும் அறுத்தெடுத்து பிரித்துக் கொடுக்கும்போது தோன்றும் முதல் அருவருப்பு போகப் போக விறுவிறுப்-பாகி விடுகிறது. உணவும் இனப்-பெருக்கமும் மட்டுமே முக்கியத் தேவை-களாயிருந்த காலத்தில் வாழ்ந்த அந்தக் கூட்டத்தின்மீது மற்றொரு கூட்டம் நடத்தும் திடீர்த் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் உடல் வலுவானவர்கள் மட்டும் பிடிக்கப்பட்டும் விற்பனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். கடவுளுக்கு பலியிடுவதற்காக வாங்கப்படும் அவர்கள் ஒவ்வொருவராக நரபலியிடப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை அழைத்துச் செல்லும்போதே உயரிய மேடையின் படியில் ஏதோ உருட்டி விடப்படுவது காட்டப்பட்டிருக்கும். ஆனால் இவர்கள் மேலே அழைத்துச் சொல்லப்பட்டபின்தான் உருட்டி விடப்பட்டவை பந்துகளோ கற்களோ அல்ல தலைகள் என்ற உண்மை நம்மை உறைய வைக்கும். பலியிடப்படுபவர் உடலிலிருந்து ஒரே குத்தில் இருதயம் உருவப்படும்போது முதலில் பன்றிக்கு நிகழ்ந்தது நம் நினைவுக்கு வந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகன் வெட்டப்பட இருக்கும்போது தோன்றும் சூரியக் கிரகணத்தால் கடவுளின் அணை &lt;a href="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/RpzMXb913WI/AAAAAAAAAC0/uAjhMgUHVsg/s1600-h/apocalypto-3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5088166382038015330" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/RpzMXb913WI/AAAAAAAAAC0/uAjhMgUHVsg/s400/apocalypto-3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;என்று கூறி அவனையும் அவன் தொடர்ந்தோரையும் விட்டு விடுகிறார்கள். விற்பனைக்கு அழைத்து வந்தவர்களை வீணாக அனுப்ப முடியுமா குறி பார்த்து எறிந்து பழகி விளையாடுகிறார்கள் அழைத்து வந்தவர்கள். மற்றவர்கள் மாண்டு விட தப்பிச் செல்லும் நாயகன் இவர்களின் தொடர் வேட்டையையும் தாண்டி தான் மறைத்து வைத்துவிட்டு வந்த மனைவியையும் குழந்தையையும் தேடிச் செல்கிறார்.மாயன் நாகரிக மக்களின் மொழி புரியத் தேவையில்லை; என்னும் அளவுக்கு இயற்-கையின் பிரம்மாண்டத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் காட்சியில் உணர்த்துகிறார் இயக்குநர் மெல்கிப்சன். வரலாற்றுக் கதைகளை தொடர்ந்து எடுத்து வரும் மெல் கிப்சனின் இந்தப் படம் 2006 இறுதியில் அமெரிக்காவில் வெளியானாலும் இந்தியாவில் இந்த மாதம்தான் வெளியிடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உரிய ஆய்வுக்குப் பிறகே எடுக்கப்பட்டிருப்-பதாக சொல்லப்பட்டாலும் விமர்சனங்களும் எதிர்வினைகளும் தொடர்ந்து வருகின்றன. கணிதத்திலும் வானியலிலும் சிறந்திருந்த மாயன் நாகரித்து மக்களை காட்டுமிராண்டிகளாகவும் ரத்த வெறி பிடித்தவர்களாகவும் காட்டியிருப்பதாக ஆய்வாளர்கள் பொங்குகிறார்கள். அமாவாசை அன்றுதான் சூரிய கிரகணம் வரும் என்பதுகூட தெரியாமல் சூரியகிரகணம் தோன்றிய அன்றே முழு நிலவு தோன்றுவதாக காட்டப்படும் அளவுக்கு தெளிவற்ற படம் என்றும் கொலம்பஸ் வருகைக்கு முந்திய மக்களின் வாழ்க்கையை கொச்சைப்படுத்தியிருப்பதாகவும் எதிர்க்குரல் எழுந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கதை நிகழும் காலத்தில் தெளிவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையெனப்படுகிறது. ஏனெனில் முந்தைய மாயன் நாகரிகத்தில்தான் பிடுமிடு போன்ற அமைப்புடைய கட்டடம் இருந்தது. நாடு தேடிப் புறப்பட்ட கப்பல்கள் வந்து சேர்ந்தது பிந்தைய மாயன் காலத்தில் இரண்டும் காட்டப்படுவதால் இந்தக் குற்றச்சாட்டு எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளத்துக்குள் மனைவியும் குழந்தையும் ஒளிந்திருக்க மழை கொட்டி பள்ளம் நிரம்பத் தொடங்குகிறது. நிறைமாதக் கர்ப்பிணியான அவள்தன் மகனைக் காக்க அவனைத் தோளில் தூக்கியபடி இருப்பவருக்கு பிரசவ வலி வருகிறது. முக்கி முனகும் பெண் கழுத்தளவு தண்ணீரில் நின்றபடியே குழந்தையைப் பெற்றெடுக்கும் காட்சி ஒரு நிமிடம் நம்மை ஆட்டி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/RpzP9b913YI/AAAAAAAAADE/A95RxDREzM4/s1600-h/apocalypto1pic.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5088170333407927682" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/RpzP9b913YI/AAAAAAAAADE/A95RxDREzM4/s400/apocalypto1pic.jpg" border="0" /&gt;&lt;/a&gt; கதையின் நிறைவுக் காட்சிகளில் கதாநாயகனை எதிரணியினர் இருவர் துரத்தி வருகின்றனர். மூவரும் எதிரில் ஏதோ புதிதாய் ஒன்று இருப்பதைக் கண்டு திகைத்து நிற்கிறார்கள். எதிரில் கப்பல் ஒன்று வந்து நிற்கிறது. கப்பலை அது வரை பார்த்தறியாத எதிரணியினரும் மிரண்டு நிற்க நாயகன் மீண்டும் தப்பி மனைவி குழந்தைகளை அடைகிறான். பின்னர் அது என்னவென்று கேட்கும் மனைவியிடம் "என்னவென்று தெரியவில்லை. ஆனால் அதில் மனிதர்கள் வந்திறங்கினார்கள் என்கிறார் நாயகன். நாம் அதை நோக்கிப் போகலாமா எனக் கேட்கும் மனைவியிடம் `வேண்டாம். நம் காட்டை நோக்கி சென்று புதிய வாழ்க்கையை ஆரம்பிப்போம் என்று மீண்டும் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கப்பல் அவர்களை மட்டுமல்ல தங்கள் ஒட்டு மொத்த தங்கள் இனத்தையே அழிக்கப் போகிறது என்பதை அறியாமலேயே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;- சமா.இளவரசன்,&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;a href="http://unmaionline.com/20070701/22.htm"&gt;உண்மை ஜூலை 16-31&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;a href="http://unmaionline.com/"&gt;நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ்&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35683786-8982005577731827836?l=ulagacinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/8982005577731827836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35683786&amp;postID=8982005577731827836' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/8982005577731827836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/8982005577731827836'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/2007/07/blog-post_17.html' title='அபோகலிப்டோ'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/RpzMAb913VI/AAAAAAAAACs/EIO-bUX5Y3w/s72-c/apocalypto_poster.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35683786.post-1873540078007462285</id><published>2007-07-03T18:12:00.000+05:30</published><updated>2007-07-03T18:48:33.168+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>மூடநம்பிகையை வளர்க்கும் சந்திரமுகி</title><content type='html'>&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/RopIp2nVw_I/AAAAAAAAACA/vFIuJxaMe3I/s1600-h/chandramuki.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5082955013313381362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/RopIp2nVw_I/AAAAAAAAACA/vFIuJxaMe3I/s320/chandramuki.gif" border="0" /&gt;&lt;/a&gt;இதுவரை வெளிவந்த ரஜினி படங்களைப் போலல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படமாகவும், இது ரஜினி படமல்ல, ரஜினியும் நடித்திருக்கும் படமாகவும் பத்திரிகைகளாலும் ஊடகத்தினராலும் அறிமுகப்படுத்தப்படுகிற படம் ‘சந்திரமுகி’. ரஜினிகாந்தின் திரைப்படத்திற்கு ‘சந்திரமுகி’ என்று பெண் பெயர் வைக்கப்பட்டபோதே, தனது கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் பெயராக சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துக் கொண்டிருந்தவரிடம் ஏற்பட்ட மாற்றமாகவும் கருதப்பட்டது. மேலும், தொடர்ந்து தன்னைச் சார்ந்தவர்களின் பெயரில் தானே தயாரிப்பாளராகவும் இருந்து வசூலை மூட்டை கட்டிய ரஜினி, சிவாஜி குடும்பத்தினரின் தயாரிப்பில் நடிக்க, தானே முன் வந்து ஏற்பாடு செய்ததும் வியப்பாகப் பேசப்பட்டது.&lt;br /&gt;&lt;div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5082956366228079650" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/RopJ4mnVxCI/AAAAAAAAACY/h10Cyf1VdYE/s320/padaiyappa.jpg" border="0" /&gt; &lt;div align="left"&gt;கஷ்டப்படும் சிவாஜி குடும்பத்திற்கு கை கொடுக்கும் முகமாகத்தான் இந்த உதவியை ரஜினி செய்கிறார் என்ற கருத்தும் காற்று வாக்கில் கலந்துவிடப்பட்டது. ஆனால் இத்தனை செய்திகளுக்கும் பின்னணியில் இருப்பது, ‘பாபா’ படம் கண்ட மாபெரும் தோல்வி மற்றும் எதிர்ப்பு என்பதை மக்களும் உணராமல் இல்லை.&lt;br /&gt;தன் சொந்த பேனரில் படத்தைத் தயாரித்தால் படத்திற்கு எதிர்ப்புக் கிளம்புமோ என்ற எண்ணம் தான், சிவாஜி குடும்பத் தயாரிப்பு என்னும் பெயரில் படம் செய்யக் காரணம். அதுவும் ‘கஷ்டப்படும்’ சிவாஜி குடும்பம் என்ற அடைமொழியையும் கொடுத்து பரிதாப உணர்ச்சியை பாதுகாப்புக் கவசமாக்கிக் கொண்டு விட்டதாகவும் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5082954712665670626" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/RopIYWnVw-I/AAAAAAAAAB4/MkQdDJpuT_U/s320/chandramukhi.jpg" border="0" /&gt; மேலும் அவர்கள் கூறும் பழைய நிகழ்வு ஒன்று உதவிக் கரம் நீட்டும் சந்திரமுகத்தாரின் மற்றொரு முகம் காட்டுகிறது. படையப்பா படத்தில் ரஜினியுடன் நடித்த சிவாஜி, அதே போல் தங்கள் தயாரிப்பில் ரஜினியும் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது (கமல்ஹாசனுக்கு தேவர் மகனில் நடித்துக் கொடுத்து, ‘கலைஞன்’ படத்தை தங்கள் தயாரிப்பில் தயாரித்ததுபோல) தனது அடுத்த படத்தின் தயாரிப்பில் ஈடுபடும் பத்துபேரில் ஒருவராக சேர்ந்துகொள்ளுமாறு ரஜினி தந்த பதில் கேட்டு, சிவாஜி வாயடைத்துப் போனார் என்கிற பழைய பத்திரிகைக் குறிப்புகளையும் காட்டுகிறார்கள் அவர்கள்.திரைப்படத்தை விமர்சித்து விட்டுப் போகாமல் பின்னணிகளைப்பற்றி ஆராய வேண்டியதற்கும் ஒரு பின்னணி உண்டு. மேற்கண்ட செய்திகளெல்லாம் ஏற்படுத்தியிருக்கும் பிம்பம் சரியானதா என்பதுதான் அது. ‘மணிச்சித்திரத்தாழ்’ மற்றும் சில படங்களின் தழுவல். ‘பஞ்ச்’ டயலாக் இல்லாத படம் என்றெல்லாம் கூறப்படும் விமர்சனங்களைப் போலன்றி நாம் கவனம் செலுத்தப்போவது மனோதத்துவ இயல் நிபுணராக வந்து ‘ஆவி’ விரட்டும் பணியில் ஈடுபடும் ரஜினியின் சரவணன் கதாபாத்திரம் பற்றித்தான்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/RopIxGnVxAI/AAAAAAAAACI/CNQQ_ty7Udw/s1600-h/Tamil-Chandramukhi-7.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5082955137867432962" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/RopIxGnVxAI/AAAAAAAAACI/CNQQ_ty7Udw/s320/Tamil-Chandramukhi-7.jpg" border="0" /&gt;&lt;/a&gt;தன்னைப் படிக்க வைத்து வளர்த்த செந்தில்நாதன் (பிரபு) குடும்பத்தார் புதிதாக வாங்கியிருக்கும் வேட்டையன் ராஜாவின் அரண்மனை பற்றிய வசந்திகளைப் பற்றிப் படித்து தெளிந்து விட்டு, அவர்கள் அங்கே தங்க அனுமதி தருகிறார் சரவணன். பூஜை புனஸ்காரங்களுக்குப் பிறகு வேட்டையபுரம் அரண்மனையில் குடியேறுகிறார்கள் பிரபுவும், ஜோதிகாவும் (கங்கா).&lt;br /&gt;வேட்டையன் ராஜா, தன் ஆசை நாயகியாக வைத்துக்கொள்ள விரும்பிய ஆடற் கலை நாயகிதான் சந்திரமுகி. சந்திரமுகியோ மற்றொரு ஆடற் கலைஞன் குணசேகரனை விரும்புவது தெரிந்த வேட்டையன் சந்திரமுகியின் கண்முன்னே காதலனைக் கொன்றுவிட்டு, ‘லக்க லக்க லக்க’ சொன்னபடியே சந்திரமுகியையும் உயிரோடு எரித்துக் கொன்று விட்டு, பின்னர் சில காலத்தில் மடிந்து விட்டதாக அந்த அரண்மனையின் கதை விவரிக்கப்படுகிறது. அவளது ஆவி அந்த அரண்மனையில் உள்ள பின் மாடியின் தெற்கு அறையில் உலவுவதால் அங்கே யாரும் செல்லக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.&lt;br /&gt;ஆனாலும் குறும்புக்காரப் பெண்ணான கங்கா (ஜோதிகா) அந்த ரகசியத்தை அறிய பழைய ‘பெரியவர்களின்’ பேச்சையும் மீறி அவ்வப்போது உள் நுழையத் தலைப்படுகிறார்.&lt;br /&gt;ரஜினி வெளியூர் சென்றிருக்கும் நேரத்தில் சந்திரமுகியின் அறைக்குள் நுழைந்துவிடுகிறார் ஜோதிகா. அது முதல் தொடங்குகிறது நிறைய பிரச்சினைகள். பிரச்சினைகளைத் தீர்க்க சரவணா (ரஜினி) தோன்றுகிறார்; துப்பறிகிறார்; அங்குள்ள திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களோடு விளையாடுகிறார்; வடிவேலுவை பயமுறுத்துகிறார்.&lt;br /&gt;ரஜினியின் ஆதரவோடு நாசர் மகளுக்கும், எதிர் வீட்டு ஆடற்கலைஞனுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. அந்த நிகழ்வின் முடிவில் வினித் (ஆடற்கலைஞன்) ஜோதிகாவிடம் தவறாக நடக்க முயல்வதாகப் பிடிபடும்போது, தவறு ஜோதிகா மேல்தான் என்று ரஜினி உண்மையைத் தெரிவிக்க, கோபம் கொள்ளும் பிரபு உள்ளிட்ட வீட்டுக்காரர்கள் வழக்கமான ரஜினி படம் போல அவரை விரட்டுகிறார்கள். அப்போது அதைத்தடுத்து உண்மையை விளக்குகிறார், ஏற்கெனவே அழைத்து வரப்பட்ட மந்திரவாதி. ஒரு தலையில் 10 மூளை கொண்டவரும், உலகின் தலைசிறந்த மனோதத்துவ நிபுணரின் முதன்மைச் சீடருமான இவரையா (ரஜினியை) விரட்டுகிறீர்கள் என்று கேட்டுவிட்டு, தன் உயிரைப் பணயம் வைக்கத் துணிந்திருக்கும் ரஜினியின் தியாக சொரூபத்தை அனைவருக்கும் காட்டுகிறார். ரஜினியும் தன் தியாக முகத்தை அனைவருக்கும் காட்டுகிறார்.&lt;br /&gt;சிறுவயது முதலே பல்வேறு நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு, அவ்வப்போது மனநிலை குழம்பியவராக வாழ்ந்து, அதை மறக்க, குறும்புக்காரராக மாறிவிடுகிற ஜோதிகா, சந்திரமுகி அறைக்குள் நுழைந்து அவளால் கவரப்பட்டு, தன்னை சந்திரமுகியாக நினைத்து, சந்திரமுகியாக நின்று, சந்திரமுகியாக மாறிவிடுகிறார். இதற்கு Spilit personality என்று அறிவியல் பெயர் என்றும், அந்த சந்திரமுகியாக மாறுகிற ஜோதிகா எதிர்வீட்டு வினித்தை தன் காதலன் குணசேரகரனாகப் பார்க்கிறார். அதற்குத் தடையாக இருப்போரைக் (மாளவிகா, பிரபு) கொல்ல முயற்சிக்கிறார். வேட்டையன் ராஜாவாக ரஜினியை நினைத்து, துர்காஷ்டமி அன்றைக்கு ரஜினியைக் கொன்று பழிதீர்க்க சந்திரமுகியாக மாறிவிட்ட ஜோதிகா துடிக்கிறார். தான் அழிந்தால்தான் சந்திரமுகி ஜோதிகாவிடமிருந்து விடுபடுவார் என்று முடிவு சொல்லும் ரஜினி, தான் தியாகம் செய்யத் தயாராகவும், அதே சமயம் ஜோதிகாவை விடுவிக்க Psychosis-லிருந்து புதிய முறையைக் கையாளப் போவதாகவும் கூறிவிட்டு, வேட்டையன் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு பழைய ‘பரட்டை’ காலத்து ரஜினியாக மாறிவிடுகிறார். இறுதியில் ரஜினிக்கு பதில் வேட்டையன் ராஜாவின் பொம்மையை ஆள்மாற்றம் செய்து எரித்து, சந்திரமுகியின் கோபத்தைத் தணித்து, ஜோதிகாவை விடுவிக்கிறார்.&lt;br /&gt;“Slowly you are getting conscious” என்று இப்போது தன் மனோதத்துவ மருத்துவப் பாணியைக் கையாண்டு வெற்றி பெறுகிறார். தன் ஜோடியோடு பழையபடி ‘Repeat’ பாடலைப் பாடிக்கொண்டு விடைபெறுகிறார். சரி, வருவோம். சந்திரமுகியின் கதாபாத்திரத்தால் கவரப்பட்டு ஜோதிகா Spilit personality-க்கு ஆளாகிறார் என்றால், விடுவிக்கப்பட வேண்டியது ஜோதிகாவா? இல்லை ஜோதிகாவிடம் இருந்து சந்திரமுகியா? ஜோதிகா தானே விடுவிக்கப்பட வேண்டியவர். சந்திரமுகியின் ஆசையைத் தீர்த்து அவரை ஜோதிகா உடலிலிருந்து விடுவிக்கவே போராடுகிறார் ரஜினி.&lt;br /&gt;மந்திரவாதி, என்னால் முடியாததை மனோவியல் மருத்துவர் ரஜினி செய்ய முடியும் என்று சொல்கிறார். ரஜினியோ மந்திரவாதியின் பக்கபலமும் அவசியத் தேவை என்று துணைக்கழைக்கிறார். சந்திரமுகியின் ஆசையைத் தீர்த்து, ஆவியை வழியனுப்பி வைக்கும் பழைய ‘டெக்னிக்’குக்கு மனோவியல் என்று புதிய முலாம் பூசுகிறார்கள். அப்படியானால் மந்திரவாதி என்ன செய்கி றார்? தனது சிஷ்யர்களை வைத்து பெரிய ரங்கோலிக் கோலம் போட்டு அதன் நடுவில் சந்திரமுகியாகத் துள்ளும் ஜோதிகாவைப் பிடித்து அமுக்குகிறார். மந்திரவாதிக்கே உரிய தோரணையோடு “யார் நீ?” என்று மிரட்டலாக கேள்வி கேட்கிறார். சரி, மந்திரவாதி முயற்சியால்தான் ஜோதிகா விடுவிக்கப்படுகிறார் என்றால், ரஜினியோ மனோதத்துவ நிபுணரின் தோரணையோடு, “உன் பெயர் என்ன?” என்று அமைதியாகக் கேட்கிறார். &lt;a href="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/RopJIGnVxBI/AAAAAAAAACQ/IBM_hUbtzjw/s1600-h/jothika.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5082955533004424210" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/RopJIGnVxBI/AAAAAAAAACQ/IBM_hUbtzjw/s320/jothika.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எதனால் விடுவிக்கப்பட்டார் ஜோதிகா? தெளிவில்லை. ‘என்னதான் அறிவியல் என்றாலும் மந்திரங்களெல்லாம் வேண்டும்’ என்கிற பழைய பல்லவியைத்தான் ‘Repeat’ செய்கிறார்கள். பாபா - நாத்திகம் பேசி ஆத்திகனானார். சரவணன் - அறிவியல், மருத்துவம் பேசி மந்திரத்தை நாடுகிறார். வழக்கமான ரஜினிபோல், “எனக்கா தெரியாது?” என்று வரிந்துகட்டி ‘தத்திந்தோம்’ என்று சங்கீதம் பாடுகிறார். பெண்களைப் பற்றிக் கவலைப்படும் ஆண்களின் மனதைப் படிக்கிறார் (Mind Reader) . அவர்கள் வயிற்றில் புளி கரைக்கிறார். கிளைமாக்சுக்கு முன்பு பாவமாகக் காட்சி தருகிறார் (வழக்கம்போல). இரட்டை அர்த்த வசனம் பேசுகிறார். பார்க்கும் பெண்களையெல்லாம் வலையில் விழ வைக்கும் வல்லமை பெற்றிருக்கிறார். என்னதான் புதுசாக செய்திருக்கிறார்? வழக்கம்போல ரஜினியின் ராசிக்காக ‘பாம்பு’ ஒன்று வந்து போகிறது 30 அடியில். எக்ஸ்ட்ரா பிட்டங்கா, ஆங்காங்கே pshyco, pshycic என்று ஆங்கில வசனம் பேசுகிறார். வேறு புதிதும் இல்லை. புதுமையும் இல்லை. பெண் வில்லியாக அகிலாண்டேஸ்வரி வருகிறார். எதற்கென்று கடைசி வரை தெரியவில்லை.&lt;br /&gt;“எந்தத் தொழில் செய்தாலென்ன&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;செய்யும் தொழில் தெய்வமென்று”&lt;br /&gt;பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னதை repeat செய்திருக்கிறார் ரஜினி. நாமும் ஒரு பட்டுக்கோட்டையார் பாடலை repeat செய்வோமா? &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;“வேப்பமர உச்சியில் நின்னு &lt;/div&gt;&lt;div align="left"&gt;பேயொன்னு ஆடுதுன்னு &lt;/div&gt;&lt;div align="left"&gt;விளையாடப் போகும்போது&lt;/div&gt;&lt;div align="left"&gt;சொல்லி வைப்பாங்க - உந்தன்&lt;/div&gt;&lt;div align="left"&gt;வீரத்தைக் கொழுந்திலேயே &lt;/div&gt;&lt;div align="left"&gt;கிள்ளி வைப்பாங்க - அந்த&lt;/div&gt;&lt;div align="left"&gt;வேலையற்ற வீணர்களின் &lt;/div&gt;&lt;div align="left"&gt;மூளையற்ற வார்த்தைகளை&lt;/div&gt;&lt;div align="left"&gt;வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே” &lt;/div&gt;&lt;div align="left"&gt;- என்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;ரிப்பீட்டு! &lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;a href="http://unmaionline.com/2005052/2005052u2.html"&gt;நன்றி: உண்மை மாதமிருமுறை&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;a href="http://ulagacinema.blogspot.com/2007/07/blog-post_03.html"&gt;ஒத்தை ஆள் ஓட்டப்பந்தயம் - பவானந்தி&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35683786-1873540078007462285?l=ulagacinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/1873540078007462285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35683786&amp;postID=1873540078007462285' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/1873540078007462285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/1873540078007462285'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/2007/07/blog-post_2159.html' title='மூடநம்பிகையை வளர்க்கும் சந்திரமுகி'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/RopIp2nVw_I/AAAAAAAAACA/vFIuJxaMe3I/s72-c/chandramuki.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35683786.post-9103999600303777576</id><published>2007-07-03T17:52:00.000+05:30</published><updated>2007-07-03T18:09:06.437+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>ஒத்தை ஆள் ஓட்டப்பந்தயம் - பவானந்தி</title><content type='html'>‘அதோ வர்றார்’ ‘இதோ வர்றார்’ என்று இவர்களும், ‘நான் எப்ப வருவேன்; எப்படி வருவேனெல்லாம் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்தக்கு கரெக்டா வருவேன்னு’ அவரும் அள்ளி விட்டுக்கிட்டு இருக்க, ‘அப்போ வரும், இப்போ வரும்’-ன்னு இழுத்துக்கிட்டு இருந்த படமும் வரப்போகுதாம்.அடாடாடா! இந்தப் பத்திரிகைகாரனுங்களுக்குப் பொறுக்க முடியலைப்பா!&lt;br /&gt;சிவாஜி மொட்டை போட்டிருக்காரு.... சிவாஜி கொட்டை போட்டிருக்காரு... சிவாஜி-ல 6 பாட்டு, 7 பைட்டு (அடப் பண்ணாடைங்களா, எல்லா எழவு படத்திலயும் ‘அது தாண்டா இருக்கு’) 72 குட்டிகளோட வெளிநாட்டுல டான்ஸ்-ன்னு தினம் தினம் செய்தி. &lt;img id="BLOGGER_PHOTO_ID_5082949094848447442" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/RopDRWnVw9I/AAAAAAAAABw/QAcONb4_e6M/s320/shi.jpg" border="0" /&gt;சந்திரமுகி படத்தில வந்த லாபத்தில நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்துக்கு உதவுற நோக்கில அஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ச்சு கோடி ரூபாய் கொடுத்துட்டு, ஏதோ தனக்காக வெறும் 23 கோடி மட்டும் தான் எடுத்துக்கிட்டாருன்னு சேதி வருது. பாபா-வுல ஏற்பட்ட பயத்தில தான் சிவாஜி குடும்பத்தின் பெயரில படம் பண்ணா, பிரச்சனை இருக்காதுன்னு முடிவு செஞ்சு செய்ததுதான் ‘சந்திரமுகி’ங்கிறது ஊரறிஞ்ச ரகசியம். அதிலயும் பிரச்சினை வந்துடக் கூடாதுங்கிறதுக்காகத் தான், சிவாஜி குடும்பத்துக்கு உதவுற நோக்கத்தில பண்ணதுன்னு ஒரு செய்தியப் பரப்புனதே! (ஏதோ சிவாஜி புள்ளைங்களை தவிக்கவிட்டுப்போனது மாதிரியும், இவரு தூக்கி நிறுத்தினது மாதிரியும் ஒரு பில்டப்) அவரு உதவுனது எப்படின்னு பிரிச்ச லாபத்திலயே தெரியுதே!.&lt;br /&gt;அதே மாதிரி சரிஞ்சு போன ஏ.வி.எம்.-மைத் தூக்கி நிறுத்தத்தான்னு இந்தப் படத்துல நடிக்கிறார்னு சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது.&lt;br /&gt;படம் 150 கோடிக்கு வித்திருக்கு... 200 கோடிக்கு வித்திருக்கு... 600 பிரிண்ட் போட்டிக்கு... ஜேம்ஸ்பாண்ட் படத்தை விட அதிகமா மொத்தம் 4,500 தியேட்டரில ஓடப்போகுது... தலைவரின் உலக சாதனை.அப்படின்னு தெருக்கோடில நின்னு செ.கு.செ. அனுப்பிச்சிட்டிருக்கான் நம்ம பய. கோடியில புரள்ற இவுங்க படத்தை வித்துட்டு பக்காவா இருக்க, இந்தப் பத்திகைக்-காரனுக பக்கம் பக்கமா செய்தி போட்டு பரப்பரப்புன்றானுங்க.மோர் அபிஷேகம், பால் அபிஷேகம், பீர் அபிஷேகம், டிக்கெட் வாங்கப் பெரிய கியூ. இதுக்கெல்லாம் எட்டுக் காலத்துக்கு செய்தி! ‘சிவாஜி’ டிக்கெட் வாங்கி சாதனை செஞ்சவங்க டிக்கெட்டோட போஸ் கொடுக்கிற மாதிரி போட்டோ கால் பக்கத்துக்குன்னு ஒரே அலப்பறையைக் குடுக்கறானுங்க.படத்தைப்பத்தி ரகசியத்தை வெளியிட்டுட்டாராம் ரஜினி. படம் ‘கருப்புப் பணத்தை ஒழிக்கிறது பத்தியாம்’. ‘யப்பா... வாயால சிரிக்க முடியலப்பா....’ கருப்புப் பணத்தைப் பத்தி யார் பேசுறது.. ரஜினியும், ஷங்ரும், ஏ.வி.எம்.முமா?&lt;br /&gt;அப்படின்னா சங்கராச்சாரி ஒழுக்க வாழ்வைப் பத்தியும், ஜார்ஜ் புஷ் கம்யூனிசத்தைப் பத்தியும், ஆர்.எஸ்.எஸ். அகிம்சையப் பத்தியும் பேசினாலும் நம்ம கேக்கத்தான் வேணுமா? அடப்பாவிங்களா.சரி, படம் இத்தனை கோடி, அத்தனை கோடிங்கிறாங்களே, வருமான வரித்துறையென்ன வரிசையிலயா நிக்குது டிக்கெட் வாங்க?&lt;br /&gt;கோடம்பாக்கத்தில மத்த படத்தோட நிமையையெல்லாம் என்னன்னு பார்த்தா, நல்ல தியேட்டர்களை இவங்க மொத்தமா எடுத்தக்கிட, வேற தியேட்டர் கிடைக்காம, எடுத்த படமெல்லாம் பெட்டியில தூங்குது. இந்தா விடுறேன், அந்தா விடுறேன்னு புதுப்படங்களை மிரட்டி 2 மாசமா வேற படத்தையே வரவிடாமப் பண்ணதில, வட்டிக்கு வாங்கி படம் பண்ணவனெல்லாம் பொட்டிய வச்சுகிட்டு புலம்பியபடி நிக்கறாங்க.&lt;br /&gt;அப்படியும் யாராவது பெரிய படத்தை ரிலீஸ் பண்ணப்போனா ‘சிவாஜி’ சமயத்தில விட்டா மத்த படம் ஓடாதுன்னு அல்லக்கை பத்திரிகைகளை எழுதவச்சு நிறுத்திப்புட்டாங்க.கூட ஓடுறவனையெல்லாம் தடுத்து நிறுத்தி ஓரங்கட்டிப்புட்டு, ஒத்தை ஆளா பந்தயத்தில ஓடி, ‘நான் ஜெயிச்சுட்டேன், நான் ஜெயிச்சுட்டேன். என்னைய அடிக்க எவனுமில்லை’ன்னு கத்துற ‘இந்தப் பொழப்புக்கு......’ வேணாம்வுடுங்க!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: 1.&lt;a href="http://unmaionline.com/20070602/22.htm"&gt;உண்மை - மாதமிருமுறை இதழ்&lt;/a&gt;&lt;br /&gt;2.&lt;a href="http://unmaionline.com/2005052/2005052u2.html"&gt;மூட நம்பிகையை வளர்க்கும் சந்திரமுகி -உண்மை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35683786-9103999600303777576?l=ulagacinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/9103999600303777576/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35683786&amp;postID=9103999600303777576' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/9103999600303777576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/9103999600303777576'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/2007/07/blog-post_03.html' title='ஒத்தை ஆள் ஓட்டப்பந்தயம் - பவானந்தி'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/RopDRWnVw9I/AAAAAAAAABw/QAcONb4_e6M/s72-c/shi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35683786.post-536292322690919015</id><published>2007-03-11T13:13:00.000+05:30</published><updated>2007-03-11T13:38:14.995+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தி'/><title type='text'>குரு - முதலாளித்துவ பாடம்நடத்தும் மணிரத்னம்</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#ff0000;"&gt;"இந்த த&lt;a href="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/RfO3T_PvxdI/AAAAAAAAABY/SjQgv1SscQo/s1600-h/guru.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5040573961980593618" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/RfO3T_PvxdI/AAAAAAAAABY/SjQgv1SscQo/s320/guru.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ன்னம்பிக்கைப் பிரியர்களது தாரக மந்திரம் 'உ' போடு. அதென்ன 'ஒ'வுக்குப் பதிலாக 'உ. அதுதான். உண்மை - உழைப்பு உயர்வு. இந்த மூன்று 'உ'வையும் தூக்கிக் கொண்டு உள்ளூரின் பெரிய முதலாளிகளைத் தேடி ஓடுவார்கள் இவர்கள்.மக்கள் எவரும் போராட்டம் புரட்சி போர் என்று போய்விடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை இவர்கள் செய்கிறார்களே என்கிற மகிழ்ச்சித் திளைப்பில் அவர்களும் அவிழ்த்து விடுவார்கள் தமது வெற்றிக்கான படிக்கட்டுகளை. 'நான் பேப்பர் பொறுக்கிக் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு உயர்ந்தேன் என்கிற ரகத்தில் நீளும் அவர்களது வியாக்கினங்கள்.இதுபோதும் நமது தன்னம்பிக்கைப் பிரியர்களுக்கு அவர்கள் வாந்தி எடுத்ததை வாரிக்கொண்டு வந்து மறுபடியும் மூன்று 'உ'க்களோடு ஒரு தலைப்பைப் போட்டு அச்சடிக்க வேண்டியதுதான். உழைப்பால் உயர்ந்த உத்தமர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;color:#ff0000;"&gt;-பாமரன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;மணிரத்னத்தின் குரு படத்தை இந்தப் பட்டியலிலெல்லாம் சேர்த்துவிட முடியாது. அவர்தான் படத்தின் தொடக்கத்திலேயே 'இந்தக் கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் முதலியன யாரையும் குறிப்பன அல்ல என்று போட்டு விடுகிறாரே! இருந்தாலும் 'குருபாய்' என்று அழைக்கப்படும் குருநாத் தேசிகனையும் திருபாய் அம்பானியையும் சேர்த்து வைத்து ஏன்தான் இந்தப் பத்திரிகைகளெல்லாம் எழுதுகின்றனவோ தெரியவில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;இந்திய சினிமாவை நிமிர்த்தியே தீருவதென கடப்பாரையோடு திரியும் மணிரத்னத்தை பாராட்ட சுஜாதாவின் கை மட்டுமே வேலை செய்கிறது. உலகத் தரத்தில் ஒரு இந்திய சினிமாவாக இதைப் பார்ப்பதாக சுஜாதா வரிந்து கட்டி எழுதினாலும் அதையும் தாண்டி சாதாரண திரைப்பட ரசிகனுக்குத் தெரிந்து போகிறது -இது 'நாயகன்' படத்தைச் அச்செடுத்த நகல் என்று! அதன் திரை வடிவம் மார்லன் பிராண்டோவின் 'காட் பாதர்' என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் உங்களுக்கு இன்ஸ்பிரேசனுக்கும் காப்பியடித்தலுக்குமான வித்தியாசம் புரியவில்லை என்று பொருள். &lt;span style="color:#3333ff;"&gt;(மற்றவர்கள் செய்தால் காப்பி; மணிரத்னம் செய்தால் மட்டும் இன்ஸ்பிரேசன் என்பது தான் வித்தியாசம்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;சரி, நாம் இப்போதைய 'குரு'வுக்கு வருவோம். குர்தாவும் கோட்டும் குல்லாவும் வலப்பக்க மாராப்புமாய் வடஇந்திய மக்கள் வாழும் திருநெல்வேலி மாவட்ட இலஞ்சியூர் கிராமத்திலிருந்து (!) (மொழி மாற்றுப்படம் என்பதால் மன்னித்து விடுவோம்) 'துருக்கிக்கு வேலைக்குப் போகிறார் குருநாத் தேசிகன். அங்கு பெட்ரோல் டின் விற்பனையில் பணியாற்றி நுணுக்கமான தன் அறிவாற்றலால் வளர்ந்து பதவி உயர்வும் அதிக ஊதியமும் பெறப் போகும் சூழலில் 'அடுத்தவருக்காக உழைக்காமல் தனக்காக உழைக்கப் போவதாகச்' சொல்லி விட்டுச் சொந்த ஊருக்கு வருகிறார் குரு. வியாபாரத்தில் தோற்று பின் ஆசிரியராகப் பணியிலிருக்கும் தந்தை வியாபாரத்திலிறங்க குரு எடுத்திருக்கும் முடிவை எதிர்க்கிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;பின்னர் தன் நண்பனின் அக்காவும் காதலில் தோற்றவளும் தன்னை-விட மூத்தவருமான அய்ஸ்வர்யாராயை 15 ஆயிரம் ரூபாய் வரதட்சணைப் பணத்துக்காகத் திருமணம் செய்து கொள்கிறார் குரு. தான் ஏற்கனவே வைத்திருக்கும் 15 ஆயிரம் ரூபாயுடன் வரதட்சணைப் பணத்தையும் சேர்த்துக் கொண்டு தொழில் தொடங்க பம்பாய் செல்கிறார். பருத்தி வியாபாரத்தில் புதியவர்கள் இறங்கத் தடையாயிருக்கும் 'கான்ட்ராக்டர் என்னும் முதலாளியை எதிர்க்கத் துணிகிறார். அதைப் பத்திரிகையில் எழுதி அவனுக்குப் பெரும் உதவி செய்கிறார் 'சுதந்திரமணி' நாளிதழ் ஆசிரியராக வரும் நானாஜி (மிதுன் சக்ரவர்த்தி).&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;யாரும் முதலீடு செய்யாத பாலியஸ்டர் துணியில் முதலீடு செய்து பின்னர் அதை பொதுப் பங்கு நிறுவனமாக்கி உற்பத்திக்கு தொழிற்சாலையை உண்டாக்கி `சக்தி குடும்பம் என்ற பெரும் நிறுவனத்தின் அதிபராக வளர்கிறார் குரு.ஆனாலும் எப்போதும் தான் ஏழை வியாபாரி என்றும் `சக்தி குடும்பம் மொத்தத்துக்கும் உரிய சொத்து இது என்றும் சொல்லியபடி வாழ்க்கைப் படியேறுகிறார். திருபாய்... மன்னிக்கவும் குருபாய். அவரது அபரிமித வளர்ச்சியையும் அதற்காக அதிகாரிகளையும் அமைச்சர்களையும் பணத்தால் வளைப்பதையும் தெரிந்து கொண்ட 'சுதந்திர-மணியின் ஆசிரியர் தன் நம்பிக்கைக்குரிய இளைய செய்தியாளர் மாதவனை அழைத்து 'குரு'வைப் பற்றிய உண்மைகளை எழுதச் சொல்கிறார் மிதுன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;'பெர்மிட் ராஜ்' 'லைசென்ஸ்' என்று அன்றைக்கிருந்த கட்டுப்பாடுகள் உற்பத்தியைக் குறைக்கின்றன என்று கருதும் 'குரு' இங்கிருந்து ஏற்றுமதி செய்வதாகப் போலி கணக்குக் காட்டி அதன் மதிப்புக்கு இறக்குமதி செய்து கொள்கிறார். மேலும் 6 இயந்திரங்கள் வாங்குவதற்கு அனுமதி பெற்றுக் கொண்டு உதிரி பாகங்கள் என்னும் பெயரில் இறக்குமதி செய்து அதை இயந்திரமாக்கி 12 இயந்திரங்-களில் உற்பத்தி செய்கிறார் குரு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;இப்படிச் செய்வதன் மூலம் அந்நியச் செலாவணியில் மோசடி உரிம அளவுக்கு மேலான உற்பத்திக்கு உரிமப் பணத்தை குறைத்தல் அதில் உற்பத்தியான பொருள்-களை கள்ளச் சந்தையில் விற்றல் அதற்குரிய ஆயத் தீர்வை வரிகளைக் கட்டாதிருத்தல் விற்ற பொருள் மூலம் கிட்டிய பணத்துக்கு வருமான வரி கட்டாதிருத்தல். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் குருவின்மீது சாட்டப்பட்டு அவரது நிறுவனங்களை மூடும் சூழல் உருவாகிறது. இந்த அதிர்ச்சியில் குருவுக்கு பக்கவாதம் வந்து சுருண்டு விழுகிறார். இதுவரை நம்பியிருந்த 'சக்தி குழும' உறுப்பினர்களும் இப்போது நம்பாமல் போனது அவருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர்மீது விசாரணைக் கமிஷன் வைக்கப்-படுகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாலும் விசாரணைக்கு வருகிறார் குரு. ரகசிய விசாரணை நடக்கும் 5 நாள்களில் பதில் சொல்லாமல் தன் மனைவியை பேச வைத்த குரு மக்கள் முன் ஊடகங்களின் முன் விசாரணை என்று அறிவிக்கப்படும் நாளில் வழங்கப்பட்டிருக்கும் அய்ந்து நிமிடங்களில் பேசுகிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;"ஒரு ஏழை வியாபாரியா நான் இந்த ஊருக்கு வந்தபோது எனக்கு வியாபாரத்துக்குக் கதவு திறக்கலை. அது சில பணக்காரங்களுக்கு மட்டும்தான் திறந்தது. சில இடத்தில் சலாம் போட்டால் திறந்தது சில இடத்தில் எட்டி உதைச்சாதான் திறந்தது. நான் ரெண்டையும் செஞ்சேன். எனக்குப் பின்னாடி இருந்த 30 லட்சம் குடும்பங்களுக்காக உழைச்சோம். ஒரு கிராமத்து வியாபாரிக்கு உங்களோடு சட்டம் வரி கணக்கு இதெல்லாம் தெரியலைங்க. நாங்க உழைச்சோம். இன்னிக்கு இந்த தேசம் வேகமா முன்னேறிக்கிட்டிருக்கு. இதோட வளர்ச்சியை உங்க சட்டம் கட்டுப்பாடு இதனாலெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. இந்த நடுத்தர வர்க்கமும் ஏழை மக்களும் வளர்ந்தது பணக்காரக் கூட்டத்துக்கு பிடிக்கலை. அதுதான் எங்களுக்கெதிரா எல்லா வேலையும் செய்யுது. இந்த தேசமும் மக்களும் கொஞ்ச காலத்தில எங்கேயோ போகப் போறாங்க. அன்னைக்கு எங்க வளர்ச்சி தெரியும். இப்படித்தான் 40 வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர் சட்டத்தை மீறினார் அவராலதான் நாம இன்னிக்கு சுதந்திரமா இருக்கோம். காந்தி செஞ்ச போராட்டமும் அன்னைக்கு இருந்த சட்டத்தை மீறினதுதான். அது மூலமா நம்ம இன்னைக்கு புது சட்டம் எழுதியிருக்கோம். நீங்க என்ன தீர்ப்புத் தந்தாலும் நான் மக்களோட சேர்ந்து உழைச்சிட்டே இருப்பேன். அதைத்தானா தப்புங்கறீங்க. நீங்க குடுத்த 5 நிமிசத்தில நான் சொல்ல வேண்டியதை நாலரை நிமிசத்தில சொல்லிட்டேன். 30 விநாடி எனக்கு லாபம். இதுதான் நான் வளர்ந்த விதம்" என்று தேசத்தின் அடிமட்ட மக்களுக்காக உழைக்கும் தன்னுடைய தியாக(!) மனப்பான்மையைப் பற்றி விலாவாரியாக விளக்கியதும் 'இதுக்கென்ன தூக்குத் தண்டனையா கொடுக்க முடியும்? என்று தங்களுக்குள் விவாதிக்கும் விசாரணை அதிகாரிகள் 63.5 லட்சம் அபராதத் தொகையோடு 29 வழக்குகளில் இரண்டு தவிர மற்றவற்றைத் தள்ளுபடி செய்கின்றனர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;தொடக்கக் காட்சியில் வெற்று மைதானத்தில் 'சக்தி குடும்பத்தின்' வளர்ச்சி பற்றி கருப்பு வெள்ளையில் பேசிக் கொண்டிருந்த அதே காட்சி திரும்ப வண்ணத்-தில் வருகிறது. அவரை ஒரு சுற்று சுற்றி வருவதற்குள் மைதானத்தில் மொத்த கூட்டமும் நிறைந்திருக்கிறது (சக்தி குழுமத்தின் பங்குதாரர்கள் கூட்டமாம்!) அவர்களிடையே குரு நம்பிக்கையுடன் பேச படம் முடி-வடைகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;இதில் குருநாத் தேசிகனை - திருபாய் அம்பானியாகவும் சுதந்திரமணியை (The Independent) தினமணி (The Indian Express) யாகவும் மிதுன் சக்ரவர்த்தி ஏற்றிருக்கும் `நானாஜி கதாபாத்-திரத்தை ராம்நாத் கோயங்காவாகவும் மாதவனை (ஷ்யாம்) அருண்ஷோரியாகவும் `சக்தி குடும்பத்தை `ரிலையன்ஸ் குழுமமாகவும் நீங்கள் கற்பனை செய்து கொள்ளக் கூடாது என்பதற்குத்தான் முதலிலேயே எச்சரிக்கை போட்டு விட்டார்கள் இது கற்பனைக் கதை என்று! அபிஷேக்பச்சனை 'குரு'வாக கற்பனை செய்து கொள்ளும் உரிமை மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/RfO3T_PvxcI/AAAAAAAAABQ/wU5WsIRLglM/s1600-h/malliga+sheravath.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5040573961980593602" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/RfO3T_PvxcI/AAAAAAAAABQ/wU5WsIRLglM/s320/malliga+sheravath.jpg" border="0" /&gt;&lt;/a&gt;அதே மாதிரி குருவை நாயகனாகவும் தேசிகரை நாயக்கராகவும் மல்லிகா ஷெராவத் ஆடும் ஆட்டத்தை குயிலி ஆடும் நிலா அது வானத்து மேலேவாகவும் நிருபர் மாதவனை இன்ஸ்பெக்டர் நாசராகவும் மாதவன் காதலியும் குருவின் மகளைப் போன்றவருமான வித்யாபாலனை நாசரின் மனைவியும் நாயகனின் மகளுமான கதாபாத்திரத்துடனும் நீங்கள் ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. அதற்குத் தான் படத்தின் பெயர் 'குரு' என்று போடுகிறார்கள். விசாரணைக் காட்சியைப் பார்த்துவிட்டு லியோனார்டோ டிக்காப்ரியோ நடித்த ஏவியேட்டர் என்றும் நீங்கள் குழப்பிக் கொள்ளக் கூடாது. அதற்காகத்தான் தமிழ்ப் படம் என்று சொல்லியிருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;சரி காப்பியடிக்கும் இன்ஸ்பிரேசனெல்லாம் போகட்டும் இதில் மணிரத்னம் என்னதான் சொல்ல வந்திருக்கிறார். நாலு பேருக்கு நல்லது பண்ணால் எதுவும் தப்பில்லை என்கிற ரீதியில் '30 லட்சம் பேருக்கு லாபம் கிடைச்சா 80 கோடி பேரை ஏமாத்துறது தப்பே இல்லை என்று வாதிடுகிறார். 'அடுத்தவருக்காக உழைக்காமல் தனக்காக உழைக்கப் போவதாக' துருக்கியிலிருந்து கிளம்பியவர் விசாரணைக்கு வந்ததும் சொல்கிறார் 'நான் 30 லட்சம் பேருக்காக உழைத்தேன் என்று'! நம்புங்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;முறையாகக் காட்டிய கணக்கில் பங்குதாரர்களுக்குப் பங்கு.. சரி! முறையில்லாமல் நடத்திய வியாபாரத்திற்கு அதிகாரப்பூர்வ கணக்கு ஏது அதில் பெற்ற லாபம் எல்லாம் எத்தனைப் பேருக்குப் போய்ச் சேர்ந்தது. பாவம் காந்தி அவர் செத்து 58 ஆண்டுகளுக்குப் பிறகும் அவரது போராட்டத்தை இப்படியும் கொச்சைப்படுத்த வேண்டுமா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;தேசம், தேசத்தின் வளர்ச்சி என்ற பெயரில் முதலாளித்துவம் எப்படியெல்லாம் பசப்பு மொழி பேசி ஏமாற்றுகிறது பாருங்கள். தன்னை நடுத்தர வர்க்கம் ஏழை வியாபாரி என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொள்ளத் தயங்காததையும் பார்ப்பனீயம் தன்னை ஏழை சமூகமாகக் காட்டிக் கொண்டு சமூக நீதியை எதிர்ப்பதையும் நாம் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.கடுமையாக உழைப்பதனால் மட்டுமே சட்டத்திற்கு புறம்பாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற (மணிரத்னத்தின்) குருவின் வாதத்திற்கு வலுவூட்ட மாதவனின் பாத்திரப் படைப்பு. நியாயத்திற்குப் புறம்பாக குரு செய்யும் வியாபாரத்தைத் தோலுரிக்க பம்பாயிலேயே இரண்டு பேருக்கு ஷேக் வேசம் போட்டு துபாய் போலக் காட்டி மோசடிப் புகைப்படம் எடுத்து பிரசுரிக்கிறார் மாதவன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;மேலும் நல்லவராகவும் அனுதாபத்துக்குரியவராகவும் குருவைக் காட்ட கிளைமாக்சுக்குமுன் பக்கவாத நோய்! சரி இத்தனைப் பொருளாதாரப் பிரச்சனைகள் பேசுமிடத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு சிறிய பாத்திரம்கூட இல்லையா? சேச்சே... அது எப்படி? ஒரு கதாபாத்திரம் தந்திருக்கிறார். ஆரம்பத்தில் அய்ஸ்வர்யாராய் தன் காதலனோடு ஓடிப் போவதற்காக வீட்டிலிருந்து கிளம்பி இரயிலேறும் நேரத்தில் பயந்து கொண்டு உடன் வராமல் ஏமாற்றுகிற கோழை இருக்கிறானே. அவன்தான் செங்கொடி பிடித்தபடி வீராவேசமாக வீதிகளில் வளைய வரும் கம்யூனிஸ்ட். (இதை காட்சிகளில் காட்டாமல் மிக லாவகமாக அய்ஸ்வர்யாராயின் தந்தை கதாபாத்திரத்தின் மூலம் பேச வைத்திருக்கிறார் மணிரத்னம்)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/RfO3TvPvxbI/AAAAAAAAABI/nX9Gp7f0dtQ/s1600-h/maniratnam.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5040573957685626290" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/RfO3TvPvxbI/AAAAAAAAABI/nX9Gp7f0dtQ/s320/maniratnam.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;div align="left"&gt;லாபம் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் சட்டத்தையும் மீறுங்கள் வரிப் பணத்தை ஏமாற்றுங்கள் என்று முதலாளித்துவத்தைப் படிக்கும் இன்றைய எம்.பி.ஏ. மாணவர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் தன் பாணியில் காட்சி ஊடகத்தில் முதலாளித்துவப் பாடம் நடத்தியிருக்கிறார் மூத்த எம்.பி.ஏ. பட்டதாரியான மணிரத்னம். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35683786-536292322690919015?l=ulagacinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/536292322690919015/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35683786&amp;postID=536292322690919015' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/536292322690919015'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/536292322690919015'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/2007/03/blog-post.html' title='குரு - முதலாளித்துவ பாடம்நடத்தும் மணிரத்னம்'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/RfO3T_PvxdI/AAAAAAAAABY/SjQgv1SscQo/s72-c/guru.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35683786.post-5957690076126813824</id><published>2007-02-27T19:10:00.000+05:30</published><updated>2007-02-27T19:39:25.001+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தி'/><title type='text'>கார்ப்பரேட் (CORPORATE)</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/ReQ5daqZ6cI/AAAAAAAAAAc/qwxxqUe42Dg/s1600-h/corporate.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5036213460843227586" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/ReQ5daqZ6cI/AAAAAAAAAAc/qwxxqUe42Dg/s320/corporate.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;முதலாளித்துவத்தின் முகமூடியைக் கிழிக்கும் &lt;span style="font-size:130%;"&gt;“கார்ப்பரேட்”&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;div align="left"&gt;“மாற்று சினிமாவுக்கான முயற்சிகளும், சமூக சிந்தனையுள்ள படங்களும் இந்தித் திரையுலகிலும் உண்டு என்றால் நம்ப மறுப்பவரா நீங்கள்! நானிருக்கும் வரை அந்த முடிவை ஒத்தி வையுங்கள்” என்கிறார் இயக்குநர் மதூர் பண்டார்கர். ஏற்கெனவே தான் எடுத்த ‘மூன்றாம் பக்கத்’தின் (Page 3) மூலம் இந்தியத் திரையுலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். கடந்த ஆண்டு அவர் இயக்கி வெளியிட்ட படம் ‘கார்ப்பரேட்’ (Corporate). 2006 கோவா திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் இப்படம் திரையிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;2005ஆம் ஆண்டு திரைப்பட விழாவின் விவாத அரங்கு ஒன்றில் கலந்து கொண்டபோது பண்டார்கரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், “ஏன் எதையெடுத்தாலும் பிரச்சினைகளை நோக்கியே கொண்டு செல்கிறீர்கள். வணிக சினிமாவுக்கு வரும் எண்ணம் இல்லையா?” என்று “வணிக சினிமா என்றில்லை, நல்ல படங்கள் சமூக சிந்தனையுடையவை வெற்றி பெற்றால் அவையும் வணிகப் படங்கள்தான். அந்த வகையில் அய்ட்டம் நம்பர் வைக்காத, ஹீரோக்களை நம்பாத, கதையம்சத்தோடு கூடிய வணிகப் படங்களாக என் படங்கள் இருக்கும். கார்ப்பரேட்டும் அப்படித்தான். ‘கார்ப்பரேட்’ உலக மறு பக்கத்தைக் காட்டும்” என்று தெளிவாக பதில் தந்தார் மதூர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;சீகல் குரூப் மற்றும் மார்வா குரூப் இரண்டுக்கும் இடையிலான தொழில் போட்டியில் நகர்ந்து செல்கிறது கதை. பாரம்பரிய பணக்காரரான மார்வா குரூப் முதலாளி தர்மேஷ் மார்வாவாக ராஜ் பாப்பரும், சீகல் முதலாளி வினய்சீகலாக ரஜத் கபூரும், தொழிலில் தோல்வியடைந்து லண்டனில் இருந்த இருந்து திரும்பிவரும் சீகலின் மைத்துனர் ரித்தேஷாக கே.கே.-மேனனும் நடித்துள்ளனர். கவர்ச்சிக்காவும், அய்ட்டம் நம்பராகவும் பயன்படுத்தப்பட்ட ‘பிபாஷா பாசு’ இப்படத்தின் அடித்தளமான கதாபாத்திரத்தில் ‘நிஷி கந்தா தாஸ்குப்தா’வாக பொருத்தமான வேடத்தில் நடித்துள்ளார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/ReQ5dKqZ6bI/AAAAAAAAAAU/7DWmj6uwJZo/s1600-h/nishi.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5036213456548260274" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/ReQ5dKqZ6bI/AAAAAAAAAAU/7DWmj6uwJZo/s320/nishi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;சீகல் குழுமத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான நிஷிகந்தாவும், ரித்தேஷும் முன்னாள் காதலர்கள்.மகாராஷ்டிராவின் பொதுத்துறை நிறுவனமாக இருந்த குளிர்பான தொழிற்சாலை ஒன்றை விலைக்கு வாங்குவதில் சீகல் மற்றும் மார்வா நிறுவனங்கள் தங்களுக்குள் மோதுகின்றன. இதில், மாநில நிதியமைச்சருக்கு ரொம்பப் பிடித்தமான பாலிவுட் அய்ட்டம் நடிகையை ‘ஏற்பாடு’ செய்வித்து அத்தொழிற் சாலையை கைப்பற்றுகிறது ‘மார்வா’ நிறுவனம். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து வணிகத்தில் தோற்றுத் திரும்பும் ரித்தேஷ் தன்னை நிரூபிக்க வேண்டியவராகிறார். அவருக்கு உதவவும், வணிகத்தை நிலை நிறுத்தவும் களமிறங்கும் நிஷி கந்தா, மார்வா நிறுவனத்தின் முக்கிய அலுவலர் ஒருவரை ஏமாற்றி,(அவரை மயக்க ஒரு பெண்ணை அனுப்பி) அவரிடமிருந்து ரகசியம் ஒன்றை திருடுகிறார். மாநில அரசிடமிருந்து வாங்கிய குளிர்பான தொழிற்சாலையில் ‘மின்ட்’ சுவையிலான கோலா பானம் ஒன்றினைத் தயார் செய்ய மார்வா நிறுவனம் தீட்டிய திட்டத்தை அதன்மூலம் தெரிந்து கொண்ட சீகல் நிறுவனம் வெகு விரைவில் அவர்களுக்கு முன்னதாகவே கோலா வகை பானத்தை ‘Just Chill’ என்ற பெயரில் வெளியிட முடிவு செய்து செயலாற்றுகிறது. அந்தப்பணி, ரித்தேஷ் மற்றும் நிஷி ஆகியோரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதில் வென்று காட்டுவது என்ற முடிவோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவ்வாண்டின் ‘சிறந்த தொழிலதிபர்’ விருதுக்காக பட்டியலிலும் மார்வாவும் சீகலும் மோதுகிறார்கள். பெரிய இடத்துக்கு ‘ஏற்பாடு’ செய்பவரின் மூலம் தனக்கு அந்த விருது கிடைக்க வழி பார்க்கிறார் சீகல். தனக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர் இருக்க சத்தமில்லாமல் விருது பெறுகிறார் மார்வா. இதனால் கோபமடையும் சீகல், மறுநாளே தாங்கள் தயாரிக்கப்போகும் பானம் வெளியிடப்படும் தேதியை அறிவிக்கிறார். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/ReQ5dqqZ6eI/AAAAAAAAAAs/XmMcEbUhSo0/s1600-h/marwa.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5036213465138194914" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/ReQ5dqqZ6eI/AAAAAAAAAAs/XmMcEbUhSo0/s320/marwa.jpg" border="0" /&gt;&lt;/a&gt;தங்களின் ரகசியத் திட்டம் அம்பலமானதை அறிந்து அதற்குக் காரணம் நிஷியின் சூழ்ச்சி வலையில் விழுந்த தம் குழும அதிகாரிதான் என்பதையறிந்து அவரை பணியிலிருந்து விரட்டுகிறது மார்வா குழுமம்.தன் நிறுமப் பங்குகளை வளைக்கவும், விரைவில் நிலையற்ற தன்மையை உண்டாக்கவும், சீகல் குழுமம் மேற்கொண்ட குறுக்கு வழிகளை திருப்பியடிக்கிறது மார்வா. பாரம்பரிய தொழிலதிபர் மார்வா ‘குருஜி’ எனப்படும் சாமியாரின் தீவிர பக்தர். சாமியார் சொல்லும் நிறத்தில் கல் மோதிரம் அணிவதிலிருந்து, தேதி குறிப்பது வரை அனைத்தும் செய்பவர் மார்வா. அதே குருஜியின் சீடர்களில் ஒருவர்தான் பங்கு வணிகச் சூதாடியாக ஏற்கனவே சீகலுக்காக உழைத்தவர். சாமியாரின் உதவியுடன் அவரை அணுகி தங்களுக்கு ‘உழைக்க’ வைக்கிறார். பொருளை வெளியிடும் காலம் நெருங்குகிறது. புதிய குளிர்பானத்தின் தரத்தை சோதனை செய்வதற்காக வரும் தரச்சான்று குழுவினர், குளிர்பானத்தில் பூச்சி மருந்துகளின் விகிதம் அதிகம் இருப்பதாக, அறிக்கை தருகின்றனர்.&lt;a href="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/ReQ5dqqZ6dI/AAAAAAAAAAk/n3tG83h6-wM/s1600-h/adviser.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5036213465138194898" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 152px; CURSOR: hand; HEIGHT: 102px" height="97" alt="" src="http://2.bp.blogspot.com/_rPer0nFLl-I/ReQ5dqqZ6dI/AAAAAAAAAAk/n3tG83h6-wM/s320/adviser.jpg" width="152" border="0" /&gt;&lt;/a&gt; இதனைக் கருவிலேயே அழிக்கிறார் சீகல். மக்களுக்குக் கேடான இந்த பானத்தை வெளிக் கொண்டுவருவது ஆபத்து என்று கூறி சீகல் நிறுவனத்தின் ஆலோசகர் பதவி விலகுகிறார். அதுபற்றிக் கவலைப்படாமல் புதிய பானம் அறிமுகமாகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;பூச்சிக்கொல்லி கலந்திருப்பது மார்வா நிறுவனத்திற்குத் தெரியவர, அது மாநில அமைச்சர் மூலம் அதிரடி ரெய்டையும், தொண்டு நிறுவனங்களுக்குக் காசு கொடுத்து போராட்டத்தையும் ஊக்குவிக்கிறது. தங்களின் புதிய பானத்திற்கு ஏற்பட்ட சிக்கலை கவலையுடன் எதிர்நோக்குகிறார்கள் நிஷியும் ரிதேஷூம். சிக்கல் தீவிரமாகி அதற்காக சீகல் நிறுவன அதிபர் கைது செய்யப்பட வேண்டும் என்ற நிலை வர, தலைமைப் பொறுப்பில் ‘நிஷி’யை நிறுத்தி ‘பலிகடா’வாக அவளை சிறைக்கு அனுப்பிவிடுகிறார்கள். இதற்கு ரிதேஷ் ‘தன் குழந்தையைக் கருவில் சுமக்கிறாள் நிஷி’ என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு வழியின்றி ஒப்புக் கொள்கிறான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;மார்வா நிறுவனத்துடன் சமரசத்துக்கு வருமாறு சீகல் நிறுவனத்தை அழைக்கிறார்கள் மத்திய + மாநில நிதி அமைச்சர்கள். சமரசத்தில் இனி ஒருவர் வியாபாரத்தில் மற்றொருவர் தலையிடுவதில்லை என்று ஒப்பந்தம் ஏற்படுகிறது. ஆனால் ‘நிஷி’யின் வழக்கை அப்படியே விட்டுவிடுகிறோம். இப்போது கவலையில்லை. தேர்தல் நேரத்தில் வழக்கை வாபஸ் பெற முடியாது. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கிறார்கள் இதில் கோபமடையும் ரித்தேஷ் தனது மைத்துனரான வினய்-யிடம் “விரைவில் நிஷி வெளிவரவில்லையானால் ரகசியங்களை வெளியிட்டு விடுவேன்” என்று சீற, மறுநாள் காலை தனது வீட்டு மாடியிலிருந்து குடிபோதையில் விழுந்து ரிதேஷ் இறந்துவிட்டதாக, ரிதேஷ் கணக்கு வழக்கை ‘முடித்து’ விடுகிறார் சீகல்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;இப்படியாக சிக்கல் நிறைவுபெற, சீகல் தன் தொழிலும், மார்வா தன் தொழில் மற்றும் சாமியார் பக்தியிலும் மூழ்க, சீகலில் இருந்து விலகிய ஆலோசகர், தனது துறையில் முன்னேற, பலிகடாவாக்கப்பட்ட ‘நிஷி’ மட்டும் ‘பூச்சி மருந்து கலக்கப்பட்ட கோலாபானம்’ வழக்கில் தொடர்ந்து கோர்ட் படியேறிவருகிறார் தனது குழந்தையுடன்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;முதலாளித்துவம் தனது நோக்கத்தில் தெளிவாகவே இருக்கிறது. லாபம் ஒன்றே அதன் குறிக்கோள். அதற்காகப் பயன்படும் யாரையும் பயன்படுத்திக் கொள்ளும். பின்னர் ஏறி மிதித்துக் கொல்லவும் தயாராகிவிடும். இன்றைய, கார்ப்பரேட் உலகம் என்ற பெயரில் நடுத்தர வர்க்கத்தின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் அட்டைகளின் மறுபக்கத்தை படம் பிடித்த மதூர் பண்டார்கரை என்ன பாராட்டினாலும் தகும். அதற்குள் பன்னாட்டு நிறுவனம், பொருளாதார வளம் என்னும் பெயரில் பஞ்சாயத்து பண்ணும் அரசு, பெப்சி, கோகோகோலா மனித அழிப்பு நடவடிக்கைகள் என அத்தனையையும் தோலுரிக்-கின்றது. நீ வளர வேண்டுமா, உனக்குப் பணம் வேண்டுமா, செய்யத் தயங்கக் கூடாதவை மூன்று என்கிறது முதலாளித்துவம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;1. காட்டிக் கொடு&lt;/div&gt;&lt;div align="left"&gt;2. போட்டுக் கொடு&lt;/div&gt;&lt;div align="left"&gt;3. கூட்டிக் கொடு&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/ReQ5dKqZ6aI/AAAAAAAAAAM/MbSekKRpLYQ/s1600-h/madhur_bhandarkar_2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5036213456548260258" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_rPer0nFLl-I/ReQ5dKqZ6aI/AAAAAAAAAAM/MbSekKRpLYQ/s320/madhur_bhandarkar_2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;உன் நிறுவன பணியாளனை தொடர்ந்து உறிஞ்ச வேண்டுமா? அவன் மனம் குளிரும்படி “ஊத்திக் கொடு, ஆடவிடு, கோர்த்துவிடு” என்று தன் லாபவெறியால் அம்மணமாக ஆடுகிறது முதலாளித்துவம் என்னும் நவீன ‘கார்ப்பரேட்’.அத்தகைய புகழ் வெளிச்ச, பண உலகின் கரும் பக்கத்தை புரட்டிக் காட்டிய மதூர் பண்டார்கரின் ‘கார்ப்பரேட்’, இன்றைய இளைஞர்களால் அவசியம் பார்க்கப்பட வேண்டிய படம். அதிலும் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்துறை, மேலாண்துறை, நிர்வாகத் துறைகளில் நல்ல சம்பளம் என்ற போதையில் தன்னிலை மறக்கத் துவங்கியிருக்கும் இளைய தலைமுறை கற்கவேண்டிய பாடம்! &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;நன்றி: உண்மை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;a href="http://www.unmaionline.com"&gt;www.unmaionline.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35683786-5957690076126813824?l=ulagacinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/5957690076126813824/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35683786&amp;postID=5957690076126813824' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/5957690076126813824'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/5957690076126813824'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/2007/02/corporate.html' title='கார்ப்பரேட் (CORPORATE)'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/ReQ5daqZ6cI/AAAAAAAAAAc/qwxxqUe42Dg/s72-c/corporate.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35683786.post-116101762865265018</id><published>2006-10-16T21:45:00.000+05:30</published><updated>2006-10-16T22:23:48.706+05:30</updated><title type='text'>பேஷிங் (Bashing)</title><content type='html'>&lt;div align="left"&gt;          &lt;span style="font-size:85%;"&gt;வழக்கமான வாழ்க்கையை மேற்கொண்டு, அதையே கர்ம சிரத்தையாக நினைத்து வாழும் சமூகத்திற்கு, மாற்றத்தை வரவேற்கவோ புதிய சிந்தனையை ஆதரிக்கவோ செய்வது எளிமையான ஒன்றல்ல. ‘நமக்கேன் வம்பு’ என்ற எண்ணத்தில் நிலைத்து விட்ட சமூகம், தன்னைச் சுற்றிய அவலங்களையும், கோளாறுகளையும் கண்டு கொள்ளவே செய்யாது. அவ்வாறு எவரேனும் நினைப்பதையும் விரும்பாது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;          இப்படிப்பட்ட மனங்களில் ‘புரட்சி’யல்ல; எதிர்ப்புக் குரல்கூட எழும்பாது.அதுவும் இயந்திரங்கள் தயாரித்து தயாரித்தே மனித இயந்திரமாகிவிட்ட சமூகமான ஜப்பான் போன்ற நாடுகளில் இவற்றை எதிர்பார்க்க முடியாது.தன்னுள் ஒருவர் புதிய சிந்தனைகளோடு செயல்பட்டாலே, அவரிடமிருந்து அந்தச் சமூகம் விலகி நிற்கும்; அல்லது அவரை விலக்கி வைக்கும். தங்களுக்கான போராட்டமாகவே இருந்தாலும்கூட, வழக்கத்தை, அமைப்பை மாற்றும் பெருவெற்றியை நினைக்காமல், தொடக்கத்தில் ஏற்படும் சின்னத் தடங்கல்களைக் கண்டும் மாற்றத்தின் தடம் மிரண்டு போகும். பழைய நிலைமையே மேல் என்று தோன்றும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;          ‘சூத்திரன் என்னும் இழிபெயரைச் சுமந்து கொண்டு இழிவான வாழ்க்கை வாழ்வதை விட, அந்த இழிவை ஒழிக்கும் போரில் சாவது மேல்’ என்று சொன்ன தந்தை பெரியாரைப் பின்பற்றும் சிந்தனையோ, ஏற்றுக் கொள்ளும் பக்குவமோ கூட எவ்வளவு பேருக்கு இருந்தது? இவன் யார் அதைச் சொல்ல என்று வசை மாரியும், எதிர்ப்பும் கிளம்பியது சூத்திரர்களிடமிருந்தும்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;          சாலையில் கண்ணெதிரே நடக்கும் அநீதி-யைத் தட்டிக் கேட்கவோ, சுட்டிக் காட்டவோ ஒரே ஒரு குரல் கொடுத்தால் கூட போதும், மாறிவிடும் என்ற நிலை இருந்தாலும், நூறு பேர் சூழ நிற்கும் இடத்தில் இருந்து சின்ன அசைவு கூட இருக்காது. அவ்வாறு குரல் எழுப்பினால், அந்தக் குரல் வந்த திசையில் நிற்பதற்குக் கூட துணிவு இருப்பதில்லை. இது மத்திய தர வர்க்கத்தின் ‘தன்பெண்டு, தன் பிள்ளை’ என்னும் பாதுகாப்பு நிலைப்பாடு அதையும் மீறி வரும் குரலுக்கு எதிராகக் கூட மொத்த கூட்டமும் திரும்பும் அபாயமுண்டு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;          ‘இரணியன்’ திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் நிகழ்வது அதுதான். இதே போன்ற ஒரு உண்மை நிகழ்வை மையமாகக் கொண்டு 2005-ல் ஜப்பானில் இயக்குநர் ‘மசாகிரோ கொபயாஷி’ இயக்கிய படம்தான் பேஷிங்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;         &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;         யூக்கோ, தற்கால ஜப்பானிய இளம்பெண். மத்திய கிழக்கு நாடுகளில் செவிலியர் பணிக்காகச் செல்கிறாள். பணியின்போது ஈராக்-கில் பணயக் கைதியாகக் கடத்தப்படுகிறாள். பின்னர் அரசுகளின் முயற்சியால் மீண்டு, ஜப்பான் வந்து சேர்ந்து விடுகிறாள். இந்தப் பின்னணியில் நடக்கிறது கதை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;          ஈராக்கில் அத்தியாவசியப் பணியாற்றி, அந்த மக்களுடன் ஒன்றிப் பழகிவிட்ட யூக்கோ, ஜப்பான் திரும்பியதும் தன்னைச் சுற்றியுள்ளோராலேயே வெறுக்கப்படுகிறாள். ஒட்டு மொத்த ஜப்பான் சமுதாயமும் அவளை எதிரிபோல் பாவிக்கிறது. சைக்கிளில் ஊர் சுற்றும் பழக்கமுடையவள் யூக்கோ. அவள் செல்லும் சாலைகளில் யாராலாவது அவமதிக்கப்படுவாள். அவளது சைக்கிளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, ஒருவன் தாக்குவான், வீட்டிற்குத் தொடர்ந்து தொலைபேசி மிரட்டல்கள் வரும். பணியிலிருந்து விலக்கப்படுவாள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;          யூக்கோ பொருள் வாங்கச் செல்லும் கடைக்காரன், இவருக்கு மட்டும் பொருள் தரமாட்டான். சண்டையிட்டு வாங்கிச் சென்-றாலும், சாலையில் ஒருவன் அதைப் பிடுங்கி எறிவான். நன்கு பழகிய தோழி இவளை கண்டும் காணாமல் செல்வாள். இத்தனைக்கும் மேல், யூக்கோவில் காதலனும் அவளைப் பிரிவான்.யூக்கோவுக்கு இருக்கும் ஆதரவு அவளது தந்தையும் குடும்பமும்தான். தாயின் பணியிடத்திலும், தந்தையின் பணியிடத்திலும் அதிகார மட்டத்திலிருந்து தொடர்ந்து தொல்லைகள் தரப்பட்டு, ஒரு கட்டத்தில் தந்தை பணியிலிருந்து விரட்டப்படுகிறார். கட்டுக்கடங்காத மிரட்டல்களும், தொல்லைகளும் விரக்தியின் எல்லைக்கே யூக்கோவின் குடும்-பத்தைக் கொண்டு செல்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;          இத்தனைக்கும் காரணம் வேறொன்றுமில்லை. ஜப்பானிய அரசினால் தடுக்கப்பட்டும் கூட மீறி, ஈராக் சென்று அங்கு மனித நேயப் பணியாற்றியதன் விளைவு. அங்கிருந்து கடத்தப்பட்டு, பணயக் கைதியானவுடன் யூக்கோவுக்குக் கிடைத்த உலக அறிமுகம் அவள் மீட்கப்பட்டு வந்தவுடன் அதற்கான எதிர்வினை மக்களிடமிருந்து கிளம்புகிறது. சாதாரண வாழ்க்கை வாழாமல் ‘உனக்கேன் இந்த வேலை’ என்னும் சிந்தனை, வெறுப்பின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது. “ஜப்பான் அரசு தடை சொல்லியும் அதை மீறி ஈராக் செல்ல வேண்டிய அவசியமென்ன? ஈராக்குக்கு அவள் சென்றிடாவிடில், கடத்தப்பட நேர்ந்திருக்காது அல்லவா? அவளுக்கேன் இந்த வேலை?” இவைதான் அவர்களின் வெறுப்பிற்கான பிரதான காரணங்கள். மீண்டும் மீண்டும் வரும் இந்தக் கேள்விகளும், எதிர்ப்புகளும், யூக்கோவின் ஒரே ஆதரவான தந்தை-யையும் குடிகாரனாக்கி, அவளிடமிருந்து பிரித்து விடுகிறது.கோபமும், குரோதமும் நிறைந்த முகங்களால் சூழப்பட்ட இந்த வாழ்க்கை, யூக்கோவை ஒரு நிம்மதியான இடத்தை, தன்னை நேசிக்கும் மனிதர்களுடனான வாழ்வைத் தேட வைக்கிறது. மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளின் குழந்தைகளை நோக்கிச் செல்ல முடிவெடுக்கிறாள். தன் வாழ்வை நிறைவு செய்யும் இடத்தைத் தேடி, இனிப்புப் பண்டங்களோடு செல்கிறாள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;          இன்றும்கூட, காரணம் இல்லாமல் வெறுப்பை வளர்க்கும் விதைகள் காற்றில் கலக்கப்படுகின்றன. பார்த்தீனியத்தை விட நச்சு நிரம்பிய இந்த விதைகள் யாரையும் உடனேயே வெறுக்க வைத்து விடுகிறது. அன்பின் சுவடுகளை சின்னாபின்னப்படுத்தி ஆக்ரோஷ-மாக வளர்கிறது வெறுப்பு.இதன் உண்மை நிகழ்வைப் பற்றிய இணையப் பதிவு ஒன்றில், ‘கடத்தப்பட்ட பெண் திரும்பி வரவேண்டும் என்று ஜப்பானிய மக்கள் விரும்பியதையும், ஜப்பானிய அரசு அதற்கான முழு முயற்சியெடுத்து மீட்டு வந்ததையும் பற்றிக் கிடைக்கிறது. அதன் பிந்தைய ஊடகங்களின் செய்திகளாலும் விவாதங்களாலும் ‘இவளுக்கேன் இந்த வேலை’ என்ற சிந்தனை, வெறுப்பாக விதைக்கப்பட்டதையும் பற்றிக் குறிப்பிடுகிறார் அந்தப் பதிவர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;          இன ரீதியான ஒடுக்குதல் இல்லை; இது, குண ரீதியான ஒடுக்குதல். இதனைத் தன் கதையில் வெகு நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ‘மசாகிரோ கொபயாஷி’ ‘யூக்கோ’வாக நடித்திருக்கும் ‘உரேபே புசாகோ’, கொந்தளிக்கும் தன் பாத்திரத்தை உணர்ந்து வெளிப்-படுத்தியிருக்கிறார். உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு இயக்குநர் ‘பிரான்ஸிஸ் ட்ருஃபாட்’டிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ‘மசாகிரோ’ என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- சமா.இளவரசன்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;நன்றி: உண்மை&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35683786-116101762865265018?l=ulagacinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/116101762865265018/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35683786&amp;postID=116101762865265018' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/116101762865265018'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/116101762865265018'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/2006/10/bashing.html' title='பேஷிங் (Bashing)'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35683786.post-116030220252604972</id><published>2006-10-08T15:36:00.000+05:30</published><updated>2006-10-16T22:58:42.646+05:30</updated><title type='text'>பல அவதாரமெடுத்த பன்னாட்டுக் கடவுள்</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;கடந்த மாதம் வரை தமிழ்ப்படம் பார்க்க திரையரங்கம் சென்றவர்களெல்லாம், சட்டையில் இரத்தக்கறை இல்லாமல் திரும்பி வந்திருக்க முடியாது. அவ்வளவு, வன்முறை...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரையைக் கிழித்துக் கொண்டு வந்து நம் கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்துவிடுமோ என்று பயப்படும் அளவுக்கு வன்முறை.வன்முறையாளர்கள், கூலிப்படையினர்தான் கதாநாயகப் பாத்திரங்கள். அவர்கள் நாயகர்களாகக் கூடாது என்பதல்ல.. வன்முறையாளர்களின் வாழ்க்-கைமீது அப்படியென்ன தமிழ் சினிமாக்காரர்களுக்கு திடீர் பாசம் என்று மக்களுக்குப் புரியவில்லை.“ஒன்றா, இரண்டா... எண்ணிக்கை தெரியாத குற்றம்” என்று கட்டபொம்மன் வசனம் பேசி-விடலாம். சந்து பொந்துகளில் இருந்தவர்களெல்லாம் கையில் அரிவாளையும், துப்பாக்கியையும் தூக்கிக் கொண்டு தேடி வந்துவிட்டார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சினிமா சுவரொட்டிகளெல்லாம் ரத்தத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட நிறம், தொடர்ந்து இந்தப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு. நம்மைச் சுற்றியும் நாலு பேர் துப்பாக்கியுடன் திரிவது போன்றே பிரமை ஏற்பட்டிருந்தது. தமிழகம் ரத்தச் சகதியில் மிதப்பதாகத்தான் தோன்றும் ‘என்ன இப்படியெல்லாம்’ என்று யோசிப்பவர்கள் கொஞ்சம் தமிழ் சினிமாக்காரர்களை ஊர்ந்து கூர்ந்து நோக்குபவர்களாயிருந்தால், தெரிந்திருக்கும் ஏதோ ஒரு வெளிநாட்டுப் படம் இத்தளத்தில் வெற்றி பெற்றிருக்கிறது என்று. அப்படி இருந்தால் தான் எல்லோரின் மூளையிலும் ஒரே நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவை Godfather படத்தின் தாக்கமோ என்று சந்தேகம் இருந்தது. (அதை ஏற்கனவே ‘சுயம்பு’ மணிரத்னம் ‘நாயகன்’ ஆக்கிவிட்டார். இந்தியில் ‘&lt;span style="font-family:Arial;"&gt;sarkar&lt;/span&gt;’ என்று வெளிவந்துவிட்டது).ஆனால் ஹாலிவுட் படங்களெல்லாம் தமிழ்ப் பேசிக் கொண்டு திரையில் வரத் தொடங்கியிருப்-பதால், அவற்றிலிருந்து... தாக்கம் (inspiration) பெற்றுப் படம் எடுப்பது தமிழ் திரையுலகிற்கு சிரமம். ஆகையால் உலக சினிமாக்களை நோக்கி இவர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Mission Impossible (ஹாலிவுட் படம்) பார்த்து ‘என் சுவாசக் காற்றே’யில் சில காட்சிகள் எடுத்தாலும் கண்டுபிடிக்க முடிந்து விடுகிற தமிழ் சினிமா ரசிகர்களால், ‘Ameros Perros-ன் (ஹாலிவுட் அல்லாத உலக சினிமா) திரைக்கதை வடிவத்தை மணிரத்னம் எடுத்துக் கொண்டு ‘ஆய்த எழுத்து’ படமெடுத்தால் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் வெற்றி! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சென்னை, பாரிமுனை டிவிடி கடைகளின் நிரந்தர வாடிக்கையாளர்கள் யாரென்று அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர்களின் பெயர் வரும். எந்தப் படம் எந்தப் படத்தின் தழுவல் என்ற ‘பட்டியல்’ அவர்களிடம் இருக்கும். மணிரத்னத்திற்குப் பிறகு, அவரைப் போலவே சினிமாவில் யாரிடமும் பணியாற்றாமல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற ‘சுயம்பு’ செல்வராகவன் வரை எந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அவர் சொந்தமாகச் ‘சிந்தித்து’ எடுத்தார் என்பது அவர்களுக்குத் தெரியும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;தெலுங்கிலிருந்து படத்தின் உரிமையை, உரிய பணம் கொடுத்து வாங்கி, படம் எடுக்கும் ஜெயம் கம்பெனியின் படங்களைவிட, நூறு ரூபாய்க்கு டிவிடி வாங்கி அப்படியே கதையை உருவி விடும் இந்தப் படைப்பாளிகள் எவ்விதத்தில் உயர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சரி, இந்தத் தொடர் வன்முறைப் படங்களுக்கு மூலம் எது? பிரேசிலில் ரியோடி ஜெனராவில் எடுக்கப்பட்ட "City of God" “இந்தக் கடவுள் தான் பல அவதாரம் எடுத்து தமிழகத்தில் இத்தனைப் படங்களாக வெளி வந்திருக்கிறார்” என்றார் அவதாரம் ஒன்றின் தயாரிப்பாளர். நாளை, பட்டியல், தலைநகரம், டான் சேரா, தூத்துக்குடி, புதுப்பேட்டை, கொக்கி... இன்னும் எண்ணிலடங்கா படங்கள் வருவதற்கு இப்படமே அடிப்படை.‘சிட்டி ஆஃப் காட்’ நகரில் வாழும் நிழல் உலக மாந்தர்கள், போதை மருந்து விற்பனையாளர்கள், அவர்களின் பல்வேறு குழுக்களிடையே நிகழும் போட்டிகள், வன்முறைகள் என்று களேபரமாக நகர்கிறது படம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சிறுவர்கள் எப்படி குழுக்களுக்குள் இணைகிறார்கள், அடுத்தடுத்த பரம்பரை எப்படி உருவாகிறது என்பதை அந்த நாட்டின் சூழலுக்குள் பொருந்தி எடுக்கப்பட்ட படம். இதைத்தான் தமிழ்நாட்டு சூழலுக்குள் பொருத்தி எடுத்திருக்கிறார்கள், இத்தனைப் படங்களிலும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவற்றிலெல்லாம் அப்படத்தின் அதிகபட்ச சாயல் அப்படியே தொனிப்பது செல்வராகவனின் ‘புதுப்பேட்டை’யில் தான். இதுவரை அவர் எடுத்த படங்களின் காட்சிகளும் நறுக்குகளும் கூட தாய்லாந்து படங்களின் சாயலில் இருப்பது இப்போது தெரிய வருகிறது. சம்சாரா, ஜான்டாரா போன்ற படங்களின் சிற்சில பதிவுகள் இவர் படங்களில் காணப்படுகிறது (இதற்குத்தான் அடிக்கடி பேங்காக் போய் வருகிறாரோ என்னவோ?)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;தழுவல் இலக்கியங்கள், மொழி பெயர்ப்புகளை எல்லாம் விரும்பி வரவேற்கும் சமூகம், ஏன் தழுவல் படங்களைப் பார்த்து நகைக்கிறது என்று யோசித்தால், திருடி வளர்த்த பிள்ளையை என் பிள்ளை என்று உரிமை கொண்டாடினால் சமூகம் நகைக்கத்தானே செய்யும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- இளையமகன்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;நன்றி: உண்மை&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://www.unmaionline.com"&gt;www.unmaionline.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35683786-116030220252604972?l=ulagacinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/116030220252604972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35683786&amp;postID=116030220252604972' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/116030220252604972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/116030220252604972'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/2006/10/blog-post.html' title='பல அவதாரமெடுத்த பன்னாட்டுக் கடவுள்'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35683786.post-116029943442708309</id><published>2006-10-08T14:36:00.000+05:30</published><updated>2006-10-16T22:30:29.173+05:30</updated><title type='text'>ஹயாத் (Hayat)</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;உ&lt;/strong&gt;லகத் திரைப்படங்களில் ஈரானிய சினிமாக்களுக்கு தனி வரவேற்பு உண்டு. கட்டுப்பாடுகளுக்குள் இருந்து கிளர்ந்தெழும் எதற்குமே ஒரு மரியாதை இருக்கும். ஈரானியப் படங்கள் கவனிக்கப்பட்டது அப்படியாகத் தானிருந்திருக்கும். கடும் தணிக்கை நடைமுறைகள் அமலில் உள்ள நாடு ஈரான். படத்தை எடுத்தபிறகு தணிக்கை என்பது நம் நாட்டுமுறை. படத்தின் திரைக்கதைப் பிரதியை &lt;span style="font-family:arial;"&gt;(script)&lt;/span&gt; தணிக்கை செய்யும் முறை ஈரானிலிருக்கிறது. இதனால் ஈரானிய இயக்குநர்கள் எடுக்கும் படங்களில் மதக் கருத்துகளுக்கு எதிராகக் கருதப் படுபவை வெளியாவதே இல்லை. எனவேதான் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் மெக்மல் பஃப் போன்றவர்கள் வெளிநாடுகளிலிருந்து செயல்படுகின்றார்கள் என்று கூறப்படுகிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;“அரசின் கட்டுப்பாடுகளையும் விளக்கெண்ணெய் ஊற்றிய கண்களையும் தாண்டி, மதத்தை நையாண்டி செய்யும் படங்களும் ஈரானில் எடுக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டும் இருக்கிறது” என்று கூறும் ‘நிழல்’ ஆசிரியர் திருநாவுக்கரசு, &lt;span style="font-family:arial;"&gt;“When I became a woman”&lt;/span&gt; என்ற படத்தை மேற்கோள் காட்டினார். “தன் தம்பியுடன் விளையாடிக் கொண்டி ருக்கும் சிறுமியைக் கண்டிக்கிறாள் தாய். ஏன் விளையாடக் கூடாது என்று சிறுமி கேட்க, பெரிய பிள்ளையாயிட்டா விளையாடக் கூடாது என்று பதில் சொல்கிறாள் தாய்.“நான் எப்போதிலிருந்து பெரிய பிள்ளை” என்று சிறுமி கேட்கும் கேள்விக்கு, ‘இன்று பகல் 12 மணியிலிருந்து நீ பெரியபிள்ளை’ என்று தாய் சொல்ல, “இப்போது மணி 10:20, இன்னும் 1 மணி 40 நிமிடங்கள் இருக்கின்றதே அதுவரை நான் விளையாடுகிறேன்” என்று சொல்கிறாள் சிறுமி.பகல் 12 மணி என்பதைப் பார்க்க கையில் குச்சியுடன், உச்சிக்கு வரும் சூரியனிலிருந்து குச்சியின் நிழால் விழாத நேரம் வரை விளை யாட விரும்பும் குழந்தையின் மூலம் மதத்தின் கட்டுப்பாட்டை எள்ளி நகையாடி இருப்பார் இயக்குநர்” என்றார் திருநாவுக்கரசு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஈரானின் தணிக்கை விதிகளின்படி, பெண்க ளின் முகம், கைகள், பாதங்கள் தவிர மற்ற பாகங்களைத் திரையில் காட்டக்கூடாது. அதே போல், காதல் காட்சிகளும் தடைசெய்யப்படு கின்றன. இவற்றால், ஈரானிய இயக்குநர்கள் குழந்தைகளை நோக்கித் தங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சென்ற ஆண்டு கோவா திரைப்பட விழாவில் ‘ஹயாத்’ என்ற ஈரானிய திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அரங்கு நிறைந்த கூட்டத்தில் திரைக்கு வெகு அருகில் தரையில் அமர்ந்து... தலை தூக்கிப் பார்க்கும் கட்டாயம். அந்த வலியையும் மறக்க வைத்தது படத்தின் விறுவிறுப்பு. விறுவிறுப்பு என்றதும், துண்டாடப்பட்ட காட்சிகளோடு வில்லனை கதாநாயகன் துரத்தும் காட்சியோ என்று எண்ணிவிடவேண்டாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஹயாத், 12 வயது நிரம்பிய பள்ளி மாணவி. ஈரானின் அழகிய கிராமம் ஒன்றில் குடும்பத்துடன் வசித்து, பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறாள். தன் பள்ளியில் நடக்கப்போகும் தேர்வுக்காகத் தன்னை ஒரு மாதமாகத் தயார்படுத்தி வருகிறாள். தேர்வுக்கு முந்தைய நாள் இரவு ஹயாத்தின் தந்தைக்கு உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட, அவர் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுகிறார். தாயும் உடன் சென்றுவிட, தனது குட்டித் தங்கையை (கைக்குழந்தை) பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஹயாத்துக்கு வருகிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;தனக்குத் தெரிந்தவர்களிடம் பிள்ளையை ஒப்படைத்துவிட்டு பள்ளிக்குச் செல்லத் துடித்தாலும், உதவும் நிலையில் யாரும் இல்லை. பால் கணக்கு சொல்ல வரும் பாட்டி, பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் தம்பி, குழந்தை, தேர்வு இத்தனை சூழல்களுக்கும் மத்தியில் ஹயாத் துடிக்கும் துடிப்பு நம்மையும் பற்றிக் கொள்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;யாரிடமும் ஒப்படைக்க முடியாத நிலையில், குழந்தையைத் தூங்க வைத்து வீட்டில் பூட்டிவிட்டு தேர்வுக்குச் செல்கிறாள் ஹயாத். வழியிலேயே ‘குழந்தைக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ’ என்ற அச்சத்தில் மீண்டும் ஓடிவந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்குச் செல்கிறாள். இதனிடையே, அக்காவுக்கு உதவுவதற்காக, பள்ளியிலிருந்து, தான் தன் கால் சட்டையில் சிறுநீர் கழித்துவிட்டதாகக் கூறி வீட்டுக்கு வரும் தம்பியின் பாசம் பிஞ்சுகளின் வெள்ளை உள்ளத்தை படம் பிடிக்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;தேர்வுக்கு இன்னும் சில நொடிகள்... இதோ தொடங்கிவிட்டது. இன்னும் ஹயாத் வரவில்லை. ஹயாத்தின் தோழிகள் அவளின் வருகையை எதிர்நோக்குகிறார்கள். குழந்தையையும் பார்த்துக் கொள்ளவேண்டும். தேர்வும் எழுதவேண்டும். ஈரானிய பெண்குழந்தைகளின் கல்விக்கு அங்கு கொடுக்கப்படவேண்டிய அவசியம் படத்தில் உணர்த்தப்படுகிறது. முதிர்ந்த பெண்கள் கல்விக்கு அலட்சியம் காட்டுவதையும், வளரும் தலைமுறை அதை முக்கியமாகக் கருதுவதையும், பால் கணக்கு பாட்டி, ஊனமுற்ற தோழி என கதாபாத்திரங்கள் காட்டுகின்றன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;தேர்வு நேரங்களில் தாமதம் ஏற்பட்டால் என்ன ஆகும் என்ற நினைப்பே பதற்றம் தருவது. தேர்வு விடுமுறைக் காலங்களில் வரும் கனவுகளில் ‘தேர்வு தாமதம்’ பற்றி யவைதான்&lt;br /&gt;அதிகமாக இருக்கும். இச்சூழலை எதிர்கொள்கிறாள் ஹயாத். தேர்வு அறைக்குப் பக்கத்தில் வாய்க்கால் அருகில் அமைந்த மரத்தில் தூளிகட்டி தொங்கவிட்டு அங்கிருந்து கயிறு இழுத்து தேர்வு அறைக்குள் தெரியாமல் நுழைத்து, சுற்றி வந்து பள்ளிக்குள் தாமதமாக நுழைந்து தேர்வெழுதத் தொடங்குகிறாள் ஹயாத்.குழந்தை அழாமல் இருக்க, தோழிகள் ஆசிரியருக்குத் தெரியாமல் கயிறைப் பிடித்து ஆட்டி தூங்க வைக்க முயல, அதையும் மீறி குழந்தை அழ, அனைவர் முகத்திலும் அதிர்ச்சி. ஹயாத்தின் ஆர்வத்தைப் பார்த்து ஆசிரியரே கயிற்றைப் பற்றிக் கொண்டு ஆட்ட, ஆனந்தம் தவழ்கிறது குழந்தை முகத்தில். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;கதை நிகழும் நேரம் ஒன்றரை மணிக்கும் அதிகம் இருக்காது. அதை சுவாரசியமாகக் கொடுத்திருப்பவர் இயக்குநர் ‘கோலம்-ரெஸா-ராமேஸானி’. தனது முந்தையை நாடகத்தைத் தழுவி இப்படத்தை இயக்கியுள்ளார் ராமேஸானி. ஹயாத்தின் பரபரப்பை நம்மீது தொற்ற வைத்தவர் திரைக்கதை ஆசிரியர் ‘மொஜ்தாபா கோஷக் தாமன்’.சிறுமி ஹயாத் வேடத்தில் நடித்திருக்கும் ‘காஸலே பர்சாஃபர்’ மிகுந்த பாராட்டுக்குரியவர். படத் தொகுப்பாளர் ‘சையத் ஷாசவாரி’ன் பங்கு இப்படத்தில் முக்கியமானது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;படம் முடிந்து வெளிவந்ததும், இந்திய குழந்தைகள் திரைப்பட இயக்கத்தின் இயக்குநரிடம் கேட்கப்பட்டது. “இப்படத்தை இந்திய மொழியில் வெளியிடுவீர்களா?” என்று. ஆனால், பார்ஸி மொழி தெரிந்திருக்க வேண்டியதில்லை இந்தப்படம் பார்க்க! மொழி புரியாமலே நாம் ‘ஹயாத்’துடன் ஒன்றி விடுகிறோம். இந்திய கிராமங்களின் சூழலுக்கும் ஈரானிய கிராமங்களின் சூழலுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. நம் நாட்டில் இத்தகைய படங்கள் வெளிவருமா? மொழிமாற்றப் படங்களால் தங்கள் வியாபாரம் பாதிப்ப தாகக் கூறும் சினிமா வயிற்றுப் பிழைப்புக்காரர்கள் இத்தகைய சினிமாக்களை மக்களுக்குத் தருவார்களா? தரும்வரை மொழி மாற்றத்திற்கான தேவை குறையாது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="font-size:85%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;- சமா.இளவரசன் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;நன்றி: உண்மை&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;www.unmaionline.com&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35683786-116029943442708309?l=ulagacinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ulagacinema.blogspot.com/feeds/116029943442708309/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35683786&amp;postID=116029943442708309' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/116029943442708309'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35683786/posts/default/116029943442708309'/><link rel='alternate' type='text/html' href='http://ulagacinema.blogspot.com/2006/10/hayat.html' title='ஹயாத் (Hayat)'/><author><name>சமா.இளவரசன்</name><uri>http://www.blogger.com/profile/00083493203704367962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry></feed>
